தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 1

1-0 உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்தச் சந்ததியிலே; தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சி இந்த பூமியில் சமீபித்திருக்கிறது என்று அத்திமரத்தின் உவமையினாலே  கற்றுக்கொள்ளுங்கள்:- 


1-1 உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்தச் சந்ததியிலே; தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சி இந்த பூமியில் சமீபித்திருக்கிறது என்று அத்திமரத்தின் உவமையினாலே  கற்றுக்கொள்ளுங்கள்:- 

Mat_24:32-38, Mat_24:39-44, Mar_13:28-33; Luk_21:29-36; 

Luk 21:29  அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். 

Luk 21:30  அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். 

Luk 21:31  அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். 

Luk 21:32  இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Luk 21:33  வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. 

Luk 21:34  உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 

Luk 21:35  பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். 

Luk 21:36  ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். 

 1-2 உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்த ஜனத்தின்மேல் நீதியைச் சரிக்கட்டுவதற்காக,  எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் கோபாக்கினையும் இந்தச் சந்ததியிலே; உண்டாகும்:- 

Luk 21:20  எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 

Luk 21:21  அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். 

Luk 21:22  எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. 

Luk 21:23  அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். 

Luk 21:24  பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். 

Luk 21:25  சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். 

Luk 21:26  வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். 

Luk 21:27  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். 

Luk 21:28  இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். 

எருசலேமின் தேவாலயம் பூமியின் மத்திய பகுதியிலும் மனிதனுடைய சரித்திரத்தின் மத்திய காலகட்டத்திலும்  கட்டப்பட்டிருக்கிறது.

நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமிற்கு தேவன் அருளிய வாக்குத்தத்தத்தின் மூலமாக இஸ்ரவேல்/ யூதர்களூக்கு  கிடைத்த இடம், இஸ்ரவேல் தேசம்: இந்த இடம் பூமியின் மத்திய பகுதியில் அமைந்திருக்கிறது.

இஸ்ரவேல் தேசத்தில் இருக்கிற எருசலேமின் தேவாலயம் மனிதனுடைய சரித்திரத்தின் மத்திய காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது,/ஆதாம் முதல் இன்று வரை உள்ள ஆறாயிரம் ஆண்டின் மத்திய பகுதியான மூன்றாயிரம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

Mat_24:32-38, Mat_24:39-44, Mar_13:28-33; Luk_21:29-36; 


1-3 உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்த சந்ததியிலே; கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்களை நீதியின் கிரியைகளின் மூலம் அடையாளங்களை போட்டு, பகுத்து பிரித்து, இனம் கண்டரிதல்:- 

உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்த சந்ததியிலே; புறஜாதிகளான கிறிஸ்தவர்களின் காலம் நிறைவேறி முடிவடைகிறது,

ஆனாலும் கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்களை நீதியின் கிரியைகளின் மூலம் அடையாளங்களை போட்டு, பகுத்து பிரித்து, இனம் கண்டரிகிற நாட்களிலே புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் மீண்டும் மனம்திரும்பி தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், தொழுதுகொள்ளுகிறதற்காக 

ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதிகளான கிறிஸ்தவர்களூக்கும்,ஆவிக்குரிய யூதர்கள் இல்லாத  புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் நாற்பத்திரண்டு மாதங்கள்  தேவனுடைய கிருபையினால் அதிகமாக கொடுக்கப்படுகிறது 

Rev 11:1  பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார். 

Rev 11:2  ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். 

 

1-4 கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்கள்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின தீர்க்கதரிசன வார்த்தைகளை, பரிசுத்த ஆவியானவர் உதவி இல்லாமல்; மனுஷருடைய சித்தத்தினாலே வாசித்து  தேவனுடைய  இராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறபோது இடறிவிழுகிறார்கள்:- 

2Pe 1:19  அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். 

2Pe 1:20  வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 

2Pe 1:21  தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 

1-5 கிறிஸ்துவின்  விசுவாசத்தில் உடன்படிக்கை செய்தவர்கள்: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசின தீர்க்கதரிசன வார்த்தைகளை, பரிசுத்த ஆவியானவர் உதவி இல்லாமல்; மனுஷருடைய சித்தத்தினாலே  தேவனுடைய வார்த்தைகளில் உள்ள இரகசியங்களை தேடி வாசித்து அவைகளின் மூலம் தேவனுடைய   இராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறபோது இடறிவிழுகிறார்கள்:- 

Rom_9:31-33; Psa_118:22-23; Isa_8:8-15, Isa_28:11-16; Mat_21:33-37, Mat_21:38-44 ; 1Pe_2:4-8;  2Sa_5:4-9,1Ch_11:4-9;2Sa_24:16-21,  2Sa_24:22-24,  1Ch_21:14-15 , 1Ch_21:18, 1Ch_21:28, 2Ch_3:1, Jos_15:63, Jdg_1:21,1Ki_9:20-21, 2Ch_8:7-8, Ezr_9:1-2,  Isa_37:30-32;2Ki_19:29-33


1-6 சீயோனாகிய  வேதம்,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்கள், ஆகியவைகளின்  பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின்  விசுவாசத்தில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறிவிழுகிறவர்கள்  ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்திலிருந்து மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை  ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள்:- 


சீயோனாகிய  வேதம்,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்கள், ஆகியவைகளின்  பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின்  விசுவாசத்தில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறிவிழுகிறவர்கள்  ஆவி, ஆத்துமாவின் கிரியைகளில் குருடர்களாகவும்,  சப்பாணிகளாகவும்,  குஷ்டரோகிகளாகவும், செவிடர்களாகவும்,சிலர் ஆவி, ஆத்துமாவில் மரித்தோர்களாகவும், இருக்கிறவர்கள் ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்திலிருந்து மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை  ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள் 


இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்திலிருந்து மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை  ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள். 

 

1-7 சீயோனாகிய  வேதம்,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்கள், ஆகியவைகளின்  பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின்  விசுவாசத்தில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்தில்  இடறிவிழுந்து  குருடர்களாகவும்,  சப்பாணிகளாகவும், இருக்கிறவர்கள்: சீயோன் கோட்டைக்கு வருகிறவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்:- 


சீயோனாகிய  வேதம்,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்கள், ஆகியவைகளின்  பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின்  விசுவாசத்தில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து ஆவி, ஆத்துமாவின் கிரியைகளில் குருடர்களாகவும்,  சப்பாணிகளாகவும்,  குஷ்டரோகிகளாகவும், செவிடர்களாகவும்,சிலர் ஆவி, ஆத்துமாவில் மரித்தோர்களாகவும், இருக்கிறவர்கள் ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்தில்  இடறிவிழுந்து கொண்டிருக்கிறார்கள். 


இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரத்திலிருந்து மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை  ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள். 


சீயோன் கோட்டைக்கு/ சீயோனாகிய  வேதம்,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்களூக்கு,/  தேவனுடைய ஆலயத்திற்கும், பலிபீடத்திற்கும், வருகிறவர்கள்   காணிக்கை, தசமபாகம், பொருத்தனைகளை செலுத்தும்போது, இடறிவிழுந்த குருடர்களாகவும்,  சப்பாணிகளாகவும், இருக்கிறவர்கள்: தானம்  தர்மங்களை பெற்றுக்கொண்டு சீயோன் கோட்டையாகிய/ சீயோனாகிய  வேதத்திற்கும்  ,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்களூக்கும், யாரும் உரிமை கோரி தங்களுடைய கட்டுப்பாட்டில்  எடுத்துக்கொள்ளாதபடி காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

சீயோன் கோட்டையாகிய  / சீயோனாகிய  வேதத்திற்கும்  ,மற்றும்  எருசலேமாகிய  கர்த்தருடைய  வசனங்களூக்கும், வந்து சேர்ந்து  அவைகளில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த அதிகாரங்களை சுதந்தரித்துக்கொள்ள  வருகிறபோது: குருடரும் சப்பாணிகளும் அவர்களை தடைசெய்து, அவர்களுடைய விசுவாசங்களை திசைதிருப்பி, சீயோன் கோட்டைக்கு வருகிறவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள்: தங்களுடைய வருமானங்களை இழந்து போகாதபடிக்கு, தங்களூடைய விசுவாசங்களின் வழி முறைகளை பின்பற்றுமாறு ஆலோசனைகளை சொல்லி, மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறார்கள்.



Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries