தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 15-0

15-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றி கடவுளின் பெயரால் தங்கள் இருதயத்தில் ஆராதனை செய்வதற்கு மனிதர்கள் மூலமாக சத்தியத்தின் மார்க்கம் / சத்தியத்தின் மதம் வெளிப்படுத்தப்படுகிறது:-

15-1 உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய பிரதிஷ்டை முறைகளின் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிக்கும் சத்தியத்தின் மார்க்கத்தை / சத்தியத்தின் மதத்தை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார்:-

15-2 நியாயப்பிரமாணத்தின் ஆராதனை முறைமைகளும்,ஆசரிப்பு முறைமைகளும், இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறபோது, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய பிரதிஷ்டை முறைகள் வெளிப்படுத்தப்படுகிறது:-

15-3 இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி, தம்முடைய குமாரனை பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்:-

15-4 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகள் , ஆராதனை முறைகள் ,ஆகியவைகளில் ஒருவனது மனம் விரும்புகிறவைகளை மட்டும் வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு மாற்றுகிறபோது, மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு வெளிப்படுகிறது:-

15-5-0, இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறவைகளை பின்பற்றுகிறவர்கள்: நீதிமான்களாகவும், ஞானிககளாகவும்,அடையாளம் காணப்பட்டு,அவர்கள் மூலம் தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார்:-

15-1 உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய பிரதிஷ்டை முறைகளின் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிக்கும் சத்தியத்தின் மார்க்கத்தை / சத்தியத்தின் மதத்தை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார்:-

தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளும், நித்திய சத்தியத்தில் நிலைகொண்டிருந்து நித்தியமாக வாழ்வதற்கு தேவையான வழிமுறைகளை வெளிப்படுத்துவதற்காக; ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவானவர், தம்முடைய ஒரேபேறான குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

நியாயப்பிரமாணத்தின் அடிப்படை விதிமுறைகளின் உபதேசத்தையும் மற்றும் நியாயப்பிரமாணத்தின் பலமான ஆகாரத்தின் விதிமுறைகளின் உபதேசத்தையும், அதன் நிழலாட்ட மானவைகளிலிருந்து இயேசு கிறிஸ்து தன்னுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் பாவத்தையும்,

மரணத்தையும் ஜெயங்கொள்ளும் வழிமுறைகளின் மூலம் மேற்கொண்டு பொருளுக்கு மாற்றுகிறதினால்;தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆதாமின் சந்ததிகளுக்கு ஏதேன் தோட்டத்தினுடைய ஊழிய தரிசனங்கள் வெளிப்படுத்தப்படுகிறது

1 உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய தரிசனங்கள்:- Gen_14:18, Psa_110:4 Heb_7:1,Heb_5:6, Heb_5:10, Heb_6:20, Heb_7:1, Heb_7:10-11 , Heb_7:15, Heb_7:17, Heb_6:20

2 ஜாதிகளின் முறையின்படி ஆசாரிய அழைப்பின் ஊழிய தரிசனங்கள்:- Exo_2:16, Exo_3:1, Deu_23:4-5, Num_22:5, Num_22:7-10, Jos_13:22, Jos_24:9-10Neh_13:2, Mic_6:5 2Pe_2:15, Jud_1:11, Rev_2:14, 2Ch_13:9-11

3 லேவியரின் ஆசாரிய அழைப்பின்படி ஊழிய தரிசனங்கள்:- Exo_28:1, Exo_28:3-4 , Exo_28:41, Exo_29:1, Exo_29:44, Exo_30:30, Exo_31:10, Exo_35:19, Exo_39:41, Exo_40:13, Exo_40:15, Lev_7:35, Lev_16:32, Num_3:3-4 , Deu_10:6, 1Ch_6:10, 1Ch_24:2, 2Ch_11:14

4 மனிதனின் கற்பனைகளும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும் தேவனுடைய திட்டங்களுக்கு எதிராகவும், இணையாகவும், எழும்பி போராடிக் கொண்டிருக்கிறது :-

நியாயப்பிரமாணத்தின் அடிப்படை விதிமுறைகளின் உபதேசத்தையும் மற்றும் நியாயப்பிரமாணத்தின் பலமான ஆகாரத்தின் விதிமுறைகளின் உபதேசத்தையும், அதன் நிழலாட்ட மானவைகளிலிருந்து இயேசு கிறிஸ்து தன்னுடைய நித்திய ஜீவ வார்த்தைகளினால் பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளும் அனுபவத்தின் மூலம் மேற்கொண்டு பொருளுக்கு மாற்றும் போது;

நியாயப்பிரமாண விதிமுறைகளுடன் புற ஜாதிகளின் முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மனிதனின் கற்பனைகளும் அதன் ஆசரிப்பு வழிமுறைகளும் தேவனுடைய திட்டங்களுக்கு எதிராகவும், இணையாகவும், எழும்பி போராடிக் கொண்டிருக்கிறது. Mar_7:6-16 1Sa_8:5, 1Sa_8:20, , Joh_6:15, 1Ki_14:24, 2Ki_16:3, 2Ch_33:2, 2Ki_17:112Ki_17:29, 2Ki_17:41, 2Ki_21:2, Neh_13:24, Hos_2:8, Hos_8:1-4Col_2:8, 2Th_3:6

5 நற்குல திராட்ச செடியான இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல் :-

நற்குல திராட்ச செடியான இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவவார்த்தைகளின் உபதேசத்தை; மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளினால் நாளுக்கு நாள் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டு வருகிறது. Isa_5:7, Gen_49:11, Isa_5:2, Jer_2:21 Isa_1:10-28, 1Pe_2:2-3, 2Co_2:17, 2Co_4:2, 1Co_3:2, Heb_5:12-13 , 1Pe_2:2

6 மனிதனின் கற்பனைகளின்படி நற்குல திராட்சத் தோட்டத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைகிறது :-

தேவனுடன் தாங்கள் செய்து கொண்ட ஊழிய தரிசனத்தின் உடன்படிக்கையை மீறி, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளை கொண்டு நற்குல திராட்சத் தோட்டத்தின் ஊழிய தரிசனத்தை தங்களுடைய தாக்கிக்கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது; இதனால் அவர்கள் தேவனுடைய திட்டத்திற்கு எதிராகவும், இணையாகவும் மேற்கொண்ட செயல்களும் அவருடைய குமாரனுக்கும், ஊழியர்களுக்கும் விரோதமாக செய்த துன்மார்க்க கிரியைகளும் வெளிப்பட்டது. Mat_21:33-35,Mat_21:38,Mat_21:40-41Mar_12:1 2Mar_12:7, Luk_20:9-10, Luk_20:14, Luk_20:16 Dan_7:26-27, 2Ch_36:16, Jer_23:34-37, Heb_13:12, Act_7:51-59,

15-2 நியாயப்பிரமாணத்தின் ஆராதனை முறைமைகளும்,ஆசரிப்பு முறைமைகளும், இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறபோது, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய பிரதிஷ்டை முறைகள் வெளிப்படுத்தப்படுகிறது:-

இயேசு கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தை ஜெயங்கொண்டு; நியாயப்பிரமாணத்தின் நிழலாய் மாத்திரம் இருக்கிற ஆராதனை முறைமைகளும்,ஆசரிப்பு முறைமைகளும், வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறபோது, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசதேக்கின் ஊழிய பிரதிஷ்டை முறைகள் ஆவி,ஆத்துமா, சரீரத்தில் வெளிப்படுத்தப்படுகிறது

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகள் , ஆராதனை முறைகள் ,ஆகியவைகளில் இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறபோது, சத்தியத்தின் மார்க்கம் / சத்தியத்தின் மதம் வெளிப்படுகிறது.

15-3 இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி, தம்முடைய குமாரனை பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்:-

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும் நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கொடுத்த, மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணத்தின் நிழலாய் மாத்திரம் இருக்கிற ஆராதனை முறைமைகளும்,ஆசரிப்பு முறைமைகளும், வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாற்றுவதற்காக:

நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனை இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக பிரித்தெடுக்கிறார்,

15-4 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறபோது, இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளூம் , ஆராதனை முறைகளூம் வெளிப்படுகிறது:-

முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், இயேசு கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தை ஜெயங்கொண்டு;

நியாயப்பிரமாணத்தின் நிழலாய் மாத்திரம் இருக்கிற ஆராதனை முறைமைகளும்,ஆசரிப்பு முறைமைகளும், வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறபோது, இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளூம் , ஆராதனை முறைகளூம் வெளிப்படுகிறது.

15-5-0, இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறவைகளை பின்பற்றுகிறவர்கள்: நீதிமான்களாகவும், ஞானிககளாகவும்,அடையாளம் காணப்பட்டு,அவர்கள் மூலம் தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார்:-

15-5-1 இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் சரீரம், ஆவி, ஆத்துமா, ஆகிய இவைகளை ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்கிறபோது; அவைகள் முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு, V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாற்றுகிறது:-

ஒருவன் ஒரு இளம் பசுவையும் இரண்டு ஆட்டுக்குட்டி களையும் வளர்த்தால் அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் பரிபூரணமாக கிடைக்கும். Isa_7:21-22, Exo_29:1, Rom_12:1-2, Rom_8:3-4,

ஒருவன் தன்னுடைய சரீரம், ஆவி, ஆத்துமா, இவைகளை தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து வளர்க்கும்போது, அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் தன்னுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் நித்திய ஜீவ வார்த்தைகளாக சுரந்து ஆவிக்குரிய நல்ல உணவு பரிபூரணமாக கிடைக்கிறது. 1Pe_3:18,

இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீத்திரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம், இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறது. . Heb_9:8-16, Heb_13:9-15,

1 இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையானவைகளும், ஜோடியானவைகளுமாகிய நன்மை தீமைகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறது.

2 இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையான நேரடியான நன்மைகளையும், தீமைகளை வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, நன்மைகளாக தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறது

3 தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பரிசுத்த ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற, பரிசுத்த ஆவியின் வரங்களூடைய ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்களை நிறைவேற்றுகிறவர்கள் ; இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக: கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்கும் , இருதயத்திற்கும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறபோது தேவநீதியின் வசனங்களை, பகுத்தறிந்து கொள்ளூகிறார்கள்.

15-5-2 இயேசு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்:ஒருவனுடைய பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து நீதியின் கிரியைகளை செய்கிறபோது அவனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு கீழே குறிப்பிடுகிற பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுகிறவைகைளை,அவனால் உணர்ந்து கொள்ள முடியும்:-

இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை ஒருவன் பின்பற்றி அவனுடைய பாவ சரீத்திரத்திலே அவன் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அவனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு: நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் அவன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, Isa 33:15-22

1 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்;

2 அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

3 உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும். Isa 33:17

4 உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே? Isa 33:18

5 உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய். Isa 33:19

6 நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை. Isa 33:20

7 இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீத்திரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம், இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறபோது:

நான் ஆவிக்குரிய நிலையில் மரணமடைந்து, என்னுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு, என்னுடைய நிர்வாணத்தை நான் அறிந்து கொள்ள முடியும்.Gen_3:5-8;Exo_32:25-27; Isa_47:1-3; Isa_33:15-16;Joh_3:3-8, ; Rev_3:17-18, Rev_16:12-16

15-6, தேவனுடைய உடன்படிக்கையின் மூலம் பரிசுத்த ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற பரிசுத்த ஆவியின் வரங்களூடைய ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பின்பற்றி,

தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுகிறவர்கள்: இடறி விழுந்தாலும், அவர்கள் மூலமாகவே தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார்:-

15-6-1 இஸ்ரவேலின் இராஜாவாகிய சாலமோன் தேவனுடைய உடன்படிக்கையை மீறினபடியால் அவனுடைய ஞானத்தை மாயைகளின் வெளிப்பாடுகள் மேற்கொண்டது:-.

இஸ்ரவேலின் இராஜாவாகிய சாலமோன் மாயைகளின் வெளிப்பாடுகளுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், மாயைகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, நித்திய சத்தியத்திற்கு கடந்து வரும் வழிமுறைளையும் இராஜாவாகிய சாலமோன் மூலமாவே தேவன் வெளிப்படுத்தினார்

Ecc 9:7 நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.

Ecc 9:8 உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.

Ecc 9:9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.

Ecc 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Ecc 9:11 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

Ecc 9:12 தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

15-6-2 இஸ்ரவேலின் இராஜாவாகிய சாலமோன் தேவனுடைய உடன்படிக்கையை மீறினபடியால் அவனுடைய ஞானத்தை மாயைகளின் வெளிப்பாடுகள் மேற்கொண்டபோது கீழே குறிப்பிட்டவாறு எழுதுகிறான் ,

Ecc 1:16 இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

Ecc 1:17 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.

Ecc 1:18 அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.

Ecc 12:8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

Ecc 12:9 மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.

Ecc 12:10 இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கப் பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.

Ecc 12:11 ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.

Ecc 12:12 என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.

Ecc 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

Ecc 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

15-6-3 இஸ்ரவேலின் இராஜாவாகிய சாலமோன் தேவனுடைய உடன்படிக்கையை மீறினபடியால் அவனுடைய ஞானத்தை மாயைகளின் வெளிப்பாடுகள் மேற்கொண்டபோது கீழே குறிப்பிட்டமூன்று காரியங்களை குறித்து இப்படியாக எழுதுகிறான்:-

1 ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள என் மனதைச் செலுத்தினபோது ,தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? என்று பிரசங்கி சொல்லுகிறான்:

2 மதிகேட்டின் ஆகாமியத்தை விசாரித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள என் மனதைச் செலுத்தினபோது கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:

3 புத்திமயக்கத்தின் பைத்தியத்தை விசாரித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள என் மனதைச் செலுத்தினபோது என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன். Ecc 7:28-29

15-7, கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்:ஒருவனுடைய பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து, நீதியின் கிரியைகளை செய்கிறதினால், ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்ட பின்பு; தொடர்ந்து நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறபோது தேவனைப் போல நித்திய சத்தியத்தினுடைய புத்திமயக்கத்தின் பைத்தியம் அவனுக்கும் வெளிப்படுகிறது:-

கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா, நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதையடைந்து: பலமான ஆகாரமாகிய தேவ நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவர்களாக இருந்து, தேவ நீதியினால் பிழைக்கிறவர்களுக்கு புத்திமயக்கத்தின் பைத்தியம் வெளிப்படுகிறது

தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளும், நித்திய சத்தியத்தில் நிலைகொண்டிருந்து நித்தியமாக வாழ்வதற்கு தேவையான வழிமுறைகளை வெளிப்படுத்துவதற்காக; ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவானவர், தம்முடைய ஒரேபேறான குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

பாவ மாம்சத்திலே, பாவத்தை பலிசெலுத்தும் வழிமுறைகளினால் தேவனுடைய பிள்ளைகளும், நித்திய சத்தியத்தில் நிலைகொண்டிருந்து நித்தியமாக வாழ்வதற்கு; ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவானவர், தம்முடைய ஒரேபேறான குமாரனின் மூலம், வெளிப்படுத்தின அன்பினால் தேவனுடைய நித்திய சத்தியத்தினுடைய புத்திமயக்கத்தின் பைத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது.

தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. 1Co 1:25

நித்திய சத்தியத்திலே நிலைகொண்டிருக்கிற ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவானவர், தம்முடைய நித்திய சத்தியத்தினுடைய புத்திமயக்கத்தின் பைத்தியத்தை, தம்மைத்தாம் மறுதலிக்காமல் ஒரே மனமாயிருக்கிறார்; நாம் நித்திய சத்தியத்தை மறுதலித்தால், ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவானவரும் நம்மை மறுதலிப்பார்,

தேவனுடைய பைத்தியம் வெளிப்பட்டிருக்கிறதை அறிந்து உணர்ந்து கொண்டவர்கள்,தங்களூடைய வாழ்கையில் தேவனுடைய நித்திய சத்தியத்தினுடைய புத்திமயக்கத்தின் பைத்தியத்தை மறுதலிக்காமல், பாவ மாம்சத்திலே பாவத்தை பலிசெலுத்தும் வழிமுறைகளினால் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறவர்களூடைய ஞானம் மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது.

தேவனுடைய பிரமாணங்கள் மூலமாக / இயேசு கிறிஸ்துவைப் போல, பாவ மாம்சத்திலே, பாவத்தை பலிசெலுத்தும் வழிமுறைகளினால், தேவனுடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்துகிறதன் மூலமாக தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள்: பரமண்டலங்களிலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து, விண்ணப்பங்களை செலுத்துகிறபோது அவைகளுக்கு கிருபையாக தேவன் பதில் அளிக்கிறார்.

தேவன் உலகத்தில் மாம்சத்தின்படி உள்ள மனுஷருடைய ஞானிகளையும், வல்லவர்களையும், பலமுள்ளவைகளையும், வெட்கப்படுத்தும்படி தேவனுக்காக / தேவனுடைய நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக உலகத்தில் பைத்தியமானவைகளையும்,

இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டு தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுகிற கிரியைகள்: தேவனுடைய பலவீனம்; இந்த தேவனுடைய பலவீனமான காரியம் மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. Ecc_9:3-9;Ecc_7:23-29;Mat_6:27-34, 1Ki_3:11-12, 1Ki_11:1-8; 2Ki_23:13-14; Rom_1:22; 1Co_2:1-7; 1Co_2:8-12; 1Co_2:13-16; 1Co_1:20;Job_11:4-11,Job_28:1-11, Job_28:12-23, Job_28:24-28;

15-8 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்: தேவ நீதியினால் பிழைக்கிறதற்கு தேவையான தேவநீதியின் வசனங்களை தேடுவதற்காக , பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று ஒருவன் தன்னுடைய உள்ளத்திலே சொல்லாமல் தேவநீதியின் வார்த்தையை தனக்கு சமீபமாக தன்னுடைய வாயிலும் தன்னுடைய இருதயத்திலும் வைத்துக் கொண்டிருந்து சிந்திக்கிறபோது அவனுக்கு வெளிப்படுகிறது:-

கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது, இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்களின் வரிசையில் வந்து சேர்ந்து, தேவர்கள் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுவார்கள்.

இவைகளைக் குறித்து அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகம் தலைப்பு நான்கு கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள் பொருளடக்கம் மூன்று கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் பகுதியில் பார்க்கவும்.


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries