தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 15


ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.

பொருளடக்கம் 1-0

1-0 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக, மோசேயினிடத்தில் கொடுக்கப்பட்ட, நியாயப்பிரமாணத்தின் நீதி இயேசு கிறிஸ்துவின்  மரணத்தின்  மூலம் நிறைவேறினபடியால்: தொடர்ந்து வந்த பாவம் மரணம் ஆகியவைகள் கிருபையினால் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய இரட்சிப்பு இலவசமாக ஆரம்பமாகி, இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ சத்திய வசனங்களின் மூலம் தேவனுடைய இரட்சிப்பு கிரியைகளுக்கு முன்னேறுகிறது:-  

1-1 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக மோசேயினிடத்தில், பூமியிலிருந்துண்டான ஜென்மசுபாவ  புறம்பான மனுஷனை  சுத்திகரித்து  பூரணப்படுத்துவதற்காக; பாவத்தின் பெலனாகிய  நியாயப்பிரமாணம்  முதலாம் உடன்படிக்கையாக கொடுக்கப்பட்டது:-   

1-2 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக, மோசேயினிடத்தில் எழுதிக்கொடுத்த நியாயப்பிரமாணம், இயேசு கிறிஸ்துவின்  மரணத்தின்  மூலம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறினபடியால்: தேவனுடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் மூலம்  தேவனுடைய இரட்சிப்பு கிருபையினால் இலவசமாக வெளிப்படுகிறது:-   

1-3 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக, உன்னதத்திலிருந்துண்டான ஆவிக்குரிய உள்ளான மனுஷன்:   கிறிஸ்துவின்  நித்திய ஜீவ சத்திய வசனங்களின் மூலம் நீதியின் பெலனாகிய நீதிப்பிரமாணத்தின்  கிரியைகளினால்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, இரண்டாம்  உடன்படிக்கை கொடுக்கப்பட்டது:-

1-1 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக மோசேயினிடத்தில், பூமியிலிருந்துண்டான ஜென்மசுபாவ  புறம்பான மனுஷனை  சுத்திகரித்து  பூரணப்படுத்துவதற்காக; பாவத்தின் பெலனாகிய  நியாயப்பிரமாணம்  முதலாம் உடன்படிக்கையாக கொடுக்கப்பட்டது:- 

Rom 7:5  நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. 

Rom 7:6  இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். 

Rom 7:7  ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. 

Rom 7:8  பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே. 

Rom 7:9  முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். 

Rom 7:10  இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். 

Rom 7:11  பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. 

Rom 7:12  ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. 

Rom 7:13  இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று. 

Joh_1:17;Rom_7:1-6;Rom_7:7-13; Gal_3:19-24; Heb_9:1-6, Heb_9:7-12,  Heb_9:13-17, Heb_9:18-24,  Heb_9:25-28,  1Ti_2:1-7, Heb_8:1-6,  Heb_12:15-21;Heb_12:22-24;

1-2 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக, மோசேயினிடத்தில் எழுதிக்கொடுத்த நியாயப்பிரமாணம், இயேசு கிறிஸ்துவின்  மரணத்தின்  மூலம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறினபடியால்: தேவனுடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் மூலம்  தேவனுடைய இரட்சிப்பு கிருபையினால் இலவசமாக வெளிப்படுகிறது:-

Rom 8:1  ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 

Rom 8:2  கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 

Rom 8:3  அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

Rom 8:4  மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 

Rom 8:5  அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 

Rom 8:6  மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 

Rom 8:7  எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 

Rom 8:8  மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 

Rom 8:9  தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 

Rom 8:10  மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். 

Rom 8:11  அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 

Joh_1:17;Rom_7:1-6;Rom_7:7-13; Rom_8:1-5,Rom_8:6-11,Gal_3:19-24; Heb_9:1-6, Heb_9:7-12,  Heb_9:13-17, Heb_9:18-24,  Heb_9:25-28,  

 1Ti_2:1-7, Heb_8:1-6,  Heb_12:15-21;Heb_12:22-24;

1-3 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகிய  இயேசு கிறிஸ்துவின் மூலமாக, உன்னதத்திலிருந்துண்டான ஆவிக்குரிய உள்ளான மனுஷன்:   கிறிஸ்துவின்  நித்திய ஜீவ சத்திய வசனங்களின் மூலம் நீதியின் பெலனாகிய நீதிப்பிரமாணத்தின்  கிரியைகளினால்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, இரண்டாம்  உடன்படிக்கை கொடுக்கப்பட்டது:-

Mat 5:43  உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 

Mat 5:44  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 

Mat 5:45  இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 

Mat 5:46  உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 

Mat 5:47  உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? 

Mat 5:48  ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். 

Mat_5:21-26,Mat_5:27-30,Mat_5:31-32,Mat_5:33-37,Mat_5:38-42,Mat_5:43-48, Joh_8:1-7;Joh_8:8-11;Deu_17:6; 1Co_15:44-50,  2Co_3:6-12; 2Co_3:13-18;Heb_9:15; Mat_26:28; Mar_14:24; Luk_22:20


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries