தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 6-0

6-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்:-

6-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; காணிக்கை,தசமபாகம் செலுத்துவதினால் வருகிற சாபங்கள்:- 

6-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; காணிக்கை, தசமபாகம் செலுத்துவதினால் வருகிற ஆசீர்வாதங்கள் :-

6-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; காணிக்கை,தசமபாகம் செலுத்துவதினால் வருகிற சாபங்கள்:- 

Mat 5:20  வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Mat 5:21  கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Mat 5:22  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.

Mat 5:23  ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,

Mat 5:24  அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

Mat 5:25  எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

Mat 5:26  பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

Mal 3:8  மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

Mal 3:9  நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.

Mal 3:10  என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Deu 28:23  உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.

Deu 28:24  உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.

Mal_3:8-10, Deu_28:12, Deu_28:23-24 ,Mat_5:20-26Mat_18:18-20Mal_2:1-7; Mat_23:2-4, Mat_23:13; Luk_18:10-14,  Mal_1:13;Jer_6:14-18,Jer_8:8-11,Isa_1:2-6; Jer_8:19-22,Hag_1:2-9;

6-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; காணிக்கை, தசமபாகம் செலுத்துவதினால் வருகிற ஆசீர்வாதங்கள் :-

Pro 3:9  உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

Pro 3:10  அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

Deu 28:11  உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

Deu 28:12  ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

Deu 28:13  இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,

Deu 28:14  இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.

Isa 50:3  நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.

Isa 50:4  இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

Mal_3:8-10, Deu_28:12, Isa_50:4; Mal_2:1-7;Gen_14:18-20, Heb_7:1-5,Gal_3:16-18; Pro_3:9-10; 2Co_9:6-11, Isa_55:10-11, Num_18:26, Lev_27:31, Deu_12:5-7, Deu_12:17-18,Deu_26:11-13 ,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries