தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 24


தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.

பொருளடக்கம் 6-0

6-0 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் அல்லது பலிபீடத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்திலிருந்து,  தேவனை மகிமை படுத்துகிற புறஜாதிகளின் ஆசீர்வாதங்கள்:-

தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற புறஜாதிகள், தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு, அல்லது  கிறிஸ்துவினுடைய   சரீரத்தின்  அவயவங்களாகிய    1,44,000, வரிசையில் வருகிற  ஊழியர் ஒருவனுக்கு: விசேஷமாக உபத்திரவ காலத்தில் கீழே குறிப்பிட்ட நன்மைகளில்  நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

1 தீர்க்கதரிசி / நீதிமான் / சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். Mat 10:40   

2 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்;

3 தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்;

4 அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

5 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்;

6 வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;

7 காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.

6-1 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்திக்காமல் இருக்கிறவர்களூடைய ஆசீர்வாதங்கள்:-

தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற புறஜாதிகள்: முதலாம் கூடாரமாகிய பரிசுத்த ஸ்தலம், மற்றும் இரண்டாம் கூடாரமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற   மிகவும் சிறியவராகிய ஊழியர் ஒருவனுக்கு:

விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்திக்காமல் இருக்கிறவர்களை: ராஜா தமது வலது பக்கத்தில் பிரித்தெடுத்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு இராஜ்யத்தைச் நேரடியாக சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார். Mat 25:31-46  

6-2 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற ஆவிக்குரிய யூதர்களுக்கு, விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்தித்து இரத்தசாட்சியாக மரிக்கிறவர்களூடைய ஆசீர்வாதங்கள்:-

தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற புறஜாதிகள்,  பரிசுத்த ஸ்தலம், மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிற   மிகவும் சிறியவராகிய ஊழியர் ஒருவனுக்கு; விசேஷமாக உபத்திரவ காலத்தில் பல நன்மைகளை செய்து, மரணத்தை சந்தித்து இரத்தசாட்சியாக மரிக்கிறவர்கள், நேரடியாக தேவனுடைய சிங்காசனத்திற்கு     முன்பாக வந்தடைகிறார்கள். Rev 7:9-17   

நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.


Social Media
Location

The Scripture Feast Ministries