தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 19


கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 8-0

8-0-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்களுடைய  ஊழியத்தில், பங்கு பெறுகிறவர்களூக்கு   கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ னுடைய நீதியின் பிரமாணங்கள்:-

கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் எட்டாவது  தலைப்பு பலமான ஆகாரமாகிய நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Heb_5:12-14, Heb_6:1-2 Rom_10:6-10 Deu_30:11-16, Isa_28:9, Psa_8:2, Isa_3:4-5, Psa_131:2, Mat_11:25, Mat_21:16,   Luk_10:21, 1Co_13:11, 1Co_3:1-2, Gal_4:19-31, Gen_21:1-12,

8-1-0 கீழே விவரிக்கப்பட்டுள்ள தேவனுடைய  வார்த்தைகளை பரிசுத்த ஆவியினால் சித்தித்து, தியானிக்கும்போது; தங்களுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து  பிழைக்கிறது.

8-1-1  நியாயப்பிரமாணம், தீர்க்க தரிசனங்கள், பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17

8-1-2 தேவனுடைய இராஜ்ஜியத்தின் உவமைகளில் சுரமண்டலத்தின் ஏழு  சுரங்களைப் போல வெளிப்படுகிற (1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள் 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7. பிரமாணங்கள்) ஆகிய ஏழு  தேவனுடைய வார்த்தைகள் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10

8-1-3  வேதம், கிறிஸ்துவின் சாட்சி ஆகமம் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35Rev_1:2, Rev_1:9, Rev_6:9Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4

8-1-4 நித்திய ஜீவ வார்த்தைகள் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது   Joh_5:39; Mat_22:29; Luk_24:44-47; Joh_6:27, Joh_6:40, Joh_6:63,

8-1-5 வேதத்தில் திருட்டாந்தமாக/உதாரணமாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது  1Co_10:11, Heb_4:10-11,

8-1-6 வேதத்தில் நிழலாட்டமாக/ ஞான அர்த்தமுள்ளவைகளாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Heb_10:1, Heb_8:5, Heb_9:23, Gal_4:24, Rev_11:8,

8-1-7 வேதத்தில் தீர்க்க தரிசனங்களாக  எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது    2Pe_1:20-21, 2Ti_3:16; 1Pe_1:11, Rev_19:10

8-1-8 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசித்து,   தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல்:-

இயேசு கிறிஸ்து, இராஜாவாக முடிசூடப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக புசித்து,  தேவனுடைய  இராஜ்ஜியத்தினுடைய ஆட்சியின்  பதவிகளை பரிசாகப்பெற்று, அல்லேலூயா என்று கெம்பீர சத்தத்தோடு ஆரவாரம் செய்து தேவனை மகிமைப்படுத்துகிறார்கள்.

இவர்கள் பரிசுத்த ஆவியின்  உடன்படிக்கையில் நிலைத்திருந்து முன்னேறும்போது அவர்கள் பரலோக இராஜ்ஜியத்தில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவனுடைய சித்தத்தையும் அதன் விசுவாச அளவுப் பிரமாணத்தையும் அறிந்து கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல் Rev_19:1-9  Mat_13:10-15, Rev_3:20-22

8-1-9 தேவனுடைய நீதியின் கிரியைகள்இல்லாமல் கண்சொருகிப்போன குருடர்கள்:-

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி   மறுபடி பிறந்தும், பரிசுத்த ஆவியினால்  மறுபடி பிறந்தும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்கிறவர்களுக்கு தேவ நீதியின்படி நற்கிரியைகள் இல்லாதபோது; தேவனுடைய இராஜ்ஜியத் தின் தரிசனங்களை இழந்து மீண்டும் ஆவிக்குரிய குருடர்களாக மாறுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் வழிகளை  காட்டும்போது, குருடனுக்கு வழி காட்டுகிற குருடனாக இருக்கிறார்கள் 2Pe_1:4-11, 2Pe_2:20-22; Heb_6:4-8; Heb_10:26-31  Mat_22:8-14,Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12,

8-2-0  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம் மூலம் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை  பஸ்கா விருந்தாக புசிக்கிறவர்கள், கர்த்தர் வருமளவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை  நினைவுகூர்ந்து தங்களுடைய ஆவி,ஆத்துமாவின்  உயிர்தெழுதலை  தெரிவிக்கிறார்கள்.

1Co 5:6  நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?

1Co 5:7  ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.

1Co 5:8  ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

Joh 6:53  அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Joh 6:54  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

Joh 6:55  என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

Joh 6:56  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

Joh 6:57  ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

Joh 6:58  வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

Mat_26:26-32Luk_22:13-20;1Co_5:7-8; 1Co_11:23-25; 1Co_10:15-20, 1Co_10:21-24, Joh_6:53-58;

8-3-0 கிறிஸ்துவின்  முதலாம்  வருகையில்  தேவனுடைய  இரட்சிப்பு நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை  பஸ்கா விருந்தாக புசிக்கிற, ஆவிக்குரிய  யூதர்கள் மூலமாக வெளிப்படுகிறது :-

8-3-1 யூதா கோத்திரத்தின் சிங்கமான இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த படியால் இரட்சிப்பின் அதிபதியாக வெளிப்படுகிறார். . Rev_5:1-7, Heb_2:9-13, Act_5:27-32Gen_49:8-12Num_23:19-24, Num_24:16-19, Mic_5:8-9,

8-3-2 இஸ்ரவேலருக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் ஓய்வு நாளின் பிரமாணங்கள்.

தேவனுடைய ஒரு நாள் மனிதனுக்கு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஆறு நாள் மனிதனுக்கு ஆறு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஏழாவது நாள் மனிதனுக்கு ஏழாவது ஆயிரம் வருடங்கள்.  2Pe_3:8, Psa_90:4, Heb_3:7-19, Heb_4:1-10, Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11, Isa_56:1-8,

ஆதாம் முதல் இன்று வரை மனித சரித்திரத்தில் ஆறு ஆயிரம் வருடங்கள் முடிந்து ஏழாவது ஆயிரம் வருடங்கள் ஆரம்பமாகி தொடர்கிறது Ecc_8:5-6, Hos_6:1-3, Joh_12:32-33,

கீழே குறிப்பிட்ட தலைப்புகள் ஆயிரம் வருடங்களின் சம்பங் வங்களாக ஆயிரம் தலைமுறைகளுக்குள்ளே ஒரு தலைமுறையான இந்த தலைமுறையில் நடைபெறுகிறது

  1. ஓய்வு நாள் Act_2:15-21, Joe_2:28,
  2. பின்மாரியின் மழைக்காலம் Mal_4:1-6, Zec_10:1,
  3. உபத்திரவகாலம்/ மகா உபத்திரவகாலம் Dan_12:1-13, Mat_24:14-22,
  4. நீதியை சரிகட்டும் நாட்கள் Mar_13:8-13, Luk_21:20-28,
  5. அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிற நாட்கள் Dan_7:13-28, Oba_1:17-21,
  6. தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பின் நாள் 1Pe_4:16-17,
  7. ஆயிரம் ஆண்டுகளின் ஆட்சியின் காலம் Rev_15:2,
  8. தேவனுடைய இராஜ்ஜியத்தின் காலம் Rev_20:4-6,
  1. ஓய்வு நாளில் சாதரண வேலை ஒன்றும் செய்ய வேண்டாம்

 Exo_31:13-17, Exo_35:2, Deu_5:12-15,

  1. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட வேண்டாம்

Exo_35:1-3, Lev_26:26, Hos_7:4-8, Isa_50:10-11,

  1. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட விறகு பொறுக்க வேண்டாம்:-

ஓய்வு நாளில் / தேவனுடைய  இராஜ்ஜியத்தில் பரிசுத்த வேதாகம புஸ்தகத்திலிருந்து விருப்பமான / ஆசீர்வாதமான வசனங்களைப் பொருக்கி எடுத்து அவைகளினால் தங்களுக்கு ஆவிக்குரிய அப்பங்களை சுட வேண்டாம் மேலும் தங்களுக்கு ஆவிக்குரிய வெளிச்சம் / எழுப்புதல்களை உண்டாக்குவதற்க்காக கீழே குறிப்பிட்ட கர்த்தருடைய பிரமாணங்களில் மனிதனுடைய கற்பனைகளை இணைக்க வேண்டாம். Num_15:32-36, Jer_7:17-20, Jer_44:16-19,

  1. கர்த்தருடைய வேதம்
  2. கர்த்தருடைய வழிகள்
  3. கர்த்தருடைய நியாயங்கள்
  4. கர்த்தருடைய சாட்சிகள்
  5. கர்த்தருடைய கட்டளைகள்
  6. கர்த்தருடைய கற்பனைகள்
  7. கர்த்தருடைய பிரமாணங்கள்
  8. கர்த்தருடைய ஆசரிப்பு முறைகள்
  1. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் Neh_14:15-22, Isa_58:1-14,
  2. ஓய்வுநாளில் வெளியே இருந்து எந்த ஒரு பொருளையும் எருசேலம் நகரத்திற்கு உள்ளே கொண்டு வரக்கூடாது :-

தேவனுடைய இராஜ்ஜியத்தில் வெளியே இருந்து எந்த ஒரு சுய விசுவாச எண்ணங்களையும், தேவனுடைய சத்தியமான வார்த்தை களுக்குள்ளே கொண்டு வரக்கூடாது.

  1. ஓய்வு நாளில் உங்களுடைய வீடுகளிலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே கொண்டு வரக்கூடாது.

தேவனுடைய இராஜ்ஜியத்தில் உங்களுடைய அறிவு சிந்தனைகளிலிருந்து சொந்தமான யோசனைகளையோ / விதிமுறை களையோ / எந்த ஒரு சுய விசுவாசமான எண்ணங்களையோ வெளியே கொண்டு வரக்கூடாது.

8-3-3 ஆவிக்குரிய யூதர்கள் ஓய்வு நாளின் பிரமாணத்தை பரிசுத்தமாக ஆசரிக்கிறபடியால் எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களில் காத்திருந்து  முன்மாரி மழையின் மூலம் வருகிற பிதாவின் வாக்குத்ததமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்.  .  Act_1:4-5, Act_1:12, Act_2:1Isa_2:1-4Mic_4:1-3Jer_50:4-8, Zec_8:20-23,

8-3-4 ஆவிக்குரிய யூதர்கள் முன்மாரி மழையின் மூலம் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்ட பிறகு ஆவியில் பெலனடைந்து, தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப் பினால் முதலாவது எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிலும், இரண்டாவது யூதேயாவாகிய தேவனுடைய ஆசரிப்பு முறைகளின் சுத்திகரிப்பிலும், மூன்றாவது சமரியாவாகிய புற ஜாதிகளிடத்திலும், நான்காவது பூமியின் கடைசி வரை பரவியிருக்கிற தேவனை அறியாதவர்களிடத்திலும் சாட்சி களாக இருந்தார்கள்.  .  Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11,

8-3-5 ஆவிக்குரிய யூதர்கள் முன்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டபடியால், அவர்கள் மூலம் எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும் இஸ்ரவேலருக்கும் புற ஜாதிகளுக்கும் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது. Gal_2:7-10,   Joh_4:22-25,

8-3-6 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் இடறிவிழுந்தும் கீழ்படியாமலும் இருந்த தன் சொந்த ஜனமாகிய இஸ்ரவேலரையும் யூதர்களையும் தேவன் தள்ளினாலும் /சுபாவ ஒலிவ மரக்கிளையை தேவன் வெட்டினாலும் ; அவர்களுக்குள்ளே யாராவது ? கிறிஸ்துவின் விசுவாசத்தி னால் தேவ நீதியின் பிரமாணத்தை தேடுகிற ஆவிக்குரிய யூதர்கள் இருந் தால் ,  தேவன் அவர்களை கண்டறிந்து அவர்கள் மூலமாக தேவனுடைய இரட்சிப்பு எழுத்தின்படியுள்ள யூதர்களுக்கும்/ இஸ்ரவேலருக்கும்,  புற ஜாதிகளுக்கும்/ கிறிஸ்தவர்களுக்கும் வெளிப்படுகிறது. Gal_2:7-10Rom_9:30-33, Rom_11:11Joh_1:11-13, Joh_4:22-25

8-3-7 மோசே தீர்க்க தரிசியின் மூலம் லேவியர்களுக்கு தேவன் கிருபையாக கொடுத்த தேவனுடைய ஊழிய அழைப்புகள் கிறிஸ்துவின் முதலாம் வருகையில் நீக்கப்பட்டு / பிடுங்கப்பட்டு தேவனுடைய இராஜ்ஜியத்திற்கேற்ற கனிகளை கொடுக்கிற ஆவிக்குரிய யூதர்களுக்கு கிருபையாக கொடுக்கப்படுகிறது. . Heb_7:11-14, Heb_10:19-25, Num_18:6-7, Mat_10:40-42, Luk_20:9-16,

8-3-8 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் எழுத்தின்படியுள்ள இஸ்ரவேலர்கள்/ யூதர்கள் கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் மூலம் தேவ நீதியின் பிரமாணத்தை தேடாமல்; பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் கிறிஸ்துவாகிய மூலைக்கல்லில் / மூல உபதேசத்தில் இடறிவிழுந்து, இவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது, இவர்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது. Rom_9:30-33, 1Pe_2:6-8,

8-3-9 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழுந்த சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய இஸ்ரவேலரையும் / யூதர்களையும், தேவன் சுபாவ ஒலிவ மரத்திலிருந்து  வெட்டி எடுத்து ; வெட்டப்பட்ட அந்த இடத்தில் காட்டொழிவ  மரமாகிய புறஜாதிகளை/ கிறிஸ்தவர்களை தேவன் ஒட்ட வைக்கிறார்.இப்பொழுது  காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்கள், சுபாவ ஒலிவ மரத்தினுடைய வேருக்கும் சாரத்திற்கும் பங்குள்ளவர்களாக இருந்து தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுகிறார்கள். . Rom_11:7-11,

8-3-10 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய இரட்சிப்பை, கிருபையாக கொடுக்கிறபோது  தேவனுடைய முன் எச்சரிப்புடன் நியாயத்தீர்ப்பின்  செய்தியும் அறிவிக்கப்படுகிறது.

 கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய முன் எச்சரிப்புடன்  முதலாவது நியாயத்தீர்ப்பின் செய்தி.

 காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவனே! நீ சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய யூதனுக்கு விரோதமாக பெருமை பாராட்டாதே; பெருமை பாராட்டினால் நீ வேரை சுமந்து கொண்டிருக்கிறாய் / உன்னுடைய ஆவிக் குரிய வாழ்க்கை தலை கீழாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளுவாயாக.

கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய முன் எச்சரிப்புடன் இரண்டாவது நியாயத்தீர்ப்பின் செய்தி..

 இடறிவிழுந்தும் கீழ்படியாமலிருந்த தன் சொந்த ஜனமாகிய சுபாவ ஒலிவ மரக்கிளையான யூதர்களை தேவன் தப்பவிடாமல் வெட்டும் போது, இடறிவிழுந்தும் கீழ்படியாமலும் இருக்கிற காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களையும் தேவன் தப்ப விடாமல் வெட்டுவார்; ஆகையால் கிறிஸ்தவர்கள் முன் எச்சரிப்புடன் ஜாக்கிரதையாக இருந்து கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.

 கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய முன் எச்சரிப்புடன் மூன்றாவது நியாயத்தீர்ப்பின் செய்தி.

கிறிஸ்துவின் முதலாம் வருகையில் தேவனால் வெட்டப்பட்ட சுபாவ ஒலிவமரக்கிளையாகிய யூதர்களை, தேவன்  மீண்டும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சுபாவ ஒலிவமரத்துடன் ஓட்ட வைக்கும்போது ; காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களில் இடறி விழுந்தவர்களையும், கீழ்படியாதவர்களையும் தேவன் தப்பவிடாமல் சுபாவ ஒலிவ மரத்திலிருந்து வெட்டி எடுத்து, அவர்களை  காட்டிலே எறிந்து விடுவார்/ கிறிஸ்தவர்களும் புறஜாதிகளாகவே மதிக்கப்படுவார்கள். Rom_11:16-18Rom_11:19-22,

8-3-11 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் முன்மாரி மழையின் மூலம் பிதாவின் வாக்குத்தத்மான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, தேவனை விட்டு பின்வாங்கிப் போகிறவர் களுக்கு, தேவன் அவர்களுக்குள்ளே பொய்யின் ஆவிகளையும், வஞ்சிக்கிற ஆவிகளையும் அனுப்பி, அவர்கள் தேவனிடம் மனந்திரும்பும் வரை, அவைகளுக்கே அடிமையாகும் படி ஒப்புக்கொடுக்கிறார்.  2Th_2:1-4, 2Th_2:7-12, 2Th_2:13-17,

8-3-12 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கிற / வருகிற வாக்குத்தத்தம், கிறிஸ்துவின் விசுவாசத்தை பின் பற்றுகிற சந்ததிக்கு அளிக்கப்படும் வரை/ வருமளவும்; வேதம் எல்லாரையும் இஸ்ரவேலரையும் புறஜாதிகளையும் ஏகமாய் பாவத்தின் கீழ் அடைத்து, நியாயப்பிரமாணத்தின் காவலில் வைத்திருந்து, கிறிஸ்துவின் முதலாம் வருகையில் கிறிஸ்துவின் விசுவாச சந்ததிக்கு பிதாவின் வாக்குத்தத்தை கொடுக்கிறது. . Gal_3:19-24,

8-4-0 கிறிஸ்துவின்  இரண்டாம்   வருகையில்  தேவனுடைய  இரட்சிப்பு நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை  ஆட்டுக்கூட்டியானவருடைய கலியாண விருந்தாக புசிக்கிற, ஆவிக்குரிய  யூதர்கள் மூலமாக வெளிப்படுகிறது :-

8-4-1 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகள் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்து மகிமையடைந்த படியால், அவைகள் இரட்சிப்பின் அதிபதியான கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறது. Hos_6:1-4, 2Sa_23:3-4Deu_32:2, Isa_55:10-11Psa_90:4, 2Pe_3:8Joh_12:32, Luk_24:1-7, Isa_8:18-22, Isa_29:1-4, Rev_5:1-7 Rev_3:1,

1 தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிற இரட்சிப்பின் நற்செய்தி

  1. வேதம் 2. சாட்சிகள் 3. வழிகள் 4. கட்டளைகள் 5. பிரமாணங்கள் 6. கற்பனைகள் 7. நீதி நியாயங்கள் / நியாயத்தீர்ப்புகள்; ஆகிய இந்த ஏழு வகையான வார்த்தைகளில் வெளிப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளாகவும், இருளில் பிரகாசிக்கிற ஏழு விடி வெள்ளி நட்சத்திரங் களைப்போல உள்ள தேவனுடைய வார்த்தைகளை, தம்முடைய தூதர்களாக அனுப்புகிறவர் சொல்லுகிற இரட்சிப்பின் நற்செய்தி Rev_1:4-5, Rev_4:5, Rev_5:6, Zec_3:9, Zec_4:10, Psa_12:6, Rev_1:20, 2Pe_1:19, Job_38:12-13, Joh_1:1-5, Joh_12:34-36, Isa_55:10-11, Mat_23:28, Luk_16:15,  Joh_21:6,

2 தேவனுடைய ஏழு ஆவிகளின் மூலம் வெளிப்பட்ட தேவனு டைய ஏழு பிரமாணங்கள்; கிறிஸ்துவின் சரீரமான மண் குகையில் பரிசோதிக்கப்பட்டு உண்மையான சாட்சியை பெற்று, இருளில் பிரகாசிக்கிற ஏழு நட்சத்திரங்களைப் போலவும், தேவனுடைய ஏழு கண்களின் ஓளியாகவும்,  பரிமாண வளர்ச்சியடைந்து,  பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.

3 கிறிஸ்துவாகிய மூலைக்கல்லின் பரிமாணத்தில் வெளிப் படுகிற ஏழு புள்ளிகள் தேவனுடைய ஏழு கண்களாக  பிரதி பலிக்கிறது. Zec_4:7-10,

4 தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் வெளிப்பட்ட வானவில்லின் வெளிச்சத்தினுடைய பரிமாணத்தில் வெளிப்படுகிற ஏழு நிறங்கள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதி பலிக்கிறது. Gen_9:8-17,

5 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஜீவ சுவாசத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனுடைய ஜீவாத்துமாவின் ஏழு செயல்பாடுகள், தேவனுடைய ஏழு கண்களைப் போல பிரதி பலிக்கிறது

6 வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து  வெளிப்படுகிற வெளிச்சத்தின் பரிமாணங்களில் ஏழு திசைகள் தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது. . Eze_9:1-2, Jer_47:2, Psa_48:2, Job_37:21-22, Psa_74:2, Psa_75:6, Job_35:13-16,

7 தேவனுடைய வாயிலிருந்து வெளிப்படுகிற வசனங்களின் சத்தம், பரிணாம வளர்ச்சியின் மூலம் சங்கீத சுரமண்டலத்தின் ஏழு இராகங்களாக வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது. . Psa_49:4, Psa_92:2-3,

8 தேவனுடைய  வாயிலிருந்து வெளிப்படுகிற வசனங்களின் விசுவாசங்கள் /கருத்துக்கோட்பாடுகள், சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல,தேவனுடைய ஏழு பிரமாணங்கள் வெளிப்பட்டு, தேவனுடைய ஏழு கண்களைப் போல பிரதிபலிக்கிறது. Psa_19:1-10, Psa_119:1-8,

9 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட இரகசியங்கள், சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல, ஏழு வகையான உவமை மொழிகளில் வெளிப்பட்டு,தேவனுடைய ஏழு கண்களாக பிரதிபலிக்கிறது

8-4-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களுக்குள்ளே ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கிற ஆவிக்குரிய யூதர்கள், முதலாவது தேவனால் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள். Zec_10:1-5, Zec_12:7-10, Zec_12:1-6, Num_23:8-9, Num_23:18-24, Num_24:5-9, Isa_37:30-32, Eze_21:1-7, Eze_21:8-17, ஷ்நஉமூ10:1-5, ஷ்நஉமூ12:7-10,

8-4-3 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே ஓய்வு நாள் பிரமாணத்தை பரிசுத்தமாக ஆசரிக்கிற ஆவிக்குரிய யூதர்கள், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களில் காத்திருந்து  முன்மாரி மழையின் மூலம் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பிறகு; பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக, சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களில் காத்திருந்து அபிஷேக ஆவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள்.

     Luk_24:46-49Act_1:4-5, Act_1:12,Act_2:1Isa_2:1-4Mic_4:1-3Jer_50:4-8, Zec_8:20-23,   Joh_14:26-27, Joh_16:7-81Co_2:12-16, Isa_34:16-17, 1Co_14:5-6Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11, Act_2:14-21, Joe_2:28-32 Joe_2:17-18, Joe_2:1-2,  

8-4-4 கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற  ஆவிக்குரிய யூதர்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தும் நான்கு பலிபீடத்தின் ஆராதனை முறைகள். .  Zec_1:18-21, Zec_11:7-13, Zec_11:14-17,

1  தேவனுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடந்த பின்பு வாக்குத்தத்த தேசத்திலே பன்னிரெண்டு கல்லுகளை நாட்டி அவைகளில் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை எழுதி; ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் கூறின இடத்தில் பிள்ளைகளுக்கு / பின் சந்ததிக்கு அடையாளமாக கட்டப்பட்ட பலிபீடம். (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் பாதுகாக்கப்படுகிறது.) Deu_27:1-10, Deu_28:1-10, Deu_29:1-14, Deu_30:1, Jos_4:1-9, Psa_78:1-5, Psa_78:6-11,                   

மனிதர்களுடைய சுய  ஆலோசனைப்படி தாங்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்யத்தக்கவர்கள் என்பதை தங்களுடைய  பிள்ளைகளுக்கு / பின் சந்ததியாருக்கு அறிவிக்கும் படியாக; நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் இல்லாமலும், அதன் தொடர்புடைய ஆசீர்வாதங்களும் சாபங்களும் உள்ளடங்கிய தேவனுடைய வார்த்தைகள் இல்லாமலும், மற்றவர்களுடைய பார்வைக்கு மட்டும் பெரிதாக காட்சியளிக்கும்படியாக கட்டப்பட்ட பெரிய பலிபீடம் (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் சிதறடிக்கப் பட்டது)

 Num_32:1-5, Num_32:17-24, Jos_22:1-8, Jos_22:9-14, Jos_22:15-20, Jos_22:21-28, Jos_22:29-33,

2 எருசலேமிலே வாசம் பண்ணின இளைய தலைமுறையினர் தேவனுடைய ஆலோசனைகளிலும் பிரமாணங்களிலும் கண்டிப்பாக இருந்து, எருசலேம் ஆலய பலிபீடத்தில் தேவனுக்கு பலிசெலுத்தி ஆராதித் தார்கள்  (இந்த இடத்தில் யூதருடைய அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டது.) .) 2Ch_10:1-11, 2Ch_10:12-19, 2Ch_11:1-4, 1Ki_12:1-11, 1Ki_12:12-19, 1Ki_12:20-24,

இஸ்ரவேலின் பத்து கோத்திரத்திலுள்ள முதியோர்களின் ஆலோசனைப்படி, தாவீதின் வம்சத்தை விட்டு பிரிந்து சென்று, மனிதர்களுடைய சுய ஆலோசனையின் படி உருவாக்கப்பட்ட இரண்டு கன்றுக்குட்டிகளை வணங்கி, மேடைகளில் ஆராதனை செய்து வந்தார்கள். (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது) 2Ch_11:13-17, 2Ch_13:8-12,   1Ki_12:25-33, 2Ki_17:13-19, 2Ki_17:20-23,

3 இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் சிறையிருப்புக்கு சென்றபோது, சமாரியாவிலே குடியிருந்து ஜனங்களில் ஈனமானவர்களை ஆசாரியர்களாக நியமித்து, கர்த்தருக்கு பயந்தும், தாங்கள் விட்டு வந்த ஜாதிகளின் முறைமைகளை பின்பற்றியும், மேடைகளை கட்டி ஆராதனை செய்து வந்தார்கள் (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது.)  2Ki_17:21-27, 2Ki_17:28-34, 2Ki_17:35-41, Lev_18:1-5,

4 எருசலேமிலுள்ள ஆலய பலிபீடத்தில் ஜாதிகளுடைய ஆசரிப்பு முறைகளை கொண்டு வந்து தேவனுக்கு ஆராதனை செய்து வருகிறார்கள் (இந்த இடத்தில் யூதர்களுடைய அடையாளங்கள் சிதறடிக்கப்பட்டது)    )     Eze_9:1-4, Eze_9:5-11, Eze_11:1-6, Eze_11:7-12, Eze_11:13-21, Eze_5:5-11

8-4-5 மனிதன் தன்னுடைய கிரியைகளை நிறைவேற்றுவதற்காக மாடு மற்றும் கழுதைக்கு கடிவாளம் போடுவது போல தேவனும் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்களுடைய அறிவிலும் புத்தியிலும் கடிவாளம் போட்டு தேவனுடைய இரட்சிப்பின் ஊழியங்களை நிறைவேற்றுகிறார்.

1)Isa_1:3, Zec_10:1-5, Psa_39:1-5, Psa_32:8-11, Pro_26:3, 1Co_9:7-10, 1Ti_5:18, Deu_25:4, Jas_3:1-5, 2)Luk_13:15-17, Luk_14:1-6, 3)Gen_49:8-12, Mat_21:1-5, Joh_12:14-16, Zec_9:9,    

4)Act_2:1-8, Act_2:14-21, 1Co_12:4-12, 5),Joh_6:37-39, Joh_6:40, Joh_6:44-45, Joh_6:54,    6) Isa_30:19-24, Isa_32:15-20, Jdg_5:9-11, Job_36:27-33, Job_29:21-25, Job_28:20-28, Job_28:12-19,

 7)Isa_1:3, Hos_8:8-12, Jer_2:20-25, Jer_14:1-6, Jer_31:15-20Isa_32:9-15, Job_11:11-16, Job_39:5-8 , Job_6:5-6, Psa_104:10-11, Job_24:1-6, Pro_7:19-24, Isa_7:21-25, Job_30:11,

    8)Dan_5:20-21Dan_4:19,     Dan_4:24-27, Dan_4:28-33,    Dan_4:34-37, Amo_4:1-3, Isa_30:27-33, Isa_37:28-35, 2Ki_19:28-34, Eze_38:1-9, Eze_39:1-7,

8-5-0 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பின் ஊழியங்களை  நிறைவேற்றுவதற்காக; கிறிஸ்தவர் களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்களுடைய அறிவிலும் புத்தியிலும், தேவன் கடிவாளம் போட்டு கட்டினபடியால், அவர்களுடைய இருதய சிந்தனைகளிலும் கிரியைகளிலும் தினந்தோறும் புதிய விடியக்காலத்து வெளிச்சம் போல, பல தேவ தரிசனங்கள் கீழே குறிப்பிட்ட பல வழிகளில் வெளிப்படுகிறது.

8-5-1 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது  இருளிலே வெளிச்சம் பிரகாசிக்கிறது. Hos_6:1-3, Joh_1:1-5, Joh_3:19-21, 2Pe_1:19, Isa_50:10-1, Job_38:12-13,

8-5-2 கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களின் நன்மை தீiமைகளை பகுத்தறிகிறபோது இருதயத்தில் தேவ நீதியின் வசனம் வெளிச்சமாக வெளிப்படுகிறது. . Heb_6:1-2, Heb_5:12-14,Rom_9:4, Rom_3:1-2,

8-5-3 தேவனுடைய கற்பனைகளின்படி நடக்கிறபோது நற்கிரியைகளினால் வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. Isa_60:1-9, Isa_60:9-14, Isa_51:3-5, Mic_4:1-4, Isa_2:1-6, Joh_7:18-19, Joh_12:43,

8-5-4 கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் மனந்திரும்பின பின்பு நீதியின் கிரியைகளை செய்கிறபோது வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது.       .       Mat_6:16-18, Isa_58:5-10, Isa_58:11-14,

8-5-5 கிறிஸ்துவின் வார்த்தைகளின் மூலம் நேரடியாக நீதியின் கிரியைகளை செய்கிறபோது வாழ்க்கையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது. Mat_5:14-16Mat_6:21-23, Luk_8:16-18, Luk_11:33-36, Luk_12:32-37, Rev_2:5,

8-5-6 தேவனுடைய ஆலோசனைகளை அனு தினமும் சிந்தித்து, தியானிக்கிறவர்களுடைய இருதயத்தில் வெளிச்சம் பிரகாசித்து வார்த்தைகளாக வெளிப்படுகிறது. Gen_6:8-9, Mal_2:5-9, Jer_23:18-24, Jer_23:25-32, 1Co_2:4-10, 1Co_2:11-16, Isa_64:4-14, 

8-5-7 ஒரு குறிப்பிட்ட வசனத்தின் தொடர்பில், நியாயப் பிரமாணத்தையும் தீர்க்க தரிசனங்களையும் சிந்தித்து தியானிக்கும் போது, தேவ நீதியின் வசனம், இருதயத்தில் புதிய வெளிச்சமாக வெளிப்படுகிறது. Rom_3:20-22, Rom_10:6-11, Deu_30:11-16, Deu_30:17-20, 1Jo_4:1-6, 2Jo_1:7-11,

8-5-8 ஒரு குறிப்பிட்ட வசனத்தின் தொடர்பில் நியாயப் பிரமாணத்தையும் அவைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப் பட்ட சாட்சியின் வசனத்தையும் சிந்தித்து  தியானிக்கும் போது இருதயத்தில் புதிய விடியக்காலத்து வெளிச்சம் வெளிப்படுகிறது. . Isa_8:16-20, Isa_41:21-29, Joh_10:34-36, Dan_5:12-17, Psa_82:1-8, Psa_75:1-10, Son_6:9-10,

8-6-0 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஊழியங்கள்

8-6-1 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற தேவனால் முன் குறிக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களினால் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் மூலம் ஆவியில் பெலனடைந்து, முதலாவது எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிலும், இரண்டாவது யூதேயாவாகிய தேவனுடைய ஆசரிப்பு முறைகளுடைய சுத்திகரிப்பிலும், மூன்றாவது சமாரியாவாகிய கிறிஸ்தவர்களிடத்திலும், நான்காவது பூமியின் கடைசி வரை பரவியிருக்கிற புற ஜாதிகளிடத்திலும் சாட்சியாக இருக் கிறார்கள். Act_1:4-5, Act_1:12, Act_2:1Isa_2:1-4Mic_4:1-3Jer_50:4-8, Zec_8:20-23, Act_1:8, 1Co_12:4-11, Rom_12:2-8, Eph_4:11-13, 1Pe_4:10-11,

8-6-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே  இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள்; முன்மாரி மற்றும் பின்மாரி மழையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்ட படியால், அவர்கள் மூலம் எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது. Gal_2:7-10Rom_9:30-33, Rom_11:11Rom_11:16-18Rom_11:19-22, Joh_1:11-13, Joh_4:22-25,

8-6-3 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இடறிவிழுந்தும், கீழ்படியாமலும் இருக்கிறவர்களை தேவன் தள்ளினாலும் /சுபாவ ஒலிவ மரத்திலிருந்து காட்டொழிவ மரக்கிளையாகிய கிறிஸ்தவர்களை தேவன் வெட்டினாலும், அவர்களுக்குள்ளே, யாராவது? கிறிஸ்துவின் விசுவாசத்தினால் தேவ நீதியின் பிரமாணத்தை தேடுகிற ஆவிக்குரிய யூதர்கள் இருந்தால், அவர்களை தேவன் கண்டறிந்து, அவர்கள் மூலமாக தேவனுடைய இரட்சிப்பு, எழுத்தின் படியுள்ள யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும், புறஜாதிகளுக்கும் வெளிப்படுகிறது. Gal_2:7-10Rom_9:30-33, Rom_11:11Rom_11:16-18Rom_11:19-22, Joh_1:11-13, Joh_4:22-25,

8-6-4 மோசே தீர்க்க தரிசியின் மூலம் லேவியர்களுக்கு தேவன் கிருபையாக கொடுத்த தேவனுடைய ஊழிய அழைப்புகள்; கிறிஸ்துவின்  இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களிடமிருந்து நீக்கப்பட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கேற்ற கனிகளை கொடுக்கிற ஆவிக்குரிய யூதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. . Heb_10:19-25, Heb_7:11-14Num_18:6-7, Mat_10:40-42, Luk_20:9-16,

8-6-5 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எழுத்தின் படியுள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் மூலம் தேவ நீதியின் பிரமாணத்தை தேடாமல், பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடுகிறபோது; கிறிஸ்துவாகிய மூலைக்கல்லில் / மூல உபதேசத்தில் இடறி விழுந்து, இவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது. இவர்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் மீண்டும்  தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது. Rom_9:30-33, 1Pe_2:6-8Rom_11:7-11,

8-6-6 கிறிஸ்துவின்  இரண்டாம்  வருகையில், கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழுந்த காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர் களையும் / லேவியர்களையும் சுபாவ ஒலிவ மரத்திலிருந்து வெட்டி எடுத்து, வெட்டப்பட்ட அந்த இடத்தில் சுபாவ ஒலிவ மரக்கிளையாகிய இஸ்ரவேலரையும் / யூதர்களையும் தேவன் மீண்டும் ஒட்ட வைக்கிறார். இப்பொழுது காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களை புற ஜாதிகளைப்போல  காட்டிலே எரிந்து விடுகிறார் / அவர்கள் புற ஜாதிகளாகவே மதிக்கப்படுவார்கள். Rom_11:19-22, Rom_11:23-32,

8-6-7 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சுபாவ ஒலிவ மரங்கிளையாகிய  ஆவிக்குரிய யூதர்களை தேவன் மீண்டும் அங்கிகரிக்கும் போது, இரட்சிப்பின் நற்செய்தியுடன் புது உடடன்படிக்கையினாhல் முற்பிதாக்களின் ஆசீர்வாதங்களும் மரித்தோரின் உயிர்தெழுதலைப்போல வெளிப்படுகிறது.

சுபாவ ஒலிவ  மரக்கிளையாகிய யூதர்களை தேவன் தள்ளி விடுதல் உலகத்தை ஒப்புரவாக்கும்போது; அவர்கள் மீண்டும் தேவனால் அங்கிகரிக்கப்படுகிறது மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போல இருக்கிறது.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் காட்டொழிவ மரமாகிய கிறிஸ்தவர்களின் கீழ்படியாமையினாலே வெட்டப்படும் போது, கிறிஸ்து வின் முதலாம் வருகையில் வெட்டப்பட்ட சுபாவ ஒலிவ  மரக்கிளையாகிய யூதர்களை சொந்த ஜனங்களை தேவன் மீண்டும் ஒட்ட வைப்பார் /அங்கிகரித்து பிதாக்களின் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுவாhர்.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சுபாவ ஒலிவ  மரக்கிளையாகிய யூதர்களை தேவன் மீண்டும் சுபாவ ஒலிவ மரத்துடன் ஓட்ட வைக்கும் போது / தெரிந்து கொள்ளும் போது, அவர்கள் முற்பிதாக் களின் நிமித்தம் அன்பு கூரப்பட்டவர்களாக இருக்கிறபடியால் தேவன் அவர்களுடைய அவ பக்தியை அவர்களை விட்டு விலக்கி, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, மீண்டும் அவர்களுடன் புது உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். Rom_11:23-32, Jer_31:31-34, Jer_32:38-40; Heb_8:8-12, Heb_10:16-22,

8-6-8 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பெந்தெ கொஸ்தே என்னும் ஆத்துமா அறுவடை பண்டிகை வந்தபோது, கிறிஸ்துவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ஆவிக்குரிய யூதனுடைய வஸ்திரத்தை /நீதியின் கிரியைகளை பிடித்துக் கொண்டு பத்து புற ஜாதிகள் / கிறிஸ்தவர்கள் தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்;  ஆகையால் உங்களோடே கூட நாங்களும் கர்த்தரின் பர்வதத்திற்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டு எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களுக்கும் சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களுக்கும் வந்து சேருவாhர்கள்.  Act_1:4-5, Act_1:12, Act_2:1Isa_2:1-4Mic_4:1-3Jer_50:4-8, Zec_8:20-23,

8-6-9 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவன் எங்களோடே இருக்கிறார் என்று சொல்லுகிற யாக்கோபின் வம்சத்தார் / கிறிஸ்தவர்கள் தாங்களே பரிசுத்த நகரத்தார் என்று  சொல்லிக்கொண்டு, தங்களுடைய பட்டயத்தை மண்வெட்டியாக மாற்றியமைத்துக் கொள்ளாமலும் தங்களுடைய ஈட்டியை அறிவாளாக மாற்றியமைத்துக் கொள்ளாமலும், முரட்டாட்டம் பண்ணி; எருசலேமாகிய கர்த்தருடைய வார்த்தைகளுக்கும், சீயோனாகிய தேவனுடைய  பிரமாணங்களுக்கும் வராமல் இருக்கிறவர்களை தேவன் கை விட்ட படியால், அவர்கள் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட இரட்சிப்பு மரணமடைகிறது. மேலும் இவர்கள் மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் நாள் வரை, தேவனுடைய சாபங்கள் இவர்களை தொடருகிறது.

 Isa_8:5-16, Isa_48:1-2, Isa_58:1-2,Isa_2:1-6,Isa_28:15-19, Mat_1:23, Mic_3:10-11, Amo_5:14, Jer_8:8, Jer_14:9-10, Jer_18:9-10Jer_23:16-17Amo_9:10, Eze_11:3-12, Eze_11:13-21,

8-6-10 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பத்து புற ஜாதிகள் / கிறிஸ்தவர்கள் தங்களுடைய பட்டயத்தை மண்வெட்டியாக மாற்றியமைத்துக் கொள்ளுவதின் பொருள் :-

இருபுறமும்  கருக்குள்ள தேவ வசனமாகிய பட்டயத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுகிறது போல; அவைகளை தங்களுடைய வாழ்க்கையிலும் ஏற்றுக்கொண்டு மனந்திரும்புகிற போது, அவைகள் மண்வெட்டியின் உபயோகம் போல தங்கள் முன்னேற்றத்திற்காக நீதியின் கிரியைகளை விதைக்கிறார்கள்.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பத்து புற ஜாதிகள் / கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஈட்டியை அறிவாளாக மாற்றியமைத்துக் கொள்ளுவதின் பொருள் :-

ஈட்டியைப் போல கசப்பான வார்த்தைகளை பேசுகிறவர்கள், அவைகளை விட்டு மனந்திரும்புகிறபோது, அவர்கள் தங்களுடைய நற்கிரியைகளின் ஆசீர்வாதங்களை அறுத்து புசிப்பார்கள். . Isa_2:1-4Mic_4:1-3Jer_50:4-8, Zec_8:20-23,

8-7-0 கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை பின்பற்றுகிற சந்ததி வரும் வரை, வேதம் எல்லாரையும் ஏகமாய் மாயையின் காவலின் கீழ் வைத்திருக்கிறது.

8-7-1 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பலிக்கிற / வருகிற ஆவி, ஆத்துமா, சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுகிற சந்ததிக்கு அளிக்கும்படியாக; வேதம் எல்லாரையும் யூதர்களையும் இஸ்ரவேவர்களையும் / கிறிஸ்தவர்களையும் / லேவியர்களையும் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் கீழ்  / மாய்மாலத்தின் மறைவிடத்தின் கீழ் காவலில் வைத்திருக்கிறது./  நீதிப்பிரமாணத்தை பின்பற்றுகிற சந்ததி வரும் வரை, வேதம் எல்லாரையும் ஏகமாய் மாயையின் காவலின் கீழ் வைத்திருக்கிறது. Rom_8:19-23, 2Co_5:1-10, Isa_28:14-15, Isa_5:18-25, Isa_8:5-15Isa_7:1-9, Isa_30:27-28,

8-7-2 நீதிப்பிரமாணம் ஒரு தலைமை  ஆசிரியர் :-

நீதிப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிற படியால் நீதிப்பிரமாணத்தின் நீதியானது, பொய்யின் கீழ் அடைக்கலமாக்கப் பட்டு மாயையின் மறைவிடத்தின் கீழ் காவலில் இருந்த நம்மை விடு தலையாக்கி, கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுதவதற்கு வழி நடத்துகிற ஒரு தலைமை ஆசிரியராக இருக்கிறது.

8-7-3 கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர் :-

கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிறபடியால், கிறிஸ்து ஒரு தலைமை ஆசிரியர்.

கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை தன் சரீரத்தில் நிறை வேற்றின பின்பு, கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தின் நீதிக்கிரியைகளை நிறை வேற்றுவதற்காக, பாதாளத்தில் / பூமியின் தாழ்விடங்களில் இறங்கி, சிறைபட்டவர்களை சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்து, உன்னதத்திற்கு ஏறினார்; கிறிஸ்துவை   தலையாகப் பற்றிக்கொண்டு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குக்குத்தக்க பூரண புருஷராக எல்லாவற்றிலும் / நீதிப்பிரமாணத்தின் விசுவாசத்திலும், கிரியைகளிலும் கிறிஸ்துவை பின்பற்றி, வளர்கிறவர்களாக இருக்கும் படி அப்படி செய்தார்.. Rom_8:2-4, 1Pe_3:18-19, 1Pe_4:5-11, Eph_4:7-16, Psa_68:18, Isa_42:6-7,

8-7-4 கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகள் இருதயத்திற்கு சமீபமாக இருக்கும்போது, அவைகள் பாதாளமாகிய இருதயத்திற்கு இறங்கி சென்று நீதிப்பிரமாணத்தை பிரசங்கிக்கிறது :-

கிறிஸ்து நியாயப்பிரமாண நீதியை தன் சரீரத்தில் நிறை வேற்றின போது, கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டது போல, தங்களுடைய சரீரத்தில்  நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்றுகிறபோது, தங்களுடைய ஆவி, ஆத்துமாவில் உயிர்ப் பிக்கப்பட்டவர்கள்; கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை நிறைவேற்று வதற்காக, தேவனுடைய வார்த்தைகளை தங்கள் இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து , கிறிஸ்துவின் ஆவி, ஆத்துமா, பாதாளத்தில் இறங்கினதுபோல தங்களுடைய ஆவி, ஆத்து மாவையும் பூமிக்குரிய பாதாளமாகிய தங்களுடைய இருதயத்தில் இறங்கச் செய்து நீதியின் பிரமாணத்தை பிரசங்கிக்கிறது.

 Rom_10:6-11, Deu_30:11-14, Pro_27:20, Pro_30:15-16, Hab_2:4-6,

8-7-5 கிறிஸ்து பாதாளத்தில் சிறைபட்டவர்களை விடுதலையாக்கினதுபோல,  தன்னுடைய சரீர அவயவங்களை மாயைகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, அவைகளை நீதிக்கு அடிமையாக மாற்றுவது :-

கிறிஸ்துவின் பிரசங்கத்தினால் பாதாளத்தில் பாவத்திற்கும், மரணத்திற்கும் சிறைபட்டிருந்தவர்களை கிறிஸ்து விடுதலையாக் கினதுபோல; தன்னுடைய ஆவி, ஆத்துமாவே தன்னுடைய இருதயமாகிய பாதாளத்தில் இறங்கிச் சென்று, பொய்யின் ஆவிகளுக்கும் மாயையின் ஆவிகளுக்கும் சிறைபட்டிருக்கிற தன்னுடைய சரீர அவயவங்களுக்கு நீதியின் பிரமாணத்தை பிரசங்கித்து, மனந்திருப்பி, அவைகளை நீதிக்கு அடிமையாக்கிக் கொள்ளுகிறார்கள். Rom_7:14-25, Rom_8:7-18, 2Co_5:1-10, 2Co_5:17-20, 1Co_15:46-54,

8-7-6 கிறிஸ்துவின் புத்திர சுவிகார மகிமையின் சுயா தினத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள், கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள்.

பொய்யின் அடைக்கலத்திலிருந்தும் மாயையின் மறைவிடத்தின் காவலிருந்தும் விடுதலையாகுகிறவர்கள், கிறிஸ்துவின் நீதிப் பிரமாணத்தினால், ஆவியின் வரங்களைப் பெற்றுக் கொண்டு, தங்களுடைய சரீர அவயவங்களை நீதிக்கு அடிமையாகும்படி ஒப்புக் கொடுக்கிறவர்கள்; கிறிஸ்துவின் புத்திர சுவிகார மகிமையின் சுயாதினத்தை சுதந்தரித்துக் கொண்டு, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக மாறுகிறார்கள்.  1Co_12:1-7, 1Co_12:8-12, 1Co_12:12-21, 1Co_12:22-31, Eph_4:11-13, Eph_4:21-32,

8-8-0 கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தை பின்பற்றாமல் மாயையின் மறைவிடத்திலே அடைக்கலமானவர்களுக்கு தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு   Isa_28:14-15, Isa_28:16-21Isa_30:27-28, Isa_30:8-17, Psa_2:1-12,

8-8-1 இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய அந்திக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்க தரிசிகளும், அவர்கள் கட்டின மனோ இராஜ்ஜியமான  மாயையின் மாளிகையும் தேவனுடைய வாதை களினால் நித்தியமாக நியாயத்தீர்க்கப்படுகிறது. Isa_7:1-9, Isa_8:5-15, Isa_30:27-28Job_15:31-35,   Eze_13:1-8, Eze_13:9-16, Eze_13:17-23, Mat_7:15-20, Mat_7:21-29Isa_8:19-22, 1Sa_12:19-25,

8-8-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக் குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள், எருசலேமாகிய தேவனுடைய வார்த்தைகளிலும், சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களிலும் காத்திருந்து, தங்களுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் வசனங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். Isa_2:1-4Mic_4:1-3Jer_50:4-8, Zec_8:20-23,

8-8-3 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர் களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்களுடைய நெற்றியிலே / அறிவிலே பெற்றுக்கொண்டு, அவர்கள் 1,44,000 ஆண் பிள்ளைகள் வரிசையில் வந்து சேர்ந்து: மோசே மற்றும் எலியா தீர்க்கதரிசியின் ஊழிய அழைப்பை பெற்று, ஜனங்களை கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்தும் ஊழியத்தையும் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தையும் நிறைவேற்றுகிறார்கள்.

 இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள் 6-2 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட 1.44.000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழி முறைகள் என்கிற தலைப்பில் பார்க்கவும்

8-8-4 -கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருக்கிற ஆவிக்குரிய யூதர்கள் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்களுடைய நெற்றியிலே / அறிவில் பெற்றுக்கொண்டதினால் மோசே மற்றும் எலியா தீர்க்கதரிசியின் ஊழிய அழைப்பை பெற்று; பரிசுத்த ஸ்தலத்திலே நடைபெறும் அருவருப்புகளின்  நிமித்தம் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றியிலே / அறிவிலே  தேவனுடைய ஏழு முத்திரைகளை அடையாளம் போட்டு, தேவனுடைய வீடாகிய சபையிலே தேவனுடைய நியாயத்தீர்ப்பை துவங்குகிறார்கள்.

இவைகளைக் குறித்து மேலும் அறிய தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்  அத்தியாயம் ஏழு 7-0            இரண்டு சாட்சிகளின் ஊழிய  அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை நிறைவேற்றுதல்.

அத்தியாயம் எட்டு 8-0        இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறை வேற்றுதல் என்கிற தலைப்பில்   பார்க்கவும்

 


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries