தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 19


கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 7-0

7-0-0 கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் ஏழாம் தலைப்பு பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-

கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்களுக்கு  பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம்.

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி,    மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய, கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்கள்; மீண்டும் ஆவியினால் மறுபடியும் பிறக்கிறபோது, தங்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய  பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் மூலம் பரலோக இராஜ்ஜியத்தை திறக்கிறவர்கள் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்களை புசிக்கிறார்கள்.

7-1-0 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  காண்பதற்கு முதலாவது திறவுகோல்;  ஒருவன் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால்  மறுபடியும் பிறப்பது:-

ஜலமாகிய தேவனுடைய வார்த்தைகளினால்  ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்/ தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை  மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறவர்களுக்கு ஆவிக்குரிய கண் பார்வை கிடைக்கிறது;

தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று , யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் பார்க்க முடியும். Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, Mar_9:1, Luk_9:24-27 ,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பால்:-. 1Pe_2:2-3,  Heb_6:1-2, Heb_5:12-14,

1-0 செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல் /

ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனந்திரும்புதல்

2-0 தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்/ இயேசு, கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிசேஷம்

3-0 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்/ ஞானஸ்தானங்களுடைய உபதேசம்

4-0 கைகளை வைக்குதல்/ ஊழியர் அழைப்பின்  அளவுப் பிரமாணம்

5-0 மரித்தோரின் உயிர்த்தெழுதல் தெழுதல்/ இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

6-0 தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு

7-0 தேவனுடைய  நீதியின் வார்த்தைகள்/ தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் 

8-0 தேவனுடைய  நீதியின் வார்த்தைகளின் ஊழியத்தில் பங்கு பெறுதல்

7-2-0 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  கண்டவர்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசிப்பதற்கு இரண்டாவது திறவுகோல்; ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது :-

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைந்து  தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து  பிழைக்கிறது.

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைகிறது.

இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய மனிதனின்  ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; அவன் பரிசுத்த ஆவியினால்  மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது.  Joh_3:3-5, Heb_5:12-14, Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5,

தேவனுடைய  வார்த்தைகளை பரிசுத்த ஆவியினால் சித்தித்து, தியானிக்கும்போது; தங்களுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து  பிழைக்கிறது. கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களின் அறிவை ஒருவர் தொடர்ந்த பயிற்சியினால் அடைந்து, நீதியின் வசனத்திற்கு வந்துசேரும்போது கிறிஸ்துவின் பூரண அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

7-3-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்கள்;  மீண்டும் ஆவியினால் மறுபடியும் பிறக்கிறபோது, தங்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து, வளர்ச்சியடைய;  கிறிஸ்துவின் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து முன்னேறி செல்லுவதற்கு  தேவனால் மூன்று படிகளின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று படிகளின் அடையாளங்களிள் கொடுக்கப்பட்டுள்ள தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து உணர்ந்து கொண்டு, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய முடியாமல் இடறி விழுகிறவர்கள் எல்லாரையும்; வேதம் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தின் கீழ், காவலில் வைத்திருக்கிறது. . Rom_8:19-23, 2Co_5:1-10, Isa_28:14-15, Isa_5:18-25, Isa_8:5-15Isa_7:1-9, Isa_30:27-28,

 

7-3-1. இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார்

7-3-2. எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும்

7-3-3. மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீரும் வேகமாக ஓடுகிற ஆற்று நீரைப்போல  அசிரீயாவின் தண்ணீரும்.

இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடிப்பதின் மூலம் தீமையை வெறுத்து, நன்மையை தெரிந்து கொள்ளும் பகுத்தறிவை ஒருவன் பெற்றுக் கொள்கிறான். இவைகளை தொடர்ந்த பயிற்சியின் மூலம் தன்னுடைய அன்றாட வாழ்க்கையின் காரண காரியங்களுக்கேற்றபடி நடை முறைப்படுத்தும்போது; பகுத்தறிவின் பூரண வயதை பெற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனத்தை புசிக்க முன்னேறுகிறான்.

7-3-1 இம்மானுவேல்  - தேவன் எங்களுடன் இருக்கிறார். Amo_5:14, Isa_7:10-16, Isa_7:21-22, Isa_8:8, Hag_1:13, Hag_2:4-5, Joe_2:27, Zec_2:10-11, Zec_8:23, Zec_10:3-5, Isa_45:14, Zep_3:14-17, Rev_21:3,

1 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல நன்மையைத் தேடுங்கள் அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார் Amo_5:14

2 பாலகன் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் வெண்ணையையும் தேனையும் பரிபூரணமாக சாப்பிடுவான்:-

கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த குழந்தை வளரும்படி தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிடைக்கும் நித் திய ஜீவ வார்த்தைகளை நல்ல உணவாக பரிபூரணமாக சாப்பிடு வான்.

3 ஒரு பசு இரண்டு ஆடுகள் லேவி ஆசாரியத்துவத்தின் முறை :-

ஒருவன் ஒரு இளம் பசுவையும் இரண்டு ஆட்டுக்குட்டி களையும் வளர்த்தால் அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் பரிபூரணமாக கிடைக்கும். «. Isa_7:21-22, Exo_29:1, Rom_12:1-2, Rom_8:3-4,

4 ஒருவன் தன்னுடைய சரீரம், ஆவி, ஆத்துமா, இவை களை தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து வளர்க்கும்போது, அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் தன்னுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் நித்திய ஜீவ வார்த் தைகளாக சுரந்து ஆவிக்குரிய நல்ல உணவு பரிபூரணமாக கிடைக் கிறது. . 1Pe_3:18,

5 இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீத்திரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி ஞானம் இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற் றுக்கொள்ளுகிறது. Heb_9:8-16, Heb_13:9-15,

6 ஒரு பசு, ஏழு ஆடுகள், ஜாதிகளுடைய ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை முறை :-

இயேசு கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்தார், நான் சபையினுடைய ஏழு உபதேசங்களை விசுவாசித்து அவைகளை ஏற்றுக்கொண்டு என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். 2Ch_13:9, 2Ki_16:9-11, 2Ki_16:15-16, 2Ki_17:27-28, 2Ki_17:32,

7-3-2 ஈக்களின்  / மாயையின் வெளிப்பாடுகளும் தேனீக் களின் காரண காரியத்திற்கேற்ற கருத்துக் கோட்பாடுகளின் வெளிப் பாடுகளும்

1 எகிப்திலிருந்து ஈக்களைப்போல  / மாயையின் தத்துவ சாஸ்திரங்களிலிருந்து அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப் படுகிறது. அவைகளை ஒன்று திரட்டும்போது நல்ல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக  மாறுவதில்லை / உருவாக்க முடிவதில்லை. Isa_7:17-19,

2 அசீரியாவிலிருந்து தேனீக்களைப்போல காரண காரி யத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளின் கோட் பாடுகள் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட தேனீக்களைப்போல பல அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளை பல இடங்களிலிருந்து ஒன்று திரட்டும்போது அவைகள் நல்ல சுவையான தேன் கூட்டி லிருந்து ஒழுகும் தெளிந்த தேன் போல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக இணைக்கப்படுகிறது / உருவாக் கப்படுகிறது.

3 தெளிந்த தேன் போன்ற சுவையான அர்த்தமுள்ள வார்த்தைகளை நன்மைகளாக தெரிந்து கொண்டு சுவையில்லாத, அர்த்தமில்லாத வார்த்தைகளை தீமைகளாக வெறுத்து தள்ளிவிட வேண்டும்.

4 நல்ல தெளிந்த சுவையான வார்த்தைகளையுடைய நன்மைகளுடன், அர்த்தமில்லாத வார்த்தைகளையுடைய தீமைகளை யும், நம்முடைய அறிவில் கலந்து வைத்திருக்கும்போது நாம் ஏற்கனவே தேனீக்களைப்போல கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கிற தெளிந்த சுவையுள்ள நன்மையான வார்த்தைகளின் முழுக் கட்டமைப்பையும், அர்த்தமில்லாத தீமையான வார்த்தைகளாக மாற்றி வெறுமையாக்கி விழுங்கி விடும் ;

அல்லது மாயா / மாயையின் வெளிப்பாடுகள் நல்ல சுவையான தெளிந்த கருத்துக்களை உட்கொண்டு அவைகளை ஒழுங்கின்னையும் வெறுமையுமாக மாற்றி விடும். உதாரணமாக நம்முடைய நற்கிரியைகளுடன் சிறிதளவு தீமையான கிரியைகள் கலந்திருக்கும்போது அந்த முழு நற்கிரியைகளின் பயனையும் தீமையான செயலாகவே வெளிப்படுத்திக் காட்டுகிறது.

தீமையை வெறுத்து நம்மையை தெரிந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் சுவையில்லாத அர்த்தமில்லாத வார்த்தைகளும் சுவையுள்ள அர்த்தமுள்ள வார்த்தைகளும் கலந்து தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது.

5 வனாந்தரங்களின் பள்ளத்தாக்கு :- Isa_7:19

தேவ வார்த்கைளிலிருந்து இதுவரை வெளிப்படாத இரகசியங்கள்.

6 கன்மலைகளின் வெடிப்புகள் :- Isa_7:19,

வேத வார்த்தைகளிலிருந்து இயேசு கிறிஸ்துவரைப் பற்றிய புதிய வெளிப் பாடுகள்.

7 முட்காடுகள் :- :- Isa_7:19, தேவ வார்த்தைகளிலிருந்து ஜென்ம கரும பாவங்களின் பிரமாணங்கள்       

8 மேய்ச்சலுள்ள இடங்கள் :- Isa_7:19 

தேவ வார்த் தைகளிலிருந்து ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களை மீண்டும் பசுமையாக தோன்றும் படி வெளிப்படுத்தப்பட்ட புதிய வெளிப்பாடுகள்.

7-3-3  இஸ்ரவேலர் அசட்டை பண்ணுகிற மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத்தண்ணீரும், அவர்கள் சந்தோஷித்து களி கூருகிற வல்லமையுள்ள திரளான / வேகமான அசீரியாவின் ஆற்றுத் தண்ணீரும்.

1 இஸ்ரவேல் ஜனங்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத் தண்ணீரை அசட்டை பண்ணினார்கள் :-

இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து தேவ வசனத்தை படித்து அவைகளை சிந்தித்து தியானித்து அதன் மூலம் தேவனுடைய மிருதுவான ஆலோசனையை கேட்டு, தங்கள் ஆவிக்குரிய காரியங்களில் ஜீவனோடிருந்து வளர்வதை வெறுத்து அசட்டை பன்னினார்கள். Jos_18:1, Jos_18:8-10, Jos_19:51Jos_22:121Sa_1:31Sa_1:24, 1Sa_3:21,    1Ki_2:27Psa_78:60, Jer_7:12, Jer_7:14, Jer_26:6, Jer_26:9, Jer_41:5,  Neh_3:15

2 இஸ்ரவேல் ஜனங்கள் வல்லமையுள்ள திரளான ஆற்றுத்தண்ணீரைக் குறித்து  சந்தோஷித்து களிகூருகிறார்கள் :-

இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் இராஜாக்களுடைய இராஜரீகத்தையும் அதன் சகல ஆடம்பரங்களையும் குறித்து சந்தோஷித்து களிகூருகிறார்கள். எனவே தேவன் அவர்கள் விருப்பத்திற் கேற்றபடி அவர்கள் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ளும்படி கீழே குறிப்பிட்ட தலைப்புகளில் புற ஜாதிகளின் அரசாட்சி முறைகளும் அதன் பதவிகளின் ஆடம்பரத் தையும் அவர்களின் தரிசன வெளிப்பாடுகளாக தேவன் இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுக்கிறார்.

3 ஓடைகளெல்லாம் வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீர் :- Isa_8:7,

புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் தேவன் வெளிப் படுத்துகிறார்.

4 தண்ணீர் செல்லும் எல்லா வாய்க்காலின் கரைகளின் மேலும் ஆற்றுத்தண்ணீர் புரண்டு செல்லுதல்:-

புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் ஏற்கனவே பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் எல்லைகளை கடந்து, தேவன் தங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வெளிபாடுகள், மற்ற வற்றை விட மிக புதியதும் மேலானதுமானவைகளாக வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது.

5 ஆற்றுத் தண்ணீர் யூதேயா தேசத்திற்குள்ளே புகுந்து  பிரவாகித்து கடந்து செல்லுதல் :- Isa_8:8,

புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும் யூதருடைய முறைகளுடன் கலந்து வெளிப் படும்போது மிக வல்லமையுள்ளதாகவும் மிக திரளான வெளிப் பாடகவும் காணப்படுகிறது.

6 வல்லமையுள்ள ஆற்றுத் தண்ணீர் இஸ்ரவேலரின் கழுத்து மட்டும் பொங்கி திரளாக வெளிப்படுதல் :-

யூதருடைய முறைகளுடன் கலந்த புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும், தங்களுக்கு போதும் என்கிற அளவிற்கு மிக திரளாகவும் நல்ல திருப்தியாகவும் தங்கள் அறிவுக்கேற்றபடி தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது. இஸ்ரவேல் தாங்கள் விரும்பினபடியே வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீரைப் போல ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையும் குறித்த வெளிப் பாடுகளை மிக திரளாக பெற்றபடியால், தேவன் எங்களோடிருக்கிறார் என்று தாங்கள் சொல்லிக்கொண்டு; மற்றவர்களையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட வார்த்தைகளை கொண்டு அழைக்கிறார்கள்.

7 ஜனங்களே நீங்கள் கூட்டங்கூடுங்கள் முறியடிக் கப்படுவீர்கள் :- .Isa_8:9,

ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாடுகள் இல்லாமல் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தின் படி கூடி வரும்போது மற்றவர்கள் உங்களை மேற்கொண்டு சிதறடிப்பார்கள்.

8 தூரத்தேசத்தராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள் :- :- Isa_8:9

தேவனை விட்டு பின்வாங்குகிற நீங்கள் எல்லாரும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையையும் ஏற்றுக்கொண்டு அவைகளை சுதந்தரித்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

9 இடைகட்டிக் கொள்ளுங்கள் முறிந்தோடுவீர்கள்:- Isa_8:9,

உங்களுடைய விசுவாசங்களையும் அதன் வெளிப்பாடு களையும் கொண்டு நீங்கள் உங்களுடைய கட்டமைப்பை பெலப் படுத்திக்கொள்ளுங்கள், ஆனாலும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாட்டிற்கு முன்பாக நீங்கள் எதிர்த்து நிற்க முடியாமல் முறித்தோடுவீர்கள் ஏனென்றால் தேவன் எங்களுடன் இருக்கிறார்.

10 ஆலோசனை செய்யுங்கள் அது அபத்தமாகும்:- - Isa_8:10,

தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு விரோதமாக நீங்கள் ஆலோசனை செய்யுங்கள் அவைகள் பொய்யாக மாறும்

11 வார்த்தையை வசனியுங்கள் அது நிற்காது தேவன் எங்களுடன் இருக்கிறார் :-

தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு இணையாகவோ அல்லது எதிராகவோ நீங்கள் வார்த்தையை பேசுங்கள் அது நிலை நிற்காது காரணம் தேவன் எங்களோடிருக்கிறார். நாங்கள் மட்டும் இந்த வெளிப்பாடுகளை பெற்றிருக்கிறோம், ஆகவே எங்களால் மட்டும் இதன் வார்த்தைகளை தெளிவாக பேசமுடியும்.

 


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries