தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 15


 ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.

பொருளடக்கம் 5-0

5-0 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும்,  முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய  தலையாகவும்,  மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-  

5-1 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபடியால், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும்,  முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய  தலையாகவும்,  மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-  

5-2 கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து,   தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை தங்களுடைய அறிவு ,புத்தி, ஞானம், ஆகிய இவைகளில் பூரணமாக சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள்:  தலையாகிய கிறிஸ்துவின் 1,44,000  சரீர அவயவங்களாக  முழுதும், இசைவாய்க் கூட்டி இணைக்கப்படுகிறபோது ,  முழு சரீரவளர்ச்சியாகிய  முதற்பேறானவர்களின் சபை வெளிப்படுகிறது:- 

5-3 தேவனுடைய புத்திரர்கள்: தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, மாயையின்  அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு வெளிப்படுவதற்கு; சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருந்து, தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது :-

5-4 தேவனுடைய புத்திரர்களாக பிறந்தவர்கள்:தங்களுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, இரட்சிப்பின் வஸ்திரத்தை காத்துக்கொள்ளூகிறபோது; மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தின் மாயைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்:- 

5-0 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும்,  முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய  தலையாகவும்,  மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-  

5-1 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபடியால், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும்,  முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய  தலையாகவும்,  மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-  

Eph 1:17  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், 

Eph 1:18   தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; 

Eph 1:19   தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். 

Eph 1:20   எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 

Eph 1:21   அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, 

Eph 1:22   எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 

Eph 1:23   எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். 

Heb 12:22  நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், 

Heb 12:23   பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 

Heb 12:24   புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 

Heb 12:25   பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? 

Heb_12:23-24;Rev_3:19-22,  Rev_14:1-5; Eph_4:7-12, Eph_4:13-16; Joh_20:17; Eph_1:1-7; Eph_1:8-15; Eph_1:16-19; Eph_1:20-23; 

 Psa_22:16-22;Heb_2:5-10 , Heb_2:11-14, Heb_2:15-18, Mat_12:50, Mat_25:40, Mat_28:10; Rom_8:29; Col_1:14-16, Col_1:17-21,

  1Co_15:20-28; 1Co_15:45-50;1Co_15:51-54;

5-2 கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து,   தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை தங்களுடைய அறிவு ,புத்தி, ஞானம், ஆகிய இவைகளில் பூரணமாக சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள்:  தலையாகிய கிறிஸ்துவின் 1,44,000  சரீர அவயவங்களாக  முழுதும், இசைவாய்க் கூட்டி இணைக்கப்படுகிறபோது ,  முழு சரீரவளர்ச்சியாகிய  முதற்பேறானவர்களின் சபை வெளிப்படுகிறது:- 

Eph 4:14  நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், 

Eph 4:15   அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். 

Eph 4:16   அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. 

Eph 4:17   ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். 

Eph 4:18   அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; 

Eph 4:19   உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 

Eph 4:20   நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 

Eph 4:21   இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 

Eph 4:22   அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 

Eph 4:23   உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 

Eph 4:24   மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். 

Eph 4:25   அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். 

Eph_4:13-16;Joh_1:12-14;Joh_3:14-18, Jam_1:16-18; 2Th_2:13-14;1Pe_1:1-5 , 1Pe_1:6-10 ,1Pe_1:11-15 ,1Pe_1:16-20 ,1Pe_1:21-25 

,Heb_6:16-20,  Heb_7:11-15, Heb_7:16-20, Heb_7:21-28,  Heb_8:1-6, Heb_8:7-10,Heb_8:11-13,   Heb_9:1-6, Heb_9:7-12, Heb_9:13-18; 

Heb_9:19-24,Heb_9:25-28,  Heb_10:1-6, Heb_10:7-14, Heb_10:15-20, Heb_10:21-27, Heb_10:28-33, Heb_10:34-39,   

5-3 தேவனுடைய புத்திரர்கள்: தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, மாயையின்  அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு வெளிப்படுவதற்கு; சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருந்து, தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது :-

Rom 8:16  நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். 

Rom 8:17   நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 

Rom 8:18   ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 

Rom 8:19   மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 

Rom 8:20   அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 

Rom 8:21   அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 

Rom 8:22   ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 

Rom 8:23   அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். 

Rom_8:16-23,Rom_8:24-30, Rom_9:15-18;  Isa_66:1-5;Isa_66:6-10;  Isa_54:1-5;   Isa_54:6-10; Gal_4:22-28; Rev_12:1-5;

Joh_17:1-5, Joh_17:6-10,Joh_17:11-15, Joh_17:16-20,Joh_17:21-23, Joh_17:24-26,

5-4 தேவனுடைய புத்திரர்களாக பிறந்தவர்கள்:தங்களுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, இரட்சிப்பின் வஸ்திரத்தை காத்துக்கொள்ளூகிறபோது; மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தின் மாயைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்:- 

Ecc 9:7  நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். 

Ecc 9:8  உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. 

Ecc 9:9  சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. 

Ecc 9:10   செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 

Ecc 9:11   நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். 

Ecc 9:12   தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். 

Ecc_9:1-6, Ecc_9:7-12, Ecc_8:5-6,Mal_2:13-16; Mal_2:1-6; Mal_2:7-12; Joh_5:21-29; Rom_8:1-8,Rom_8:9-15,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries