தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 04


கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள்

பொருளடக்கம் ஒன்று

1-0 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்
 
1-0-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு ; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள். / அறிக்கையிடுகிறவர்களுடைய ஆத்துமா, மாயக்காரனுடைய நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
1-1-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தன்னுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருக்கிறபோது; தேவனுடைய வார்த்தைகளையும் தன்னுடைய இருதயம் விரும்புகிற வார்த்தைகளையும் கலந்து தன்னுடைய வாயினால் அறிக்கை செய்து கொண்டு, தன்னுடைய இருதயமும் மாம்சமும் விரும்புகிற மாயக்காரனுடைய நீதியாகிய மாயைகளினாலும் / பொய்யினாலும் தன்னுடைய ஆத்துமாவின் கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
 
1-2-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறவர்களுடைய வாயிலும், இருதயத்திலும் வெளிப்படுகிற மாயக்காரனுடைய கிரியைகள் ; தேவனுக்கு முன்பாக நீதி இல்லாமலும் மனிதனுக்கு முன்பாக நீதி இல்லாமலும், வெளிப்படுகிறது. ஆகையால் இவர்கள் தங்களை மனிதர்களுக்கு முன்பாக நீதிமான்களாக காட்டுகிறார்கள், இவைகளையே தன்னுடைய ஆத்துமாவின் ஆகாரமாகவும் புசித்து, மற்றவர்களுடைய ஆத்துமாவின் ஆகாரமாகவும் புசிக்க கொடுக்கிறார்கள்.
 
1-2-1 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் சமீபமாயிருக்கிறது. Jer_12:1-2, Isa_29:10-14, Eze_33:31-33, Isa_58:1-2, Isa_48:1-2, Mat_15:8-9, Mar_7:6-7, Pro_5:3-7 
 
1-2-2 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறது. Jer_18:11-12, Eze_11:21, Hos_13:6, Zec_7:12, Jer_2:25, Jer_7:23-24, Jer_17:5, Jer_16:12
 
1-2-3 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது, கள்ள தீர்க்க தரிசனங்கள் வெளிப்படுகிறது. . Jer_14:14,Jer_23:16-17,Jer_23:28-32,Eze_13:1-8,Eze_13:9-16,Eze_13:17-23,Eze_14:7-10 ,1Jo_2:3-6 
 
1-2-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது; தங்களுடைய மாயக்காரனுடைய பொய்களும் மாயைகளும் திரளான ஆற்று வெள்ளம் போல கழுத்து வரை கரை புரண்டு வந்து, மனிதனுடைய வாயிலே தேவன் போட்ட கடிவாளத்தைப் போல அவனை அலைக்கழிக்கிறது. . Jer_9:3-6, Jer_9:8-9, Isa_41:21-24, Isa_28:14-18, Isa_5:18-22, Isa_8:5-8, Isa_30:28 
 
1-2-5 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது ; கிழக்கு திசையாரின் மாயைகளின் சாஸ்திரங்களுக்கு இருதயம் அடிமைப்பட்டிருந்து அவைகளை கக்குகிறது /வாந்தி பண்ணுகிறது. . Isa_2:5-6, Job_15:2-3, Job_15:31-35, Job_27:21-23, Hos_12:1, Hos_8:7
 
1-2-6 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது ; தங்களுடைய வாய் அர்த்தமில்லாத / உபயோகமில்லாத திரளான வார்த்தைகளை கக்குகிறது / கடல் அலைகளினால் கரையில் ஒதுங்குகிற அழுக்கைப்போல தன்னுடைய வாய் ஆலோசனைகளை கக்குகிறது. Isa_28:8-9, Isa_57:20-21, Jud_1:10-13 , Rev_12:15-17 
 
1-2-7 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது, தங்களுடைய மனம் விரும்புகிற பரலோக இராஜ்ஜியத்தின் பதவிகளை எடுத்துக் கொள்ளுவற்கு முயற்சி செய்து கொண்டு, பொய்யான மாயைகளின் தரிசனங்களும் திரளாக பொங்கி வருகிறது. Job_8:13-19, Job_15:31-35, Isa_33:14-17, Mat_24:45-51, 1Sa_12:19-21, Deu_32:16-21, Jer_16:19, Rom_8:21 
 
1-2-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும்போது ; தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்கள் திரளாக பொங்கி வருகிறது. . Isa_5:18-22,Isa_28:14-19,Isa_30:27-28,Jer_2:4-9, Jer_8:19, Psa_24:1-6, Psa_119:37, Psa_144:11-15, Jon_2:8 
 
1-2-9 தேவனுடைய வார்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும்போது, மனிதர்களுக்கு முன்பாக தங்களை நீதிமான்களாக வெளிப்படுத்திக் கொண்டு மனிதர்கள் மூலம் வரும் மகிமையை தேடுவது. Mat_23:7, Joh_7:18, Joh_12:43, Jud_1:16-19, Isa_2:5-9, Jer_22:17
 
1-2-10 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது ; சபைகளின் மூலம் வருகிற அதிகார பதவிகளுக்கு போராடுவது. . Isa_7:1-7, Isa_7:10-15, Isa_8:5-10, Isa_8:11-15, Amo_5:14-15
 
1-2-11 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு; அவைகளை தங்களுடைய வாய்க்கும் மட்டும் சமீபமாக வைத்திருப்பவர்களுடைய ஊழிய அழைப்பு மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டு நியமிக்கப்படுகிறது. . Isa_7:21-22, Exo_29:1, 2Ch_13:9-11, 2Ki_17:32-34, Mat_23:1-8, Mat_19:12
 
1-3-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகள் தன்னுடைய இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறபோது; தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமல், தன்னுடைய இருதயத்தின் சுயமான ஆலோசனைகளையும், தேவனுடைய வார்த்தைகளையும் கலந்து தன்னுடைய வாய் அறிக்கை செய்து மனிதனுடைய கற்பனைகளை உபதேசங்களாக வெளிப்படுகிறது.
 
1-4-0 தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது; தங்களுடைய வாய் மனிதனுடைய கற்பனைகளை, தங்களுடைய மூல உபதேசங்களாக அறிக்கை செய்து, ஒவ்வொருவருடைய இருதய சிந்தனைகளுக்கு ஏற்றபடி தேவனுடைய வார்த்தைகளில் மார்க்க பேதங்களையும், பிரிவினைகளையும் உருவாக்கிக் கொண்டு, தங்களுடைய மூல உபதேசங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது.
 
1-5-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகள் தன்னுடைய இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறபோது கீழே குறிப்பிடுகிற காரியங்கள் சம்பவிக்கிறது.
 
1. தேவனுடைய தீர்க்க தரிசனங்களின் தொடர்புடைய மூன்று காலங்களை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது.
 
2. தேவ நீதி மற்றும் மனுஷ நீதி தொர்புடைய தேவனுடைய மூல உபதேசங்களை அறிந்து கொள்ளாமல் இருப்பது.
 
3. தன்னுடைய இருதயத்தில் சாட்சியிடுகிற மாயக்காரனுடைய மாயைகளின் வெளிப்பாடுகளை, சாத்தானுடைய வாயிலிருந்து புறப்படுகிற திரளான ஆற்று நீரைப்போல தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்டு கரை புரண்டோடுகிறது.
 
4. மாயக்காரனுடைய ஆத்துமாவிற்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் தொடங்குகிறது.
 
1-5-1 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது, தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் பெருகுகிறது. Amo_8:11-14, Eze_4:16-17, Eze_5:16-17, Eze_14:13-14, Eze_14:21, Lev_26:26 , Isa_3:1-7, Isa_5:13, Psa_105:16, Amo_4:4-8 
 
1-5-2 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, தங்களுடைய வாயினால் மட்டும் தேவனுடைய நாமத்தை அறிக்கையிடுகிற தேவ ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. . Lam_1:11, Lam_4:4-5, Jer_15:2, Jer_24:8-10, Jer_29:17-18, Jer_44:12-13, Jer_44:27, Lam_5:10, Eze_5:12, Isa_51:17-19
 
1-5-3 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தீர்க்க தரிசிகளின் இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது, அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. . Jer_14:12-13, Jer_11:20-22, Jer_14:15-16 , Jer_14:18, Isa_55:1-3, Jer_14:1-6, Jdg_5:11 
 
1-5-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, தேவனுடைய நாமத்தை தரித்துக் கொண்ட தேவ ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. Isa_14:30, Eze_6:11-12, Job_24:5, Job_15:23, Jer_16:4-5, Jer_18:21, Jer_34:17, Eze_12:15-16 
 
1-5-5 தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சத்தை உணர்ந்து கொண்டவர்கள், எப்பொழுது மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக்கொள்ளுகிறார்களோ, அப்பொழுது தேவனுடைய வார்த்தைகளின் வல்லமைகள் அவர்களுடைய பஞ்சத்தை நீங்கி நித்தியமான ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது. Exo_20:6, Isa_55:10-11, Psa_29:4, 1Sa_3:19, Psa_119:140, Jer_23:28-29, Mic_2:7, Zec_1:2-6, Mat_24:35, Mar_13:31, Luk_21:33, Heb_4:12, Rev_19:13, Psa_19:7, Deu_32:45-47, Gal_3:15-17
 
1-6-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருக்கும்போது ; தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா விரும்பி புசிக்கும் சில மாயைகளின் அப்பங்கள்.
 
1-6-1 புளிப்புள்ளஅப்பங்கள் :-
 
பரிசேயர் மற்றும் சதுசேயரின் உபதேசங்கள். 
 
Mat_16:11-12, Mar_8:15, Luk_12:1, Gal_5:9, Mar_8:14-15, 1Co_5:6-8
 
1-6-2 மனிதனுடைய கற்பனைகளாகிய அப்பங்கள்:- 
 
மனிதன் உருவாக்கின உபதேசங்கள் Mat_15:8-9, Mar_7:6-8, Lev_26:26, Isa_29:10-14 
 
1-6-3 சொந்தமாக உருவாக்கின அப்பங்கள்:-
 
சொந்தமாக உருவாக்கின உபதேசங்கள் Isa_4:1, Jer_7:18, Isa_28:7-13, Jer_44:17-18
 
1-6-4 மனுஷரால் உருவாக்கப்பட்ட சபையின் மூல உபதேசமாகிய அப்பங்கள்:-
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10 
 
2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38 
 
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல் Mar_16:16 
 
4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4
 
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25 
 
6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10 
 
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27, Isa_4:1
 
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல் Mar_16:15
 
1-6-5 இரகசியமான அப்பங்கள் :- 
 
வேத வசனங்களின் இரகசியங்களை மட்டும் தேடி தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. Pro_9:13-18, Pro_5:3-7, Pro_7:1-5, Pro_2:16-20, Pro_6:23-24, Pro_22:14, 1Co_13:1-2 
 
1-6-6 கல்லுகளை அப்பங்களாக மாற்றி புசிப்பது :- 
 
உபவாசத்திற்கு பின்பு தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் திரளாக பொங்கி வருகிற பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்களை தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. Luk_4:1-4, Isa_58:1-7 
 
1-6-7அசுத்தமான அப்பங்கள் :- 
 
தசமபாகம் / காணிக்கை /பொருத்தனை / ஆகிய தேவனுடைய காரியங்களில் அவைகளின் பிரமாணங்களின் படி தேவனுக்கு செலுத்தாமல் தேவனை வஞ்சிக்கிறபோது; தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி தேவனையும் மனிதனையும் ஏமாற்றுவது. Mal_1:6-8, Mal_1:12-14, Psa_69:21-24, Rom_11:7-10, 1Co_10:21-23, 1Co_11:27-32 
 
1-6-8 மேஜை யிலிருந்து கீழே விழுந்த அப்பங்கள் :-
 
பரிசுத்தவான்கள் செய்த தவறுதல்களை / பாவங்களை தானும் செய்து, தன்னுடைய கிரியைகளை நியாயப்படுத்துவது. 1Sa_3:19, 2Ki_10:10, Joh_7:8-10, Rom_3:7
 
1-7-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து, அவைகளை தங்கள் வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டு புசிக்கிறவர்கள்; எப்பொழுது மனந்திரும்பி/ பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத் திருக்கிறார்களோ, அப்பொழுது தங்களுடைய இருதயத்திலும் தேவனுடைய வார்த்தைகளை புசித்து தங்களுடைய ஆத்துமாவில் தேவ நீதியில் பிழைக்கவே பிழைக்கலாம். Rev_3:19-22, Heb_9:1-4, Heb_9:6-8, Heb_9:9-10, Heb_9:13, Heb_9:11-12, Heb_9:14, Heb_10:19-22, 1Pe_3:18-19, Rom_8:1-4, Rom_7:22-25, Job_28:12-14, Job_28:20-22 
 
1-8-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து தேவனைத் தேடி கொண்டிருக்கிறவர்களை, தேவன் நாள் முழுவதும் கரம் நீட்டி கூப்பிடுகிறார்; ஆனால் அவர்களோ தேவனுடைய கரத்தை நோக்கிப் பார்த்து, தேவனுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாமல், தங்களுடைய இருதய ஆலோசனைகளை பின்பற்றிக் கொண்டு, நாள் முழுவதும் தேவனை கோபப்படுத்துகிறபடியால், அவர்கள் விரும்புகிற நம்பிக்கையின் வாசலாகிய ஆகோரின் பள்ளத்தாக்கிற்கு தேவன் கொண்டு வந்து, தன் இளவயதில் புசித்த புலம்பலின் விருந்தை கொடுத்து, புலம்பலின் பாட்டை மீண்டும் பாட வைக்கிறார்.
 
பாட்டு:- நீ எங்களை கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார். Rom_10:21, Isa_65:2-7, Pro_1:23-33, Jer_18:15-17, Zec_7:9-14, Isa_65:10-12, Hos_2:13-16, Jos_7:22-26


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries