தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 1-0

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். 

1-1 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்:- 

1-2 கிருபையினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகள்:- 

1-3 சத்தியத்தினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகள்:- 

1-4 தேவனாலே பிறந்தவர்கள்: கர்த்தருடைய சரீரத்தை இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணுகிறார்கள்:- 

1-5 தேவனுடைய வார்த்தைகளினால் மாம்சமாக மாறினவர்கள்: மாம்சமாக மாறின, இருதயமாகிய பலிபீடத்திலிருந்து; தேவனுடைய வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்:- 

1-6 கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்:- 

1-1 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். ( Pro_16:6,) 

தேவனுடைய வார்த்தைகள் மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் :- 

தேவனுடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய், தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். தேவனுடைய வார்த்தையின் ஜீவன்: மனுஷருக்கு ஒளியாயிருந்து, இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 

தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். தேவனுடைய வார்த்தைகள் மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 

Joh_1:1-5, Joh_1:12-14,Joh_3:3-8 , 1Jo_5:1, 1Jo_5:18,1Jo_2:29, 1Jo_3:9, 1Jo_4:7, 1Jo_5:4, 

Psa 85:7 கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 

Psa 85:8 கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. 

Psa 85:9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 

Psa 85:10 கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். 

Psa 85:11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். 

Psa 85:12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். 

Psa 85:13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். 

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது 

Joh_1:14-18, Gen_32:10, Gen_24:49, Exo_34:6-7, 2Sa_2:6, Psa_25:10,Psa_26:3, Psa_40:10-11 , Psa_57:3, Psa_57:10, Psa_61:7, Psa_69:13,Psa_85:7-13,Psa_86:15,Psa_89:14-19,Psa_138:2,Psa_115:1, Psa_108:4,Psa_111:7, Pro_3:3, Pro_14:22,Pro_16:6, Pro_20:28,Isa_16:5, Hos_4:1,Mic_7:20, Jos_2:14, 

1-2 கிருபையினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகள்:- 

நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்: தமது இரக்கத்தின்படியே, முதலாம் ஆதாம் முதல் மோசே வரைக்கும், முதலாம் ஆதாமின் மீறுதலுக் கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டிருந்த மரணத்திலிருந்தும்: 

மோசே முதல் கிறிஸ்துவின் முதலாம் வருகை வரைக்கும், வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்திதின்கீழ் அடைத்துப்போட்டிருந்ததை விடுதலையாக்கும்படி, மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

ஆகையால் கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்: என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கி, நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 

முதலாம் ஆதாம் முதல் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து வரைக்கும், சுமார் அறுபத்திரெண்டு தலைமுறைகள்/நாண்கு ஆயிரம் வருடங்கள்/ஒரு மனிதன் தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாவம்/ மரணம்/சாபங்கள், 

ஆகியவைகள் மனிதனின் மேல் இருந்த கடன்கள் இந்த கடன்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே கிருபையினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளின் மூலம் நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றி தேவன் நம்மை இரட்சித்தார் 

Eph 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; 

Eph 2:9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 

Eph 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 

Eph 2:11 ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், 

Eph 2:12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். 

Eph 2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 

Eph 2:14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 

Eph 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 

Eph 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 

Eph 2:17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். 

Eph 2:18 அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். 

Eph 2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, 

Eph 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 

Eph 2:21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; 

Eph 2:22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள். 

Rom 8:1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 

Rom 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 

Rom 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

Rom 8:4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 

Eph_2:1-7 , Eph_2:8-13 , Eph_2:14-22 ,Rom_5:1-2,Rom_3:25-28,Rom_4:5-10,Rom_4:11-16, Rom_3:26-31,Rom_6:14-17 ,Gal_2:15-20, Rom_11:1-6, 2Co_8:9, Eph_1:6-7 , 2Ti_1:9,Heb_4:12-16 ,Heb_12:27-28,Jam_4:5-9 ,Rom_5:19-21, Rom_9:11-18, Act_15:11, Tit_3:4-8, 

1-3 சத்தியத்தினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகள்:- 

ஒரு மனிதன் தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் வரை, தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாவம்/ மரணம்/சாபங்கள்,ஆகியவைகள் மனிதனின் மேல் இருந்த கடன்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி; நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே தேவன் நம்மை இரட்சித்தார். 

ஆகையால் தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்/ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை தங்களுடைய மனதிலே பெற்றுக்கொண்டவர்கள்: அவைகளுக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை தங்கள் அவயவங்களில் இருக்கிறதை உணர்ந்து கொண்டு; அது தங்களுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு தங்களை சிறையாக்கிக் கொள்ளுகிறபோது;( Rom 7:23 Rom 8:1-4 ) 

தேவனே மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

அதுபோல மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று; 

தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனையாகவும்/பலியாகவும்/ காணிக்கையாகவும் தேவன் அங்கிகரிக்கிறார். 

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். Rom 12:1-2 

தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்/ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை தங்களுடைய மனதிலே பெற்றுக்கொண்டவர்கள்: நன்மைசெய்தால் மேன்மை உண்டு, நன்மைசெய்யாதிருந்தால் அவனுடைய பாவம், பலி மிருகமாக அவனுடைய இருதய வாசற்படியிலே படுத்திருக்கும்; 

அவனுடைய பாவத்தை/பாவ மிருகமாகிய மாம்சத்தை/ஜென்ம பாவ மனிதனை/ அவனுடைய பாவ சரீரத்தை அவனுடைய பாவத்தைப் போக்கும் பலியாக செலுத்தி, அவனுடைய பாவ மாம்சத்திலே அவனே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதின் மூலம்: 

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளை பின்ப்பற்றி, நியாயப்பிரமாணத்தின் நீதியை மனிதனே நிறைவேற்றுகிறபடியால் தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறான். 

மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறின பின்பு / இருதய வாசற்படியில் படுத்திருக்கும் ஜென்ம பாவ மனிதனை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த பின்பு/ 

தீமையை நன்மையாக மாற்றிய பின்பு/ நியாயப்பிரமாணத்தின் நீதிக்கு விரோதமாக வருகிற பாவங்கள் நிவிர்த்தியான பின்பு; நன்மையாகிய தேவனுடைய சத்திய வசனங்களின் பிரமாணங்களை நிறைவேற்றுகிறபோது: சத்தியத்திற்கு விரோதமாக வருகிற பாவங்கள் தேவனுடைய நியாத்தீர்ப்பினால் நிவிர்த்தியாகிறது. 

நியாயப்பிரமாணத்தின் நீதிக்கு விரோதமாக வருகிற பாவங்களை நிவிர்த்தி செய்யாமல், நன்மையாகிய தேவனுடைய சத்திய வசனங்களின் பிரமாணங்களை நிறைவேற்றுகிறபோது; சத்தியத்திற்கு விரோதமாக வருகிற பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது, மேலும் தேவனுடைய சத்தியத்தின் வசனங்கள் தேவன் அனுப்பின நியாத்தீர்ப்பை நிறைவேற்றும். 

ஒருவனுடைய பாவ சரீரத்தை, அவனுடைய பாவத்தைப் போக்கும் பலியாக செலுத்தி அவனுடைய பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் இருக்கிறபோது; அவனுடைய இருதய வாசற்படியில் படுத்திருக்கும் அந்த பாவமிருகம், அவனுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்து, அவனை அடிமைப்படுத்தி, அவனை ஆட்சி செய்யும். 

ஒருவன் பாவத்தை பலிசெலுத்தினால், அவன் பாவத்தை அவனே அடிமைப்படுத்தி அவனே பாவத்தை ஆட்சி செய்ய முடியும். அவன் பாவத்தை பலிசெலுத்தாமல் இருக்கிறபோது, பாவ மிருகம் அவனுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்து, அவனை அடிமைப்படுத்தி ,அவனை ஆட்சி செய்யும். 

Gen 4:6 And Jehovah saith unto Cain, `Why hast thou displeasure? and why hath thy countenance fallen? 

Gen 4:7 Is there not, if thou dost well, acceptance? and if thou dost not well, at the opening a sin-offering is crouching, and unto thee its desire, and thou rulest over it.' 

Gen 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 

Gen 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். 

Php 3:9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், 

Php 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், 

Php 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். 

Php 3:12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். 

Php 3:13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 

Php 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். 

Php 3:15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 

Rom_8:1-4;1Pe_3:16-21, 1Pe_4:1-6, 1Pe_2:19-25, 1Pe_4:16-19, Phi_3:9-14;Isa_26:1-9; Col_1:5-6,Tit_1:1-4, Heb_6:13-20, Heb_10:19-22, Heb_9:8-15, Heb_13:9-13; Rom_2:10-15, Gal_2:20-21,Gal_5:1-6,Gal_6:12-18;Col_2:11-14 Gal_5:14-18, Gal_5:19-26, Rom_6:1-8, Rom_6:9-13, Col_2:13-19, Col_2:20-25, Col_3:3-4, 

1-4 தேவனாலே பிறந்தவர்கள்: கர்த்தருடைய சரீரத்தை இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணுகிறார்கள்:- 

தேவனுடைய வார்த்தையினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்கள், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அதிகாரங்களை சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக; தேவனுடைய புதிய உடன்படிக்கையின்படி, முதலாங்கூடாரமாகிய தங்களுடைய பாவ சரீரத்தை, பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறபோது: தங்களுடைய இரண்டாந் திரைக்குள்ளே இருக்கிற கல்லான இருதயம், தேவனுடைய மாம்சமான இருதயமாக மறுரூபமடைந்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிறதின் மூலம் புத்தியுள்ள ஆராதனை நடைபெறுகிறது. 

இவர்கள், இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரத்திலிருக்கிற மாம்சமான இருதயமாகிய தேவனுடைய பலிபீடத்தில், ஆவி,ஆத்துமா,சரீரத்தில் ஐக்கியமாயிருந்து; தேவனுடைய வார்த்தைகளின் உயிர்த்தெழுதளை நினைவுகூரும்படி, கர்த்தருடைய சரீரமாகிய வார்த்தைகளையும் இரத்தமாகிய நியாத்தீர்ப்பையும் இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணுகிறார்கள். 

இவர்கள்,கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களோடு ஐக்கியமாயிருந்து; இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து: தங்களுக்கு தேவன் பகிர்ந்து கொடுத்த, ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள். 

Luk_22:19-20,Joh_6:48-52, Joh_6:53-58,1Co_5:7-8;1Co_10:15-18; 1Co_11:23-26, Heb_9:8-10, Heb_13:9-13; Rom_12:1-2, 

1-5 தேவனுடைய வார்த்தைகளினால் மாம்சமாக மாறினவர்கள்: மாம்சமாக மாறின, இருதயமாகிய பலிபீடத்திலிருந்து; தேவனுடைய வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்:- 

இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரத்திலிருக்கிற மாம்சமான இருதயமாகிய தேவனுடைய பலிபீடத்தில், ஆவி,ஆத்துமா,சரீரத்தில் ஐக்கியமாயிருந்து; தேவனுடைய வார்த்தைகளின் உயிர்த்தெழுதளை நினைவுகூரும்படி புசித்த , கர்த்தருடைய சரீரமாகிய வார்த்தைகளையும், இரத்தமாகிய நியாத்தீர்ப்பையும், கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள்; அந்த வார்த்தைகளில் உள்ள ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்து, இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 

Psa_40:8; Jer_31:33; Eze_11:19, Eze_36:25-27; Heb_8:10, Heb_10:16, Joh_14:10-17, Joh_14:18-25, Joh_15:1-8, Joh_15:9-15,Joh_15:16-21; Joh_15:22-27; Joh_17:14-20, Joh_17:21-26; 

1-6 கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்:- 

தேவனுடைய கிருபையினால், பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளின் மூலம் இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றி; தேவன் மனிதனுக்கு இலவசமாக இரட்சிப்பை கொடுக்கிற காரியத்தையும், 

தேவனுடைய சத்தியத்தினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளை மனிதன் பின்ப்பற்றி; சத்தியத்தின் நீதியை மனிதனே நிறைவேற்றுகிறபடியால் மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறான், என்கிற இந்த காரியத்தையும் அறிந்து உணர்ந்து கொள்ளாதவர்கள்; 

தங்களுடைய மனச்சாட்சியில் அவர்களுடைய சிந்தனைகள் குற்றமுண்டு குற்றமில்லையென்று சாட்சியிட்டு, ஒன்றையொன்று தீர்க்கிறதினால், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று உணர்ந்து கொள்ளுகிறபோது கர்த்தருக்குப் பயந்து மனுஷர் தீமையை விட்டு விலகுகிறதினால் அதற்கேற்றபடியுள்ள ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்:- 

Rom 2:13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 

Rom 2:14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 

Rom 2:15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 

Exo_20:1-11, Exo_20:12-20, 2Sa_23:3,2Ch_19:9-10,Neh_5:9, Job_4:6,Job_28:28, Psa_2:11, Psa_90:11 ,Psa_111:10, Pro_1:7, Pro_1:24-29,Pro_2:1-5, Pro_8:13,Pro_10:27, Pro_14:26-27 ,Pro_15:16, Pro_15:33, Pro_16:6, Pro_19:23, Pro_22:4, Pro_23:17,Isa_29:13, Isa_33:6, Jer_32:36-41, Act_9:31, Rom_3:17-18 , Rom_13:7 , 1Co_2:3,2Co_5:11, 2Co_7:1, 2Co_7:11, 2Co_7:15, Eph_5:21, Eph_6:5, Phi_2:12, 1Ti_5:20, 1Pe_2:17-18 , 1Pe_3:1-2, 1Pe_3:15, Jud_1:20-23, Rev_11:11-13,

Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries