தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 4-0

4-0-0 பிதாவின்  சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக: பரலோகத்திலும் பூலோகத்திலும் பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு , தேவனுடைய சத்தியத்தைக் குறித்து சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்:-  

4-1-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; பரலோகத்திலே பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்:-   

4-1-1 பிதா = ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம் 

4-1-2 வார்த்தை= ஆதியிலே தேவனிடத்திலிருந்த, வார்த்தையாகிய கிறிஸ்து  

4-1-3 பரிசுத்த ஆவி = தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவி

4-2-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; பூலோகத்திலே, பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 

4-2-1 ஆவி / இயேசு கிறிஸ்துவின்  ஜீவனுடைய ஆவியின் பிரமாண த்தின் ஆவியும், மனிதனுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவம், மரணம் ஆகியவைகளின்  பிரமாணத்தின் ஆவியும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.   

4-2-2 ஜலம் / இயேசு கிறிஸ்துவினுடைய ஆத்துமாவின்  ஜலமாகிய    நித்திய ஜீவ வார்த்தைகளின்  பிரமாணமும், மனிதனுடைய ஆத்துமாவின் ஜலமாகிய மாயைகளுடைய   வார்த்தைகளின்  பிரமாணமும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.  

4-2-3 இரத்தம் / இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலான சரீரத்தின்  மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதினால் வருகிற /மாறுகிற  நீதியின் பிரமாணத்தினுடை   வழிமுறைகளும்,  மனிதனின் இரத்தத்திலான சரீரத்தின் மூலம்  மாம்சத்திலே பாவப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதினால் வருகிற /மாறுகிற பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினுடைய  வழிமுறைகளும், ஒன்றுக்கொன்று விரோதமாக இச்சித்து போராடுகிறது.   

1Jn 5:5  இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 

1Jn 5:6  இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். 

1Jn 5:7  [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 

1Jn 5:8  பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 

1Jn 5:9  நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 

1Jn 5:10  தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். 

1Jn 5:11  தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 

1Jn 5:12  குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 

1Jn 5:13  உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 

1Jo_5:5-10, Joh_17:1-7, Joh_17:8-12,Joh_17:13-20, Joh_17:21-26, Joh_16:1-8, Joh_16:9-16, Joh_15:26-27,Joh_14:16-21, Joh_16:17-21,Joh_16:22-28,1Pe_1:10-13;   Joh_14:22-26,Gen_3:22-24,Gen_2:7-15


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries