தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 8-0

8-0-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய நியாயப்பிரமாணத்தில்  அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின் பிரமாணங்கள் V/S தீர்க்கதரிசனங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின் ஆகமங்கள்:-

8-1-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணம் தொடர்புடைய பதின்மூன்று புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின்  பிரமாணங்கள்

8-2-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்களின் தொடர்புடைய பதினேழு புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின் ஆகமங்கள்

8-1-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணம் தொடர்புடைய பதின்மூன்று புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின்  பிரமாணங்கள்:-

8-1-1 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணம் தொடர்புடைய பதின்மூன்று புஸ்தகங்களில் அடங்கியுள்ள பாவிகளின் பிரமாணத்தின் மூலம் எழுதிக்கொடுத்த  பத்து கட்டளைகளின் தெடர்புடைய வார்த்தைகளின் பிரமாணங்கள்  

8-1-2- முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணம் தொடர்புடைய பதின்மூன்று புஸ்தகங்களில் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் தெடர்புடைய பிரமாணங்கள்

Deu 4:13  நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

Deu 4:14  நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.

Deu 5:26  நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?

Deu 5:27  நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

Deu 5:28  நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி; இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.

Deu 5:29  அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

Deu 5:30  நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.

Deu 5:31  நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.

Deu 5:32  உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.

Deu 5:33  நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

8-2-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்களின் தொடர்புடைய பதினேழு புஸ்தகங்களில் அடங்கியுள்ள இரண்டு வகையான வார்த்தைகளின் ஆகமங்கள்:-

8-2-1 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய தீர்க்கதரிசனங்களின் சாட்சியின் ஆகமங்கள்:-

8-2-2 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய தீர்க்கதரிசிகளின்  தீர்க்கதரிசன ஆகமங்கள்:-

Isa 8:16  சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.

Isa 8:17  நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

Isa 8:18  இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

Isa 8:19  அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

Isa 8:20  வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

8-3-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணம் தொடர்புடைய பதின்மூன்று புஸ்தகங்களில் அடங்கியுள்ள பாவிகளின் பிரமாணமாக  எழுதிக்கொடுத்த  பத்து கட்டளைகளின் தெடர்புடைய வார்த்தைகளின் பிரமாணங்கள்  

8-3-1 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய நியாயப்பிரமாண புஸ்தகங்களில் பாவிகளின் பிரமாணமாக  எழுதிக்கொடுத்த இரண்டு சாட்சிப்பலகைகளில் எழுதப்பட்ட பத்துக் கற்பனைகள்:-

8-3-2 இரண்டு சாட்சிப்பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே அடங்கியுள்ள பத்துக் கற்பனைகளை, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பதிந்த எழுத்துக்களால் தேவனே எழுதிக்கொடுப்பதற்கு காரணங்கள்

8-3-3 இரண்டு சாட்சிப்பலகைகள் மோசேயினால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே அடங்கியுள்ள பத்துக் கற்பனைகளை, மோசேயினுடைய விரலினால் எழுதப்பட்ட பதிந்த எழுத்துக்களால் மோசே தீர்க்கதரிசி எழுதிக்கொடுப்பதற்கு காரணங்கள் 

8-3-4 நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள பத்துக் கற்பனைகளை ஜெயங்கொண்டவர்கள், நியாயப்பிரமாண புஸ்தகங்களில் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணத்திற்கு; முன்னேறி செல்லுவதற்கு தேவனுடைய பிரமாணம்

8-3-5 இரண்டாம் உடன்படிக்கையின் புதிய  ஏற்பாடு மூலம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பதிந்த எழுத்துக்களால் தேவனே ஆபிரகாமின் சந்த்திகளின் இருதயத்தில் எழுதிக்கொடுக்கிறார்:-  

8-3-1 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு தொடர்புடைய நியாயப்பிரமாண புஸ்தகங்களில் பாவிகளின் பிரமாணமாக  எழுதிக்கொடுத்த இரண்டு சாட்சிப்பலகைகளில் எழுதப்பட்ட பத்துக் கற்பனைகள்:-

1  தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: Exo 20:1 

Exo 20:2   உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

Exo 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

2 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; Exo 20:4   

Exo 20:5   நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

Exo 20:6  என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

3 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். Exo 20:7 

4  ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; Exo 20:8 

Exo 20:9  ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

Exo 20:10  ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Exo 20:11  கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

5 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. Exo 20:12 

6 கொலை செய்யாதிருப்பாயாக. Exo 20:13 

7 விபசாரம் செய்யாதிருப்பாயாக. Exo 20:14 

8 களவு செய்யாதிருப்பாயாக. Exo 20:15 

9 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. Exo 20:16   

10 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். Exo 20:17

Exo_31:18; Exo_24:12-18Exo_32:15-20, Exo_34:1-4, Exo_34:28-29; Deu_4:13-14, Deu_5:22, Deu_9:8-12;

8-3-2 இரண்டு சாட்சிப்பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே அடங்கியுள்ள பத்துக் கற்பனைகளை, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பதிந்த எழுத்துக்களால் தேவனே எழுதிக்கொடுப்பதற்கு காரணங்கள்;-

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தீர்க்கதரிசியான மோசேயின் மூலமாக எகிப்திலிருந்து புறப்பட்டபோது முதலாவது கொடுத்த பஸ்கா பண்டிகையின் பிரமாணங்களையும்,

இரண்டாவது கொடுத்த ஓய்வு நாளின் பிரமாணங்களையும், பின்பற்றாமல் தேவனுக்கு எரிச்சலை மூட்டி, தேவனை கோபம் உண்டாக்கின படியால்; மூன்றாவதாக  நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் தேவன் அவர்களுக்குக் எழுதிக் கொடுத்தார்.

கர்த்தர்  மோசேக்கு கொடுத்த  இரண்டு சாட்சிப்பலகைகள்: இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

Rom 3:20  இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

 Exo_24:12-18, Exo_31:18 , Exo_32:15-16, Exo_32:19Deu_4:1-5, Deu_4:6-10, Deu_4:11-14, Deu_5:22, Deu_9:8-12; Eze_20:5-11, Eze_20:12-16,Eze_20:17-21, Eze_20:22-25,1Ti_1:7-11; Gal_4:21-25 ,Gal_4:26-31,Heb_9:14-18

8-3-3 இரண்டு சாட்சிப்பலகைகள் மோசேயினால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே அடங்கியுள்ள பத்துக் கற்பனைகளை, மோசேயினுடைய விரலினால் எழுதப்பட்ட பதிந்த எழுத்துக்களால் மோசே தீர்க்கதரிசி எழுதிக்கொடுப்பதற்கு காரணங்கள்:- 

Exo 32:15  பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

Exo 32:16  அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

Exo 32:17  ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

Exo 32:18  அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.

Exo 32:19  அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

Exo 32:20  அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

Exo 34:1  கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

Exo 34:2  விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.

Exo 34:3  உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார்.

Exo 34:4  அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.

Exo_32:1-6,Exo_32:7-12,Exo_32:13-18,Exo_32:19-24, Exo_32:25-30,Exo_32:31-35,Exo_34:1-4, Exo_34:5-10;Exo_34:11-15; Exo_34:16-20; Exo_34:21-26;Exo_34:27-30; Exo_34:31-35;  

Deu_9:8-12; Deu_10:1-5Deu_10:6-10;

மோசே தீர்க்கதரிசி மலையிலிருந்து இறங்கிவருகிறபோது; தேவனாகிய கர்த்தர்  மோசேக்கு கொடுத்த  சாட்சிப்பலகைகள் இரண்டும் மோசேயின் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும்,

அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது. மோசே தீர்க்கதரிசி பாளயத்துக்குச் சமீபித்து வந்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை கன்மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டார்.

மோசே தீர்க்கதரிசியினால் கன்மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போடப்பட்ட இரண்டு சாட்சிப்பலகைகளிலிருந்து சிதறடிக்கப்பட்டு சீரழிந்து,  பல இடங்களில் சிதறி விழுந்த அந்த இரண்டு சாட்சிப்பலகையினுடைய எழுத்துக்கள்: ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்களில் சிதறிக்கிடக்கிறது;

அவைகளை பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணத்திற்கு; முன்னேறி பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறுதலாயிருக்கிற, பரிசுத்த ஆவியின் மூலம் சிந்தித்து, தியானிக்கும்போது வேதாகமத்தின் புஸ்தகங்களில்

ஞான அர்த்தமுள்ளவைகளாக சொல்லப்பட்ட சீயோனாகிய கர்த்தருடய வேத வசனங்களிலும், எருசலேமாகிய கர்த்தருடய வாயிலிருந்து புறப்பட்ட வசனங்களிலும், பல இடங்களில் சிதறி விழுந்த அந்த இரண்டு சாட்சிப்பலகையினுடைய எழுத்துக்களை அவைகளின் உருவம் அழியாமல் மீண்டும் வாசித்து உணர முடியும்.

8-3-4 நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள பத்துக் கற்பனைகளை ஜெயங்கொண்டவர்கள், நியாயப்பிரமாண புஸ்தகங்களில் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணத்திற்கு; முன்னேறி செல்லுவதற்கு தேவனுடைய பிரமாணம்:-  

Deu 4:1  இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.

Deu 4:2  நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

Deu 4:3  பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.

Deu 4:4  ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.

Deu 4:5  நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

Deu 4:6  ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.

Deu 4:7  நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

Deu 4:8  இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?

8-3-5 எழுத்தின்படி ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு / பேய்களுக்கு படைத்தவைகளையும், பலியிட்டவைகளையும் புசித்து, எழுத்தின்படி வேசித்தனம்பண்ணுகிறவர்கள்; பிதாவின் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியாது:-

இயோசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாக இருந்து, கிறிஸ்துவை மத்தியஸ்த்தனாக வைத்து, தேவனுடன் உடன்படிக்கை செய்தபடியினால்  எகிப்தின் பாவசந்தோசங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள்: எழுத்தின்படி ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு / பேய்களுக்கு படைத்தவைகளையும், பலியிட்டவைகளையும் புசித்து,

எழுத்தின்படி வேசித்தனம்பண்ணுகிறவர்கள்; கிறிஸ்துவின் மூலம் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறுதலாயிருக்கிற, பரிசுத்த ஆவின் மூலம் வருகிற கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் வார்த்தைகளின்  பிரமாணங்களுக்குள்ளே பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.

 Deu_4:1-8Num_25:1-6,Num_25:7-13, Num_31:13-18; Psa_106:28-31; Num_31:16;

 Deu_23:4-5; Jdg_19:20-24, Jdg_19:25-29, Jdg_20:26-30, Hos_9:9-10,Hos_10:9;

8-3-6 ஆவியின்படி பொருளாசையாகிய  ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு / பேய்களுக்கு படைத்தவைகளையும், பலியிட்டவைகளையும் புசித்து, ஆவியின்படி வேசித்தனம்பண்ணுகிறவர்கள்; பிதாவின் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியாது:-

இயோசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாக இருந்து, கிறிஸ்துவை மத்தியஸ்த்தனாக வைத்து, தேவனுடன் உடன்படிக்கை செய்தபடியினால்  எகிப்தின் பாவசந்தோசங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள்: ஆவியின்படி பொருளாசையாகிய ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு / பேய்களுக்கு படைத்தவைகளையும், பலியிட்டவைகளையும் புசித்து,

ஆவியின்படி வேசித்தனம்பண்ணுகிறவர்கள்; கிறிஸ்துவின் மூலம் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறுதலாயிருக்கிற, பரிசுத்த ஆவின் மூலம் வருகிற கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் வார்த்தைகளின்  பிரமாணங்களுக்குள்ளே பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.  

8-3-7 ஞான அர்த்தமுள்ளவைகளின்படி ஞான அர்த்தமுள்ள  ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு / பேய்களுக்கு படைத்தவைகளையும், பலியிட்டவைகளையும் புசித்து, ஞான அர்த்தமுள்ளவைகளின்படி  வேசித்தனம்பண்ணுகிறவர்கள்; பிதாவின் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியாது:-

இயோசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாக இருந்து, கிறிஸ்துவை மத்தியஸ்த்தனாக வைத்து, தேவனுடன் உடன்படிக்கை செய்தபடியினால்  எகிப்தின் பாவசந்தோசங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள்:

ஞான அர்த்தமுள்ளவைகளின்படி ஞான அர்த்தமுள்ள  ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு / பேய்களுக்கு படைத்தவைகளையும், பலியிட்டவைகளையும் புசித்து, ஞான அர்த்தமுள்ளவைகளின்படி  வேசித்தனம்பண்ணுகிறவர்கள்;

கிறிஸ்துவின் மூலம் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறுதலாயிருக்கிற, பரிசுத்த ஆவின் மூலம் வருகிற கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் வார்த்தைகளின்  பிரமாணங்களுக்குள்ளே பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.  

Act_15:18-21, 1Co_8:1-4, 1Co_8:5-10, 1Co_8:11-13, 1Co_10:13-18,1Co_10:19-26, 1Co_10:27-31,1Co_6:7-10,Rev_21:7-8, Rev_22:14-15,1Co_5:1-5, 1Co_5:6-10,1Co_5:11-13,Eph_5:1-6

1Co 5:1  உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.

1Co 5:2  இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

1Co 5:3  நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,

1Co 5:4  நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,

1Co 5:5  அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

1Co 5:6  நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?

1Co 5:7  ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.

1Co 5:8  ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

1Co 5:9  விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

1Co 5:10  ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.

1Co 5:11  நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

Amo 2:5  யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Amo 2:6  மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.

Amo 2:7  அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.

Amo 2:8  அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1Co 10:7  ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.

1Co 10:8  அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

1Co 10:9  அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

1Co 10:10  அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.

1Co 10:11  இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

1Co 10:12  இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

1Co 10:13  மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

1Co 10:14  ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

8-3-8 பிதாவின் வாக்குத்தத்தம் மூலம் வருகிற ஆசீர்வாதங்களை அறிந்திருந்தும்; பூமிக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டவர்கள்; பிதாவின் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியாது:-

இயோசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாக இருந்து, கிறிஸ்துவை மத்தியஸ்த்தனாக வைத்து, தேவனுடன் உடன்படிக்கை செய்தபடியினால்,  எகிப்தின் பாவசந்தோசங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள்:

கிறிஸ்துவின் மூலம் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறுதலாயிருக்கிற, பரிசுத்த ஆவின் மூலம் வருகிற கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்  பிரமாணங்களின்  மூலம் வருகிற ஆசீர்வாதங்களை அறிந்திருந்தும்;

அவைகளை பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்காமல், பாவிகளின் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தின் நீதியினால் வருகிற பூமிக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டவர்கள்;

1 யூதா கோத்திரத்தை விட்டு பிரிந்து,  ஜாதிகளோடு கலந்த இஸ்ரவேலரின் பத்து கோத்திரங்கள்

2 ஜாதிகளோடு கலந்த எப்பிராயீம் தேசத்தை சேர்ந்த இஸ்ரவேலரின் பத்து கோத்திரங்கள்

3 ஜாதிகளோடு கலந்த சமரியா தேசத்தை சேர்ந்த இஸ்ரவேலரின் பத்து கோத்திரங்கள்

4 ஜாதிகளோடு கலந்த கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிற  ஆவிக்குரிய இஸ்ரவேலரின் பத்து கோத்திரங்கள்

ஆகிய இவர்கள் கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த எகிப்துதேசத்தாருடைய ஜாதிகளுடைய முறைமையின்படியே ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்,

மற்றும் தேவன்    அவர்களை அழைத்துப்போகிற எழுத்தின்படி கானான் தேசம்,/ ஆவிக்குரிய கானான்,  தேசமாகிய தங்களுக்கு முன்னே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றின கிறிஸ்தவர்களுடைய முறைமையின்படியே ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஜாதிகளோடு கலந்தவர்கள் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கான  பிரமாணத்தையும் / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்களையும் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.  

Jos_22:10-15; Jos_22:11-15; Jos_22:16-20; Jos_22:21-25;Jos_22:26-29; Jos_22:30-34; Jos_24:9-10;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries