தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 7-0

7-0  ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: பரலோகத்திலும் பூலோகத்திலும்  எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில் சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, சாட்சியிடுகிறவர்களில், மூவரில் மூன்றாவது  வெளிப்பட்ட  சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்: கண்டித்து உணர்த்தி சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்:- 

7-1 தேவனுடைய  சத்தியத்திற்கு விரோதமாக வருகிற  பாவங்கள்          7-2      தேவனுடைய  சத்தியத்தை நிலைநிறுத்தும்   நீதிகள் 

7-3      தேவனுடைய  சத்தியத்தை நிலைநிறுத்தும்   நியாயத்தீர்ப்புகள்  

7-4 சத்திய ஆவியாகிய தேற்றரவாளனுடைய சத்திய ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு தேவையான அடிப்படை தகுதிகள்:- 

பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, தேவனுடைய சத்தியத்தைக் குறித்து சாட்சியிடுகிறவர்களில் மூவரில் மூன்றாம்  ஆனவரான, பிதாவாகிய, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்: தேவநீதியை வெளிப்படுத்துவதற்காக,  

பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்தி  சாட்சியிடுகிற. மூன்று காரியங்கள்: பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக, போராடிக் கொண்டிருக்கிறதில்  ஒன்றாயிருக்கிறது /  ஒன்றாயிருக்கிறார்கள். 

Joh 16:7  நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 

Joh 16:8  அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 

Joh 16:9  அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 

Joh 16:10  நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 

Joh 16:11  இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். 

Joh 16:12  இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 

Joh 16:13  சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

7-1 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்,  தேவனுடைய  சத்தியத்திற்கு விரோதமாக வருகிற  பாவங்களைக் குறித்து  கண்டித்து உணர்த்தி, வெளிப்படுத்துகிறதன் மூலம் பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக  சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்,   போராடிக் கொண்டிருக்கிறார். .   

7-2 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்,  தேவனுடைய  நீதியை குறித்து  கண்டித்து உணர்த்தி, வெளிப்படுத்துகிறதன் மூலம்  பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக  சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்,   போராடிக் கொண்டிருக்கிறார்.. 

7-3 சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்,  தேவனுடைய  நியாயத்தீர்ப்பை  குறித்து  கண்டித்து உணர்த்தி, வெளிப்படுத்துகிறதன் மூலம் பரலோகத்திலும் பூலோகத்திலும்  பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக  சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்,   போராடிக் கொண்டிருக்கிறார்.

 

Joh_14:16-21,Joh_16:7-15,Joh_16:1-6, Joh_15:26-27, Joh_17:1-7,Joh_17:8-12, Joh_17:13-20, Joh_17:21-26,   Jam_1:17-18,Isa_11:4,  Eze_21:9-13,   2Sa_7:13-15,  Psa_89:31-34, Psa_2:1-5 , Psa_2:6-12,1Jo_5:5-10, Joh_16:7-11,1Jo_4:1-6;   2Jo_1:7-11; 2Pe_2:1-3; 1Jo_2:18-22, 1Ti_4:1-6, 2Th_2:1-6;  2Th_2:7-12;  2Th_2:13-17

7-4 சத்திய ஆவியாகிய தேற்றரவாளனுடைய சத்திய ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு தேவையான அடிப்படை தகுதிகள்:- 

மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை, தங்களுடைய வாயிலும் இருதயத்திலும் அறிக்கை செய்து; சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை, தங்களுடைய வாயிலும் இருதயத்திலும் சமீபமாக பெற்றுக்கொள்ளுகிறபோது சத்திய ஆவி இன்னதென்று வெளிப்படுகிறது. 

மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவியும், வஞ்சக ஆவியும்  அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்./ அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளின்  வஞ்சக ஆவியும் இன்னதென்றும் வெளிப்படுகிறது. 

1Jn 4:1  பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 

1Jn 4:2  தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 

1Jn 4:3  மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 

1Jn 4:4  பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 

1Jn 4:5  அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். 

1Jn 4:6  நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 

1Jo_2:1-8, 1Jo_2:9-15; 1Jo_2:16-22, 1Jo_2:23-29; 1Jo_4:1-6,2Jo_1:7-11


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries