தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 08


தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்

பொருளடக்கம் 6-0

அத்தியாயம் ஆறு
 
6-1 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு
 
6-2 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட 
 
1,44,000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழிமுறைகள்.
 
6-3 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்ட வர்கள் ஆசரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள்
 
6-4 ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை
 
குத்துவிளக்கின் குணாதியங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல்
 
6-5 ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை முன்மாரி, பின்மாரி மழையின் குணாதிசயங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல்.
 
6-6 ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசு வதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்.
 
அத்தியாயம் ஆறு :-
 
6-1 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு 
 
இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்கு தண்டுகளும், இரண்டு பரிசுத்தவான்கள் அல்ல, இவைகள் இரண்டும் தேவ னுடைய அபிஷேக ஆவியினுடைய இரண்டு ஊழிய அழைப்பின் இரண்டு விசேஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் Rev_11:3-4, Rev_11:1-14, Zec_4:11-14, Zec_4:1-14, 1Co_12:4-7,
 
1. இந்த இரண்டு சாட்சிகளின் பொருள் இரண்டு பரிசுத்தவான்கள் என்று அநேகர் தீர்மானிக்கும் போது அந்த இரண்டு பரிசுத்தவான்கள் எலியா, ஏனோக்கு, என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் இவர்கள் இரண்டு பேரும் மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள், எனவே இவர்கள் மீண்டும் பூமிக்கு வந்து எல்லா மனிதரைப்போல பூமியில் மரித்து பின்பு பரலோகத்திற்கு செல்ல வேண்டும். இப்படிப்பட்ட பிரமாணங்கள் மனுஷர்கள் ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்காக இந்நாள் வரை அநேகர் காத்திருக்கிறார்கள். 
 
2. மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது அதுபோல மனுஷன் மரணத்திற்காக உண்டாக்கப்படவில்லை, மனுஷனுடைய பாவத்தி னால் மரணம் உண்டானது. இப்படி மரணம் நேரிட்ட போது இயேசு கிறிஸ்துவினால் மரணத்திலிருந்து ஜீவன் உண்டானது. Rom_5:12-21, Rom_6:23, Rom_8:2-13, Joh_11:25-26, 1Co_15:50-57, 
 
Mar 2:27 பின்பு அவர்களை நோக்கி : மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. 
 
Joh 11:25-26 நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக் கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயி ரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.
 
3. தேவனுடைய ஊழியம் செய்கிறவர்கள், தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும் பின்பு பரலோகத்திற்கு செல்ல வேண்டும் அல்லது எலியா, ஏனோக்கு தேவனால் நேரடியாக மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போல நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இவைகளில் எந்த வழியில் பரலோகத்திற்கு செல்லுவது என்பதைக் குறித்த தீர்மானம் பரிசுத்தவான்களுடைய பொறுமைக்கு விசுவாசத்திற்கும் ஏற்றபடி மாறுபடுகிறது. Rom_13:10 
 
Rev 13:10 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட் டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசு வாசமும் இதிலே விளங்கும்.
 
4. பரிசுத்தவான்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயத்தின் வல்லமையை பொறுமையுடன் உபயோகிக்கும் போது சமாதானமாக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தப்படுகிறார்கள். இப் படிப்பட்டவர்களை தேவ துதர்களால் சிறைப்படுத்திக்கொண்டு / நேரடியாக மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டு போவார்கள் பரிசுத்தவான்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயத்தின் வல்லமையை அதிகாரத்துடன் உபயோகிக் கும் போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தின் வல்லமையுடன் அதிகாரத்தோடு கொலை செய்வார்கள்.
 
5. எலியா, ஏனோக்கு தேவனால் நேரடியாக மரணத்தைக் காணாமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது போல, இந்த காலத்திலும் அநேக தேவ ஊழியர்கள் மரத்தைக் காணமல் உயிரோடு நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுவார்கள். Mat_24:40-41, Luk_17:34-36, Rev_13:10,1Co_15:50-57,
 
யோவான் ஸ்நானகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தோடு ஊழியம் செய்து, தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தது போல இந்தக் காலத்திலும் அநேகர் தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்துக் கொண்டிருப்பார்கள். Luk_1:17, , 
 
6. எலியாவைப் பற்றியுள்ள வேத வசனங்களை நாம் சிந்திக்கும் போது, எலியா முதலாவது திரும்ப வரவேண்டும் என்ற நம்பிக்கை இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னே பல ஆண்டுகளாக அநேக பரிசேயரிடம் சதுசேயரிடமும் இருந்தது ஆனால் இவர்களுடைய கேள்விக்கு இயேசு கிறிஸ்து எலியா வந்தாயிற்று என்ற பதிலை கொடுத்தார். Mat_17:10-13, Mat_11:14-15, Mar_9:11-13,
 
யோவான் ஸ்நானகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தோடு ஊழியம் செய்து, தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சி யாக மரித்தார். எலியா தீர்க்கதரிசி யோவான் என்ற பெயரில் மீண்டும் இந்த பூமியில் பிறக்கவில்லை, மாறாக எலியாவிற்கு தேவன் கொடுத்த அபிஷேக ஆவியை யோவான் ஸ்நானகன் மேல் தேவன் அனுப்பி கர்த்தருடைய முதல் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பின் கிரியைகளையும், தேவனை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பின் கிரியைக ளையும், ஆகிய இரண்டு வகையான ஊழிய அழைப்புக்களின் திட்டங்களை தேவன் நிறைவேற்றினார். Luk_1:17, 
 
மேலே குறிப்பிட்டதுபோல இக்காலத்திலும் கர்த்தரின் இரண் டாம் வருகையில் அநேக தேவ ஊழியர்களுக்கு, எலியா, மோசே, ஆகிய இரண்டு தீர்க்கதரிசிகளின் மேல் வைத்த அபிஷேக ஆவியை மீண்டும் தேவன் அனுப்பி கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பின் கிரியைகளையும், கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப் படுத்தும் ஊழிய அழைப்பின் கிரியைகளையும், ஆகிய இரண்டு வகையான ஊழிய அழைப்புகளின் திட்டங்களை தேவன் நிறைவேற்றுகிறார். Mal_4:4-6
 
7. ஆண் பிள்ளைகள் இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டு நிறைவேற்றுதல்:-
 
இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்கு தண்டுகளும் பரிசுத்தவான்கள் அல்ல, இவைகள் இரண்டும் தேவனுடைய அபி ஷேக ஆவியினுடைய இரண்டு ஊழிய அழைப்பின் இரண்டு விசே ஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் Rev_11:3-4, Rev_11:1-14, Zec_4:11-14, Zec_4:1-14, 1Co_12:4-7,
 
தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் வலது இடது பக்கத்தின் ஊழிய அழைப்பினால் இரண்டு விசேஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரி யைகள் : 1Ki_17:1, 1Ki_18:15, Hos_12:12-13,Exo_23:20-23, Isa_63:7-14, Zec_4:11-14, Rev_11:3-4,
 
1. தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் வலது பக்கத்தின் ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியை கள், எலியா தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தைப் போல ஒருவரின் விண்ணப்பத்திகேற்றபடி அவனுக்கு இரண்டு மடங்கு அருளப் படுகிறது. 2Ki_2:7-14,,
 
2. தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் இடது பக்கத்தின் ஊழிய அழைப்பினால் விசேஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் :-
 
கர்த்தரை ஆராதனை செய்யும்படி ஆயத்தப்படுத்துவதற்காக தேவனுடைய அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் விசே ஷித்த கிருபை வரங்கள் / ஊழிய அழைப்புகள் / ஊழிய அழைப்பின் கிரியைகள் மோசே தீர்க்கதரிசியின் ஆவியின் பெலத்தைப்போல ஒரு வரின் விண்ணப்பத்திற் கேற்றபடி அவனுக்கு எழுபது பங்காக பிரித்து எழுபது பேருக்கு பகிர்ந்து அருளப்படுகிறது. Num_11:11-17, Num_11:24-29,
 
1. தேவனை ஆராதிக்க ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு:-
 
எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து ஜனங்கள் விடுதலையாக்கப் பட்டு சுதந்திரமாக தேவனை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்துவதற்காக தேவனுடைய அபிஷேக ஆவியை மோசேக்கு கொடுத்து அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் தேவனுடைய ஊழிய அழைப்பின் திட்டத்தை தேவன் நிறைவேற்றினார். Psa_78:1-12, Psa_78:42-53, Psa_105:23-37, Psa_106:1-12,
 
2. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு:-
 
எகிப்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக வாக்குத்தத்த தேசத்திற்கு அழைத்துச செல்லும்படி கர்த்தர் காண்பிக்கும் வழியை ஆயத்தப்படுத்து வதற்காக தேவனுடைய அபி ஷேக ஆவியை மோசேக்கு கொடுத்து அற்புதங்களினாலும், அடையா ளங்களினாலும் தேவனுடைய ஊழிய அழைப்பின் திட்டத்தை தேவன் நிறைவேற்றினார். Psa_78:13-41, Psa_78:54-72, Psa_105:38-45, Psa_106:12-30, Psa_106:31-48, 
 
அத்தியாயம் ஆறு
 
6-2 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட 1.44.000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழி முறைகள். 
 
1. தேவனுடைய ஜனங்கள் பாவத்தின் அடிமைத்தனத்தி லிருந்து தேவன் தம்முடைய வல்லமையுள்ள கரத்தால் பிரித் தெடுத்து, தமக்கு ஆராதனை செய்யும்படி தெரிந்து கொள்ளு வதற்காக எகிப்திலே நடந்த பத்து வாதைகளில் ஒன்பது வாதைகளை மோசேயின் மூலம் தேவன் நடப்பித்தார். ஆனால் பத்தாவது வாதை யான தலைச்சன் பிள்ளை சங்காரத்தை தேவனே நிறைவேற்றினார்.
 
2. பாவம், மரணம் ஆகியவற்றின் அடிமைத்தனத்திலிருந்த தேவ ஜனங்களை விடுதலையாக்கும்படியாக தேவனே தம்முடைய குமரனை பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தை போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினிக்குள்ளாகத் தீர்த்தார், இப்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் தீமையை அல்லது பாவத்தை நன்மையினால் ஜெயங்கொள்ளும் தத்துவ செயல் முறையை தேவன் நமக்கு முன் மாதிரியாக வெளிப்படுத்திக் கொடுத் தார். Rom_8:1-4, Rom_12:21, Pe_3:16-19, 1Co_11:31, Job_9:16, Job_5:5, Job_28:12-19, Job_28:20-28,
 
3. பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் இரத்த அடையாளங்களின் பொருளை பின்பற்றுகிறவர்களும், புளிப் பிள்ளாத அப்பாமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிக்கிறவர்களும், தீமையை / பாவத்தை நன்மையினால் ஜெயங்கொள்ளும் அனுபவத்தின் மூலம் பாவத்தின் நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை பிடித்து அவைகளை மீண்டும் நன்மைக்கு மாற்றியமைத்துக் கொண்டு மோசேயின் கோலினால் உள்ள ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தை கைப்பற்றுகிறார்கள்.
 
4. பாம்பின் வாலைப்பிடித்து, வால்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாம்பின் தலைப்பகுதிக்கு வரும்போது மீண்டும் மோசேயின் கோலாக மாறுவதுபோல, பத்தாவது வாதையிலிருந்து 10,9,8,7,6,5,4,3,2,1 தலைகீழ் வரிசைப்படி தேவனுடைய நியாய தீர்ப்பை, தேவனை ஆராதிக்க முன் வராதவர்கள் மற்றும் தேவனு டைய இராஜ்ஜியத்திற்கு வழியை ஆயத்தம் பண்ணுவதற்கு முன் வராதவர்கள் ஆகிய இரண்டு பிரிவு ஜனங்களுக்கு மத்தியில் தேவ னுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதின் மூலம் மோசேயின் கோலினால் உள்ள ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தை கைப் பற்றுகிறார்கள். 
 
5. பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் இரத்த அடையாளங்களின் பொருளை பின்பற்றாதவர்களும் புளிப்பில்லாத நித்திய ஜீவ வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிக்காதவர்களும், தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ள முடியாமல் நன்மை யிலிருந்து தீமைக்கும் தொடர்ந்து தீமையிலிருந்து மீண்டும் தீமைக்கு முன்னேறுகிறபடியால்; அவர்களின் தலைச்சன் பிள்ளை யான ஜென்ம பாவ மனிதனுடைய இரட்சிப்பு, தேவனுடைய நியாயத் தீர்ப்பினால் மரணமடைகிறது. தேவனுடைய வார்த்தையின்படி அவர் கள் இரட்சிப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வரை எகிப்தின் வாதைகளும், வனாந்தரத்திலே தேவனுக்கு கோபம் மூட்டினபோது ஏற்பட்ட நியாயத்தீர்ப்புகளும் இவர்களை பின் தொடர்ந்து கொண் டேயிருக்கும். 
 
6. கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பு, மற்றும் கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு, ஆகிய இரண்டு வகையான ஊழிய அழைப்புகளின் திட்டங்களை தேவன் நிறைவேற்றுவதற்காக தேவன் மோசேக்கு கொடுத்த மூன்று அடையாளங்கள்
 
1. மோசேயின் கோல் தரையிலே போட்டபோது பாம்பாக மாறினது, பாம்பின் வாலை மோசே பிடித்தபோது அது மீண்டும் மோசேயின் கையில் கோலாகமாறினது. . Exo_4:1-5, 
 
2. மோசே தன் கையை தன் மடியில் போட்டு வெளியே எடுத்த போது அந்த கையில் குஷ்டரோகம் காணப்பட்டது. குஷ்ட ரோகமாக மாறின அந்த கையை மோசே மீண்டும் தன் மடியில் போட்டு வெளியே எடுத்த போது அந்த கை முன்போல் குஷ்டரோகமில்லாத மற்ற கையைப் போல மாறினது. Exo_4:6-8, 
 
3. மோசே நதியில் ஓடுகிற தண்ணீரை மொண்டு அதை வெட்டாந்தரையிலே ஊற்றும்பொழுது அது இரத்தமாக மாறினது , இந்த மூன்று அடையாளங்களையும் மோசே ஜனங்களுக்கு முன்பாக செய்து காட்டி தேவன் தனக்கு தரிசனமானார் என்பதை நம்பும்படி செய்தார். . Exo_4:28-31, Exo_4:9, 
 
7. மோசேயைப்போல நாங்களும் தேவ தரிசனத்தை பெற்றி ருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள், இந்த மூன்று அடையாளங்களை யும் ஆவிக்குரிய நிலையில் ஜனங்களுக்கு முன்பாக செய்து காட்டி தங்களை நம்பவைப்பதற்கு முயற்சி செய்கிறபோது நடைபெறும் கிரியைகள்.
 
1. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரிய நிலையில் தங்களுடைய கோலை தரையிலே போடுகிற பொழுது பாம்பாக மாறுகிறது, ஆனால் ஆவிக்குரிய நிலையில் அந்த பாம்பின் வாலைப் பிடித்து அதை மீண்டும் தங்களுடைய கோலாக மாற்ற முடியவில்லை. 
 
2. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரிய நிலையில் தங்களுடைய கையை தங்கள் மடியிலே போட்டு வெளியே எடுத்தபோது அந்த கையில் குஷ்டரோகம் காணப் படுகிறது, ஆனால் ஆவிக்குரிய நிலையில் குஷ்டரோகாமாக மாறின தங்கள் கையை மீண்டும் தங்களுடைய மடியிலே போட்டு வெளியே எடுத்த போது அந்த கையை முன்போல குஷ்டரோகமில்லாத மற்ற கையைப்போல மாற்ற முடியவில்லை.
 
3. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரிய நிலையில் நதியில் ஓடுகிற தண்ணீரை மொண்டு வெட்டாந்தரையிலே ஊற்றும்பொழுது அது இரத்தமாக மாறுகிறது. ஆனால் முன்பு சொல்லப்பட்ட இரண்டு அடையாளங்களையும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறவைகளாக, ஆவிக்குரிய நிலை யில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் இந்த மூன்றாம் அடை யாளத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறவைகளாக ஆவிக்குரிய நிலையில் நிறைவேற்ற முடியவில்லை.
 
8. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர் கள், இந்த மூன்று அடையாளங்களையும் ஆவிக்குரிய நிலையில் ஜனங்களுக்கு முன்பாக செய்து காட்டி, மோசேயைப்போல நாங்களும் தேவ தரிசனத்தை பெற்றிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு; ஜங்களை நம்பவைப்பதற்கு முயற்சி செய்கிறபோது இந்த மூன்று அடையாளங்களையும் ஆவிக்குரிய நிலையில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிற முதல் பகுதியை மட்டும் செய்து காட்டுகிறார்கள் 
 
ஆனால், இந்த மூன்று அடையாளங்களிலும் மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிற மறு பகுதியை ஆவிக்குரிய நிலையில் ஜனங்களுக்கு முன்பாக நிறை வேற்ற முடியவில்லை, இருந்தபோதும் இந்நாள் வரை இவைகளினால் ஜனங்களை வஞ்சித்து, தங்களுக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். Mat_23:1-2, Mat_23:25-26, 
 
9. மோசேயை ஜனங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் கொடுத்த முதலாம் அடையாளம் / மோசேயினுடைய கோல் தரையிலே போட்டபோது பாம்பாக மாறினது ஆவியின் படி பொருள்:-
 
மோசேயின் கோல் தரையிலே போட்டபோது பாம்பாக மாறி னது / மோசேயின் அதிகாரங்கள் நன்மையிலிருந்து தீமைக்கு மாறுகிறது. 
 
பாம்பின் வாலை மோசே பிடித்தபோது அது மீண்டும் மோசேயின் கையில் கோலாக மாறினது / மோசேயின் அதிகாரங்கள் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிறது. 
 
தேவன் மோசேக்கு கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்களும் அதன் நற்கிரியைகளும் அதன் சத்தியத்தின் நிலை யிலிருந்து வழி விலகி; பாம்பைப்nப்hல நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை நடப்பிக்கும் படி, நன்மையிலிருந்து தீமைக்கு மாறி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக்கொண்டிருக்கிறது. 
 
10. எகிப்திலுள்ள சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதி கள் ஆகிய இவர்களுடைய கோல்களும் தரையிலே போட்டபோது பாம்பாக மாறினது :- 
 
பூமியில் தோன்றின மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர் கள், மந்திரவாதிகள், ஆகிய இவர்களின் ஆட்சி அதிகாரங்களும்; அதன் சத்தியத்தின் நிலையிலிருந்து வழி விலகி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டிருக்கிறது. 
 
11. மோசேயைப்போல நாங்களும் தேவ தரிசனத்தை பெற்றி ருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மோசேயின் ஆசனத்தில் உட் கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், உலக மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகள் ஆகிய இவர்களின் ஆட்சி அதிகாரத் தின் கோலும்; இப்பொழுது சத்தியத்தின் நிலையிலிருந்து வழி விலகி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக, பாம்பைப் போல நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளை நடப்பிக்கும்படி நன்மையிலிருந்து தீமைக்கு மாறி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 
 
12. மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் உலக மதங்களின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் ஜனங்களை நம்பவைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியினால் தங்களுடைய சத்தியமான ஆட்சி அதிகாரத்தின் கோல்கள் பாம்பாக மாறியிருக் கிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஆட்சி செய்வதற்கு சத்தியமான ஆட்சி அதிகாரங்களுக்கு பதிலாக நயவஞ்சகமான தந்திர ஆலோச னைகளைக்கொண்டு பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடிக் கொண்டி ருக்கிறார்கள்.
 
இப்பொழுது சத்தியமான ஆட்சி அதிகாரத்தின் கோலைக் கண்டால் பாம்பைக் காணோம்; பாம்பைக் கண்டால் சத்தியமான ஆட்சி அதிகாரத்தின் கோலைக் காணோம். 
 
சத்தியமான ஆட்சி அதிகாரங்களைக் கண்டால் நயவஞ்சக மான தந்திரங்களை காணோம்; நயவஞ்சகமான தந்திரங்களை கண் டால், சத்தியமான ஆட்சி அதிகாரங்களைக் காணோம். சத்தியமான ஆட்சி அதிகாரங்கள் அல்லது நயவஞ்சகமான தந்திரங்கள் என்கிற ஏதாவது ஒரு நிலையில் மட்டும் ஆட்சி அதிகாரங்கள் மற்றவர் களுக்கு வெளிப்படுகிறது.
 
13. மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்களின் கோல்கள் பாம்பாக மாறியிருக்கும்போது அது மற்ற பாம்புகளை விழுங்க முடியவில்லை:- 
 
மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடம் உள்ள பாம்பைப்போல நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகள், உலக மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகள் ஆகியவர் களிடம் உள்ள பாம்பைப்போல நயவஞ்சகமான தந்திர ஆலோசனை களை விழுங்க / மேற்கொள்ள / ஜெயங்கொள்ள முடியவில்லை. 
 
14. மோசே பாம்பின் வாலை பிடித்தபோது மீண்டும் அது தன் கையில் கோலாக மாறினது; அதுபோல இப்பொழுது மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் ஜனங்களுக்கு முன்பாக ஓடுகிற எல்லா பாம்புகளையும் அதன் வாலை பிடித்து கோலாக மாற்றவேண்டும், அல்லது அவர்களுடைய பாம்பு மற்ற பாம்புகளை விழுங்க வேண்டும்.
 
இந்நாள் வரை இந்த இரண்டு காரியங்களும் நடைபெறாமல் எல்லாருடைய கோல்களும் / சத்தியமான ஆட்சி அதிகாரங்களும் பாம்பாக மாறி/ நயவஞ்சகமான தந்திர ஆலோசனைகளாக மாறி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் காண்பவர்கள் அநேகர் பயந்து இங்கும் அங்கும் மதம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு சிலர் சத்தியமானவைகளை நாடி தேடி ஓடுகிறார்கள். 
 
15. உலக மதங்களின் சாஸ்திரிகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகள் ஆகிய இவர்களுக்கு பாம்பின் வாலைப்பிடித்து மீண்டும் கோலாக மாற்றும் தத்துவம் தெரியாது, ஆனால் மோசேக்கு மட்டும் தேவனுடைய ஆலோசனையின்படி இது தெரியும். இந்த நிலையில் மோசே எல்லா பாம்புகளையும் பார்த்து பயப்படாமலிருக் கும் போது மோசேயின் பாம்பு மற்ற எல்லா பாம்புகளையும் விழுங் கிற்று, இப்படி எல்லா பாம்புகளையும் விழுங்கினாலும் அது தன் உரு வத்தால் பெரியதாக மாறுமேயல்லாமல் அது ஒருபோதும் கோலாக மாறது ஆனால், பாம்பின் வாலைப்பிடிக்கும் போது மட்டுமே அது மீண்டும் கோலாக மாற்ற முடியும். 
 
பாம்பின் வாலை பிடிப்பது போல, நயவஞ்சகமுள்ள தீமையான தந்திர ஆலோசனைகளை, நன்மையாக மாற்றுகிறவர்கள் மட்டும் மோசே அழைக்கப்பட்டதுபோல கனமான ஊழிய அழைப்பின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள / கைப்பற்ற முடிகிறது. 
 
தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளும் தத்துவத்தின் மூலம் தந்திரமான ஆலோசனைகளை நற்கிரியைகள் செய்வதற்கு பயன் படுத்த முடியும். 
 
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளின் மூலம் தீமைக்கு தீமை செய்கிறபோது உதாரணம்: கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்கிற கற்பனையைப் போல தீமைக்கு தீமை செய்கிறபோது / பாம்பின் தலையை பிடிக்க முயற்சி செய்கிறபோது, பாம்பு கடிக்கிறது / பாவம் மரணத்தை கொண்டு வருகிறது; ஆனால் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினால் தீமைக்கு நன்மை செய்யும்போது மட்டும் அது பாம்பின் வாலைப்பிடிக்கிறதற்கு சமமாகிறது, இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின் மூலம் நீதியின் கிரியைகளை செய்யும்போது நயவஞ்ச கமான தந்திர ஆலோசனைகளை தேவனுடைய நீதியின் கிரியைகளாக மாற்றியமைத்து கொள்ள முடியும்.
 
16. மோசேயை ஜனங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் கொடுத்த இரண்டாவது அடையாளம் / மோசே தன் கையை தன் மடியில் போட்டு வெளியே எடுத்தபோது அந்த கையில் குஷ்டரோகம் காணப்பட்டது ஆவியின்படி பொருள்:-
 
மோசே தன்னுடைய நற்கிரியைகளை தன்னுடைய தந்திரங் களினால் மறைத்து, தன்னுடைய கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறபோது அது மாயைக்காரனின் கிரியைகளாக காணப் படுகிறது / மோசேயினுடைய கையின் கிரியைகள் நன்மையிலிருந்து தீமைக்கு மாறுகிறது.
 
17. மோசே குஷ்டரோகமாக மாறின அந்த கையை மீண்டும் தன் மடியில் போட்டு வெளியே எடுத்தபோது, அந்த கை முன்போல குஷ்டரோகமில்லாத மற்ற கையைப்போல மாறினது / மோசே தன்னுடைய மாயைக்காரனின் கிரியைகளை தன்னுடைய தந்திரங் களிலிருந்து வெளியே வந்து, தன்னுடைய கிரியைகளை வெளிப் படுத்திக்காட்டுகிறபோது அது மீண்டும் நற்கிரியைகளாக காணப் படுகிறது / மோசேயினுடைய கையின் கிரியைகள் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிறது. 
 
முதல் அiடாயளத்தை ஜனங்கள் கண்டு உன்னை நம்பாமலும் உனக்கு செவிகொடாமலும் போனால், இந்த இரண்டாம் அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள்.
 
18. மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் தங்கள் கையை மடியிலே போட்டு வெளியே எடுத்து, குஷ்டரோகமாக மாற்றியிருக் கிறார்கள் என்பதின் பொருள் ஆவியின் படி:-
 
மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் தங்கள் நற்கிரி யைகளை தங்களுடைய தந்திரங்களினால் மறைத்து, தங்கள் கிரியை களை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள்; அப்பொழுது அது மாயக் காரனின் கிரியைகளாக வெளிப்படுகிறது.
 
மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் குஷ்டரோகமுள்ள தங்கள் கையை மீண்டும் தங்கள் மடியில் போட்டு வெளியே எடுத்து மற்ற நல்ல கையைபோல மாற்ற முடியவில்லை என்பதின் பொருள் ஆவியின்படி:-
 
மோசேயின் ஆசனத்தில் இருப்பவர்கள் தங்கள் மாயைக்கார னின் கிரியைகளை, தங்களுடைய தந்திரங்களிலிருந்து வெளியே வந்து மீண்டும் நற்கிரியைகளாக மாற்றியமைத்துக் கொள்ள முடிய வில்லை; இந்த காரணங்களினால் மாயக்காரனகிய பரிசேயனே, வேத பாரகனே என்று இந்நாள் வரை மோசேயின் ஆசனத்தில் இருப்பவர் களை மற்றவர்கள் அழைக்கிறார்கள்.
 
19. மோசேயை ஜனங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் கொடுத்த மூன்றாவது அடையாளத்தின் பொருள் ஆவியின்படி:-
 
மோசே நீ நதியில் ஓடுகிற தண்ணீரை மொண்டு அதை வெட்டாந்தரையிலே ஊற்று அப்பொழுது அது இரத்தமாக மாறும்; மோசே நீ உன்னுடைய அறிவில் நதியைப்போல ஓடிக்கொண்டி ருக்கிற உன்னுடைய அறிவு சிந்தனைகளை எடுத்து அவைகளை நேரடியாக உன்னுடைய கிரியைகளுக்கு பயன்படுத்து, அப்பொழுது உன் ஆலோசனைகள் கிரியைகளுக்கு மாறமலிருந்து உன்னுடைய ஆலோசனைகள் சிதறி, சிதைத்து உருக்குலைந்து, உருமாறிப் போகிறது. 
 
முந்தின இரண்டு அடையாளங்களை கண்டு ஜனங்கள் உன்னை நம்பாமலும் உன் வாக்குக்கு செவிகொடாமலும் இருப்பார் களாகில் இந்த மூன்றாவது அடையாளத்தை கண்டு உன்னை நம்புவார்கள். 
 
இந்த மூன்றாவது அடையாளத்தில் நன்மையிலிருந்து தீமைக்கு எப்படி மாறுகிறது என்கிற ஒரு பக்கத்தின் கிரியைகளை மட்டும் தேவன் வெளிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; ஆனால் இந்த மூன்றாவது அடையாளத்தில் தீமையிலிருந்து எப்படி மீண்டும் நன்மைக்கு மாறுவது என்கிற மறுபக்கத்தை தேவன் நேரடியாக வெளிப்படுத்தாமல், மறைமுகமாக இந்த மூன்று அடையாளங் களுக்குள் மறைத்து தேவன் வெளிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
 
20. பாம்பின் வாலைப்பிடித்து மீண்டும் கோலாக மாற்றுவது, குஷ்டரோகமுள்ள தன் கையை தன் மடியில் போட்டு வெளியே எடுத்து மீண்டும் நல்ல சதையுள்ள கையாக மாற்றுவது, ஆகிய இரண்டு அடையாளங்களையும் தீமையை நன்மையினால் ஜெயங் கொள்ளும் அனுபவத்தின் மூலம் தேவனுடைய பிரமாணங்களைக் கொண்டு தீமையிலிருந்து நன்மைக்கு மாற்றுகிறவர்கள் மட்டும்; மூன்றாவது அடையாளத்தின் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிற செயல் முறையின் மறுபக்கத்தை அறிந்து கொண்டு அவைகளை நடைமுறைப்படுத்த முடியும். . Exo_4:4-5, Exo_4:7-8, 1Pe_3:8-11, Rom_8:10-13, Rom_12:21, Eze_3:17-19, Eze_18:21-23, Eze_33:14-17, 
 
21. மூன்றாம் அடையாளத்தின் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிற செயல் முறை:-
 
நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக, அப்பொழுது நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாக மாறாமல் அப்படியே தண்ணீராக இருந்து வெட்டாந் தரையை நல்ல செழிப்பான விளை நிலமாக மாற்றும்.
 
நீ உன்னுடைய அறிவில் நதிப்போல ஓடிக்கொண்டிருக்கிற உன்னுடைய அறிவு சிந்தனைகளை எடுத்து நேரடியாக உன்னுடைய கிரியைகளுக்கு பயன்படுத்தாமல், அவைகளை தேவனுடைய பிரமா ணங்களுக்கு உட்படுத்தி உன் ஆலோசனைகளை நிறைவேற்று; அப்பொழுது வெட்டாந்தரையில் ஊற்றப்பட்ட தண்ணீர் வெட்டாந் தரையை நல்ல செழுமையான விளை நிலமாக மாற்றுவது போல உன்னுடைய ஆலோசனைகள் நல்ல செழுமையான நீதியின் கிரியைகளுக்கு உருமாறுகிறது.
 
இந்த மூன்றாவது அடையாளத்தின் தீமையிலிருந்து மீண் டும் நன்மைக்கு மாறுகிற செயல் முறையின் மறுபக்கத்தில் ஒருவனு டைய அறிவின் ஆலோசனைகளை / விசுவாசங்களை தேவனுடைய பிரமாணங்களுக்கு உட்படுத்தின பின்பு; அவைகளை கிரியைகளுக்கு நிறைவேற்றும்போது அது நல்ல செழுமையான நீதியின் கிரியைகளாக உறுமாறுகிறது, அல்லது மனிதனுடைய விசுவாசங்களை தேவனுடைய பிரமாணங்களுக்கு உட்படுத்துவதின் மூலம் முதலாவது தேவனுடைய நீதியின் விசுவாசத்திற்கு உருமாறு கிறது, இரண்டாவது தேவனுடையை நீதியின் விசுவாசங்கள் தேவனுடைய நீதியின் கிரியைகளுக்கு உருமாறுகிறது Rom_1:17, Hab_2:4, Gal_3:11, Heb_10:38, Isa_7:9,
 
22. இந்த மூன்று அடையாளங்களிலும் உள்ள தீமை யிலிருந்து மீண்டும் நன்மைக்கு மாறுகிற மூன்று செயல் முறை களையும் கைக்கொள்ளுபவர்கள், தேவனுடைய நீதியின் விசுவாசத்திலிருந்து கிரியைகளுக்கு முன்னேறி பெலத்தின் மேல் பெலன் அடைந்து சீயோனுக்கும் எருசலேமிற்கும் வந்து சேர்வார்கள். Psa_84:5-7, Isa_35:10, Isa_51:11, 
 
சீயோனிலும் எருசலேமிலும் தேவ சித்தத்தை நிறை வேற்றுவதின் மூலம் மகிமையின் மேல் மகிமையடைந்து, மறுரு பமடைந்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுகிறார்கள். 2Co_3:18, 2Co_4:16, 
 
முதல் இரண்டு அடையாளங்களில் உள்ள நன்மையிலிருந்து தீமைக்கு மாறுகிறவர்கள் அவைகளின் தீமையிலிருந்து மீண்டும் நன்மைக்கு முன்னேற முடியாமல்; முதல் அடையாளத்தின் தீமையிலிருந்து இரண்டாம் அடையாளத்தின் தீமைக்கு முன்னேறி மீண்டும் முன்றாம் அடையாளத்தின் தீமைக்கும் முன்னேறுகிறார்கள், இப்படி இவர்கள் மூன்று தீமையிலிருந்து தீமைக்கு முன்னேறி தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து மீண்டும் நியாயத்தீர்ப்புக்கு முன்னேறி நித்திய நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 2Pe_2:19-22, Heb_6:4-8, Exo_3:20-21, Exo_18:24-26, Exo_33:13, Exo_33:18, Exo_4:1-3 , Exo_4:6, Exo_4:9, Jer_9:3, 1Th_5:15,
 
அத்தியாயம் ஆறு
 
6-3 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள் ஆசரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள் 
 
தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் தேவனுடைய நித்திய சத்திய சுபாவத்தை சார்ந்திருக்கும் வலது இடது பக்கங்களின் இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் ஆசாரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள் Exo_23:14-18, Exo_34:18-24, Deu_16:16-17, 
 
1. பஸ்கா பண்டிகை - முதற்பலன்களின் பண்டிகை / இரட் சிப்பை நினைவுகூறும் நாள் / யூதர்களின் பிறந்த நாள். Exo_12:1-14, Exo_12:15-28, Lev_23:1-8, Deu_16:1-8 , Num_28:16-25, 
 
2. பெந்தெகொஸ்தே பண்டிகை - அறுவடைப் பண்டிகை / வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களை நினைவுகூறும் நாள் / கிறிஸ்தவர்களின் பிறந்த நாள். . Num_28:25-26, Num_28:27-31, Lev_23:9-22 , Deu_16:9-12, Deu_26:1-19, Act_2:1, 1Co_16:8 , Joh_19:14, Joh_19:31,
 
3. கூடாரப்பண்டிகை - சேர்ப்புக்கால பண்டிகை / பூமிக்குரிய ஆசீர்வாதங்களை விற்று வாக்குத்தத்த ஆசீர்வதங்களை சேகரிக்கிற நாள் / நான் பரதேசி என்று நினைவுகூறும் நாள் Lev_23:23-44, Lev_26:10Num_29:1-12,Deu_16:13-15 Joh_5:35
 
தேவனுடைய நாமம் தரிக்கப்பட்ட தேவ ஜனங்கள் ஜாதி களின் தேவர்களை பணிந்து கொள்ளாமலும், ஜாதிகளின் முறை களைப் பின்பற்றாமலும் அவைகளை உடைத்துப்போட்டு; தேவனு டைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து மூன்று பிரதான பண்டிகைகளி லும் தேவனுடைய சமூகத்தில் வந்திருக்கும்போது அவர்கள் பெற்றுக் கொள்ளுகிற விசேஷித்த ஆசீர்வாதங்கள். Exo_23:24-33, Exo_34:23-24, Deu_16:16-17, 2Co_9:7,
 
1. தண்ணீரையும் அப்பத்தையும் ஆசீர்வாதிப்பார் 
நித்திய ஜீவ தண்ணீரையும் நித்திய ஜீவ அப்பத்தையும் ஆசீர்வாதிப்பார் 
 
2. வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்
வாக்குவாதம் பண்ணுகிற வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்.
 
3. கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை
இருதயத்தில் தேவ வார்த்தைகளை கர்ப்பம் தரிக்கும்போது அவைகள் சீர்குலைந்து போவதுமில்லை, கிரியைகள் இல்லாமல் போவதுமில்லை.
 
4. உன் சத்துருக்களை முதுகு காட்டப்பண்ணுவேன்
உன் சத்துருக்கள் பயந்து நடுங்கி ஓடுவார்கள்.
 
5. உன் சத்துருக்களை துரத்திவிட குழவிகளை அனுப்பு வேன்
உன் சத்துருக்களை துரத்திவிட தேவனுடைய நியாயத் தீர்ப்பின் பயத்தை அனுப்புவேன்.
 
6. காட்டுமிருகம் உன்னில் பெருகாதபடி உன் சத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டு துரத்துவேன் 
காட்டுமிருகமாகிய பெருமை உன்னில் பெருகாதபடி உன் சத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விட்டு விலக்கு வேன்.
 
7. உன் தேசத்தின் எல்லையை பெருகப்பண்ணுவேன் உன்னுடைய ஆசீர்வாதங்கள் நாளுக்கு நாள் பெருகி வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
8. நீங்கள் தேவ சமூகத்தில் நிலைத்திருக்கும் போது உங்கள் தேசத்தை யாரும் இச்சிப்பதில்லை
நீங்கள் தேவ சமூகத்தில் நிலைத்திருக்கும்போது உங்களு டைய ஆசீர்வாதங்களை யாரும் கொள்ளையிட முயற்சி செய்ய மாட்டார்கள்.
 
1. பஸ்கா பண்டிகை - முதற்பலன்களின் பண்டிகை / இரட் சிப்பை நினைவுகூறும் நாள் / யூதர்களின் பிறந்த நாள்:-
Exo_12:1-14, Exo_12:15-28, Lev_23:1-8, Deu_16:1-8 , Num_28:16-25, 
 
புளிப்பில்லா அப்பப்பண்டிகை / பஸ்கா அப்பப்பண்டிகை / முதற்பலன்களின் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பஸ்கா பண்டிகை வருடத்தின் முதல் மாதமாகிய ஆபிப் மாதம் பதினாலாம் தேதி சாயங்கலாந்தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்கலாம் வரையுள்ள ஏழு நாட்களைக் கொண்டது. இது யூதர்களின் முதலாவது பிரதான பண்டிகை இதை யூதர்களின் பிறந்த நாள் என்று சரித்திர ஆசிரியர்கள் வர்னிக்கிறார்கள் அல்லது கருது கிறார்கள். 
 
பஸ்கா பண்டிகையின் நியமத்தின்படி எல்லா ஆண்பிள்ளை களும் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் பண்டி கையை ஆசரித்து முதல்பலனான ஆண்பிள்ளைகள் அவரவர் தகுதிக் கேற்றபடி தேவனுடைய சமூகத்தில் காணிக்கையை கொண்டு வரவேண்டும்.
 
புளிப்பில்லா அப்பப்பண்டிகை / பஸ்கா பண்டிகையை அதன் நியமத்தின் படி ஆசரித்தவர்கள் மட்டும் இரண்டாவது பிரதான பண்டிகையான பெந்தெகொஸ்தே பண்டிகையை ஆசரிக்க முடியும்.
 
பஸ்கா பண்டிகையின் நியமத்தை ஆசரிக்காமல் பெந்தெ கொஸ்தே பண்டிகையை ஆசரிக்க முயற்சி செய்பவர்கள் அவர்களின் ஆசீர்வாதங்களை அவர்களே சாபமாக மாற்றிக்கொள்ளுகிறார்கள். 
 
பழைய ஏற்பாட்டின் புளிப்பில்லாத பஸ்கா பண்டிகை இந்த தலைப்பை தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள் ((கூழநு குஐசுளுகூ ஞசுஐசூஊஐஞடுநுளு டீகு ழுடீனு’ளு சுநுஏநுடுஹகூஐடீசூ) இரண்டாவது தலைப்பு 4-3-3-6 என்ற அட்டவணையில் பார்க்கவும்
 
புதிய ஏற்பாட்டின் பஸ்கா பண்டிகை
 
1.புதிய ஏற்பாட்டில் வீட்டு வாசலில் இரத்த அடையாளங் களின் பொருள்:-
 
பழைய எற்பாட்டில் ஒவ்வொரு வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்கள், மேல் குறுக்குசட்டம் ஆகிய இவற்றின் மேல் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்களின் பொருள்: புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆத்துமாவிலும் ஆவியிலும் கிரியைகளில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அறிவை அடையாளமாக தரித்துக் கொள்ளுவது.
 
புதிய ஏற்பாட்டில் பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங்கொண்டதின் மூலம் பழைய ஏற்பாட்டின் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங் களின் ஆசரிப்பு முறைகள் அதனுடைய பொருளுக்கு மாற்றப்படு கிறது
 
இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங்கொள்ளும் படியாக நிறைவேற்றின நியாயத்தீர்ப்பின் தேவ வார்த்தைகளை, தங்கள் அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் மனப்பூர்வாக ஏற்றுக் கொண்டு புதுசிருஷ்டியாக மாற்றப்பட்டு அவர்கள் நற்கிரியைகளினால் தேவ சித்தத்தை நிறைவேற்றும்படி தங்கள் சரீர அவயவங்களில் அடையாளங்களாக தரித்துக்கொள்ளுவது. Rom_8:3, Exo_12:7 , 1Pe_4:16, Heb_13:10-13, Deu_6:6-9, Gal_6:15-18, Heb_10:1-9, Heb_8:5, Heb_11:24-26, 1Co_5:6-8, 
 
2. புதிய ஏற்பாட்டில் பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாமிசம் புசிப்பதின் பொருள்:-
 
பலமான ஆகரமான நீதியின் பிரமாணத்தை புசிப்பது அல்லது ஏற்றுக்கொள்ளுவது. புதிய ஏற்பாட்டில் பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்து, பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளும் நீதியின் பிரமாணத்தை நிறைவேற்றுவதின் மூலம் பழைய ஏற்பாட் டின் பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை புசிக்கும் ஆசரிப்பு முறை கள் அதனுடைய பொருளுக்கு மாற்றப்படுகிறது. 
 
இயேசு கிறிஸ்து பாவத்தையும், மரணத்தையும் ஜெயங்கொள்ளும் நீதியின் பிரமாணத்தை தன்னுடைய ஆத்துமாவில் ஏற்றுக்கொண்டு, அறிவு, புத்தி, ஞானம் இவைகளினால் நிறைவேற்றுகிறபோது பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தினுடைய ஆசாரிப்பு முறைகளுடைய பொருளுக்கு வரு கிறது. Joh_1:14, Joh_6:48-60, Job_33:15-30, Pro_5:1-14, Luk_24:30-44, Isa_9:19-20, Ecc_5:1-6
 
3. பழைய ஏற்பாட்டில் புளிப்பில்லா பஸ்கா அப்பம் புசிப்பதின் பொருள்: புதிய ஏற்பாட்டில் நித்திய ஜீவ வார்த்தைகளான பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டு விசுவாசத் திலிருந்து விசுவாசத்திற்கு பிழைப்பது.
 
இரண்டு நாளைக்கு பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள் / இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு உயிர்த்தெழுதலின் தொடர்பில் பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களின் வசனப்பண்டிகை வருகிறது. Mat_26:2, Mar_14:1-2 Hos_6:1-3,Psa_90:4, 2Pe_3:8, 
 
புதிய ஏற்பாட்டில் எழுத்தின்படி பஸ்கா அப்பம் பிட்குதலை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் ஆசரிப்பு முறையாக பின்பற்றும்படி கிறிஸ்து நியமித்து, இதன் தொடர்பில் உள்ள பொருள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய வார்த்தைகளின் உவமைகள் உயிர்த்தெழுந்து தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளு வதின் தொடர்பில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும்படி கிறிஸ்து நியமிக்கிறார். Mat_26:26-32, Mar_14:22-28, Luk_22:7-20, Joh_6:48-58,
 
4. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் உயிர்த்தெழுதலை நினைவு கூறும்படி கிறிஸ்து எழுத்தின்படி பஸ்கா அப்பம் பிட்குதலை நியமிக்கிறார், ஆனால் முதலாம் நூற்றாண்டு அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளின் உயிர்த்தெழுதல் வரை; கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படி புதிய ஏற்பாட்டின் பஸ்கா அப்பம் பிட்குதலை எழுத்தின்படி ஆசிப்பு முறையாக பின்பற்றும்படி நியமிக்கிறார்கள். . 1Co_11:23-26, 
 
5. கிறிஸ்துவின் உயிர்தெழுந்த வசனங்களின் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிந்து கொண்ட வர்கள், ஜீவ அப்பமாகிய தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை புசித்து ஆவியில் பிழைத்து விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு முன்னேறுகிறார்கள் இவர்கள் கிறிஸ்துவின் உயித்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்துவின் உயித்தெழுதலை தெரிவிக்கிறார்கள். 
 
6. நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆவியில் பிழைக்கிற வர்கள் பஸ்கா அப்பம் பிட்குதலை எழுத்தின் படி ஆசரிப்பு முறைகளாக பின்பற்றாமல் நேரடியாகவே அதன் பொருளாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை புசித்து ஆவியில் பிழைக்கிறார்கள். 
 
7. எழுத்தின்படி பஸ்கா அப்பம் பிட்குதலை ஆசரிப்பு முறையாக பின்பற்றுகிறவர்கள் இந்நாள் வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கிறிஸ்துவின் மரணத்தையே நினைவு கூர்ந்து; இப்பொழுதும் கிறிஸ்துவின் மரணத்தை தெரிவிக்கிறார்கள் இவர்கள் மரித்தவர்கள் மத்தியில் ஜீவனுள்ள தேவனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
8. எழுத்தின்படி நிழலாட்டமாக கொடுக்கப்பட்ட அப்பம் பிட்குதலையே சிலர் பொருளாக நினைத்து அவைகளையே பின்பற் றிக் கொண்டிருக்கிறார்கள்; இதனால் ஆவி, ஆத்துமாவில் ஆவிக் குரிய மரணம் ஏற்பட்டு ஆவியில் மீண்டும் மரணத்தை சந்திக்கிறார் கள்.
 
கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாமல் அபாத்திரமாக கர்த்தருடைய அப்பத்தை புசிப்பவர்கள் தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜன பானம் பண்ணுகிறார்கள். Co_11:27-32, Jer_23:22-24, Pro_20:25, Joh_1:14, Joh_6:48-53,
 
பஸ்கா ஆப்பம் / மாமிசம் புசிப்பது :- தேவனுடைய பிரமா ணங்களை / நித்திய ஜீவ வார்த்தைகளை, தேவ ஆலோசனைகளாக / தேவ வார்த்தைகளாக பகுத்து, பிரித்து, சிந்தித்து, தியானித்து அவைகளை தன்னுடைய ஆவிக்குரிய ஆகாரமாக புசித்து ஆவி, ஆத்துமாவில் பிழைப்பது. 
 
கிறிஸ்துவின் மரணத்தை தெரிவிக்கும் பஸ்கா பண்டிகையினுடைய ஆசரிப்பு முறைகளில், எழுத்தின்படி பிரிவினைகள், மார்கபேதங்கள். 
 
1. கர்த்தருடைய பஸ்கா பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் போஜன பானம் பண்ணி எப்பொழுதுமே இருமனம் உள்ளவர்களாக இருப்பது.
 
2. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் மனுஷ ஆவியில் உபதேசங்களை உருவாக்கி, மனிதர் களிடம் மகிமையைத் தேடுவதால் அவர்களுக்குள்ளே மார்க்க பேதங்களும், பிரிவினைகளும், வெளிப்படுகிறது.
 
3. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் அநேகர் பஸ்கா அப்பமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை புசிக்க பெலவீனராக / பெலமில்லாதவர்களாக மாறி தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளுவது. 
 
4. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் அநேகர் பஸ்கா அப்பமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் பண்ணுகிற வியாதிக்கு அடிமைகளாக்கப்பட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்வது.
 
5. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்த படியால் அநேகர் ஆவி, ஆத்துமாவில், இரண்டாம் முறை மரணம் அடைந்து, ஆவி ஆத்துமாவில் நித்திரை மயக்கத்தின் தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்ளுவது.
 
6. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை அபாத்திரமாக புசித்தபடி யால் அநேகர், யூதாசைப் போல இயேசு கிறிஸ்துவை பணத்திற்கு காட்டிக் கொடுத்து; ஆவிக்குரிய காரியங்களில் தலை கீழாக விழுந்து, இரண்டாம் முறை மரணம் அடைந்து, ஆவி ஆத்துமாவில் நித்திரை மயக்கத்தின் தேவனுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்ளுவது.
 
7. கர்த்தருடைய பஸ்கா அப்பத்தை புசிப்பதற்கேற்ற நீதியின் கிரியைகளாகிய கலியாண வஸ்திரம் இல்லாதபடியால் பஸ்கா பந்தியிலிருந்து புறம்பான இருளாகிய அறியாமைக்கு தள்ளப்படுதல்.
 
பெந்தெகொஸ்தே பண்டிகை
 
பெந்தெகொஸ்தே பண்டிகை / சேர்ப்பு கால பண்டிகை / வாரங்களின் பண்டிகை, அறுவடைப் பண்டிகை / முதற்கனிகளின் பண்டிகை என்கிற பல பொருளை வெளிப்படுத்தும் பண்டிகை. பெந்தெகொஸ்தே என்கிற வார்த்தையின் பொருள் ஐம்பதாவது நாள் இந்த பண்டிகை ஐம்பது நாட்களைக் கொண்டது இது யூதர்களின் பிரதான இரண்டாவது பண்டிகை. 
 
இந்த பண்டிகையை கிறிஸ்தவர்களின் பிறந்த நாள் என்று சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள் அல்லது கருதுகிறார்கள் Lev_23:9-21, Lev_23:15-16, 
 
பஸ்கா பண்டிகை முடிந்த மறுநாளே இந்த பெந்தெ கொஸ்தே பண்டிகை ஆரம்பமாகிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்ட மறுநாள் முதல் இந்த பண்டிகை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்து பஸ்கா பண்டிகை அன்று சிலுவையில் அடிக்கப் பட்டார். Joh_13:1, Joh_18:28, Joh_18:39, Joh_19:14, 
 
புதிய ஏற்பாட்டில் ஆவியின்படி பெந்தெகொஸ்தே பண்டிகையின் பொருள்:-
 
1. கிறிஸ்துவின் உபதேசங்களை நடைமுறைப்படுத்தி தீமையை நன்மையினால் ஜெயங்கொள்ளுகிறவர்கள் / ஆண் பிள்ளைகள், தங்களுடைய, ஆவி, ஆத்துமா, சரீரத்தில் விளைந்த முதற்கனிகளின் முதற்பலன்களை, தங்கள் மனவிருப்பத்தின்படி தேவனுடைய சமூகத்தில் கொண்டு வந்து காணிக்கை செலுத்தி பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுதல். 
 
பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள வழிமுறைகள். 
 
1-1 பஸ்கா பண்டிகையின் நியமங்களை ஆவிக்குரிய நிலையில் ஆசரித்திருக்க வேண்டும்.
 
1-2 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தரிசனத்தை / ஒலிவ மலையின் தரிசனத்தை பெற்றிருக்க வேண்டும். Act_1:1-5, 
 
1-3 பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுவதற்காக எருசலேமில் / தேவனுடைய வார்த்தைகளின் படி காத்திருக்க வேண்டும். Act_1:1-5, 
 
1-4 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தரிசனத்தை பெற்றுக் கொண்டதிலிருந்து எருசலேமில் / தேவனுடைய வார்த்தைகளின் படி காத்திருப்பதற்காக வந்து சேருவதற்கு, கடந்து செல்ல வேண்டிய ஓய்வு நாள் பிரயாண தூரம் / ஓய்வு நாள் பிரமாணங்களை கடந்து செல்ல வேண்டும். Act_1:12-15 
 
1-5 எருசலேமில் பெந்தெகொஸ்தே நாளில் பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவி அருளப்பட்டது. Act_2:1-5,
 
1-6 பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்கள் 1Co_12:7-12, 1-7 கிறிஸ்துவின் சரீர அவயவங்களில் பரிசுத்த ஆவியின் கிரியைகள் Eph_4:11-16
 
2. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேர்ந்து, அதைக்கட்டிக் கொண்டு, அதில் வாசம் பண்ணும்போது, கர்த்தர் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. Deu_26:1-3
 
3. கர்த்தர் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட வாக்கு தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட படியால் எனக்கு தேவன் பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித் தத்தை அறிந்து கொண்டேன் என்று இன்று உம்முடைய தேவ னாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 
 
Deu 26:1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம் பண்ணும்போது, 
 
Deu 26:2 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் சேதத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத் திற்குப்போய், 
 
Deu 26:3 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி : கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம் முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன், என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்தியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 
 
3. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் என்னை விடுதலையாக்கி பாலும், தேனும் ஓடுகிற இந்த நல்ல தேசத்தை தேவன் எங்களுக்கு கொடுத்தார் :-
 
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் எங்களை விடுதலையாக்கி தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங் களையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆசீர் வாதங்களையும் தேவன் எங்களுக்கு கொடுத்தார். Deu_26:4-9, 
 
Deu 26:4 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடைiயை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலி பீடத் திற்கு முன்பாக வைக்கக்கடவன். 
 
Deu 26:5 அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து? அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான். 
 
Deu 26:6 எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப் படுத்தி, எங்கள் மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது,
 
Deu 26:7 எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக் கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஓடுக்கத்தையும் பார்த்து, 
 
Deu 26:8 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தி னாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற் புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, 
 
Deu 26:9 எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத் தார்.
 
4. தேவன் எங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களின் முதற் பலன்களை உம்முடைய சமூகத்தில் கொண்டு வந்து சேர்த்தேன் என்று நீயும், லேவியனும், பரதேசியும் உன் வீட்டாரும் சந்தோஷப் படுவீர்களாக
 
தேவன் எங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களின் முதற் பலன்களையெல்லாம் உம்முடைய சமூகத்தில் கொண்டுவந்து சேர்த் தேன்; இவைகள் உம்முடைய சித்தப்படி எங்களுக்கு கொடுத்தீர், எங்களுடைய திறமைகளினால் அல்ல என அறிக்கையிட்டு கர்த் தருக்கு முன்பாக பணிந்து நீயும், லேவியன், பரதேசி உன் வீட்டாரும் சந்தோஷப்படுவீர்களாக Deu_26:10-11, 
 
Deu 26:10 இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டு வந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்த ருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதி யில் பணிந்து 
 
5. மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து வந்து, நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற் குக் கீழ்ப்படிந்து தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
 
தேவனால் முன் குறிக்கப்பட்டு முதலாவது, அழைக்கப்பட்ட வர்களின் நிலையைக் கடந்து, இரண்டாவது தெரிந்து கொள்ளபட்ட வர்களின் நிலையைக் கடந்து, மூன்றாவது உண்மையுள்ளவர்கள் நிலையைக் வந்தடைந்தவர்கள்; தங்கள் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து வந்து, நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத் திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. Deu_26:12-14,
 
Deu 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்து திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்த பின்பு, 
 
Deu 26:13 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்தியில் போய் அவரை நோக்கி : தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்ட ளைகளின் படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலி ருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள் ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
 
Deu 26:14 நான் துக்கங்கொண்டாடும் போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்க வும் இல்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
 
6. முதல் வருஷத்திலே தானாய் விளைகிறதை சாப்பிடு வீர்கள்; இரண்டாம் வருஷத்திலே தப்பிப்பயிராகிறதை, சாப்பிடுவீர் கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். 
 
Rev 17:14 ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜவுமாயிருக்கிற படியால்; அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்ட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மை யுள்ளவர்களுமா யிருக்கிறார்கள் என்றான்.
 
தேவனால் முன் குறிக்கப்பட்டு முதலாவது அழைக்கப் பட்டவர்களின் நிலையிலிருந்தபோது என்னுடைய மனதில் தானாக / சுயமாக வெளிப்பட்ட ஆலோசனைகளையே என் ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்தேன்.
 
இரண்டாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிலையி ருந்தபோது, மற்றவர்களுக்கு வெளிப்படாத தேவ ஆலோசனைகளைத் தேடிப்பார்த்து, தெரிந்து கொண்டு அவைகளை என் ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்தேன், மூன்றாவது உண்மையுள்ளவர்கள் நிலைமைக்கு வந்தடைந்தபோது என்னுடைய இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வசனங்களை விதைத்து தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் ஆசீர்வாதங்களை அறுத்து, அதன் கனிகளை 30% / 60% / 100% என்கிற அளவுகளில் என் ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்தேன் Isa_37:30-32,
 
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால் : இந்த வருஷத்திலே தானாய் விளைகிறதை சாப்பிடுவீர்கள் இரண்டாம் வருஷத்திலே தப்பிப்பயிராகிறதை சாப்பிடுவீர்கள், மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து , திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
 
மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். 
 
7. நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப் படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்ட படி சகலமும் செய்தேன்.
 
Deu 26:15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தாலமாகிய பரலோகத் திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேல ரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
 
நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவர்களையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களையும் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் மூலம் தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் ஆசீர்வாதங்களையும் ஆசீர்வதியும் என்று சொல்லுவாயாக. 
 
8. பெந்தெஸ்கொஸ்தே பண்டிகையின் நியமங்களை ஆச ரித்து வந்தால் தேவனுக்கு சொந்த ஜனமாயிருப்பாய் / எனக்குப் பரி சுத்த ஜனமாயிருப்பாய் எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சி யிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்.
 
Deu 26:16 இந்தக் கட்டளைகளின் படியும் நியாயங்களின் படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார் ஆகையால் உன் முழு இருதயத்தோடு உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். 
 
Deu 26:17 கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்,
 
Deu 26:18 கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி : நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், 
 
Deu 26:19 நான் உண்டு பண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும் படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
 
பெந்தெகொஸ்தே பண்டிகையின் நியமங்களின்படி அறுப் புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவ னாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருத யத்திலே சொல்லுகிறதில்லை. ஆகையால் தேவன் அவர்களுக்கு அந்தந்தப் பருவத்திலே அவர்களுக்கு மழையையும், முன் மாரியையும் பின்மாரியையும் கொடுக்காத படியினால், அவர் களுடைய ஆசீர்வாதங்களை இழந்து போகிறார்கள்.
 
Jer 5:20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால், 
 
Jer 5:21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கோளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
 
Jer 5:22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார் ; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாத படிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாத படிக்கும், கடக்கப் கூடாhத நித்திய பிரமாணமாகச் சமுத்திரத்தின் மணலை எல்லை யாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு முன்பாக அதிராதிருப்பீர்களோ?
 
Jer 5:23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம் பண்ணிப் போய்விடுகிறார்கள். 
 
Jer 5:24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக் குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
 
Jer 5:25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக் கிறது. 
 
கூடாரப் பண்டிகை
 
கூடாரப் பண்டிகை / சேர்ப்புக்கால பண்டிகை ஏழு நாட்களை கொண்டது, இது யூதர்களின் பிரதான மூன்றாவது பண்டிகை, ஏழாம் மாதம் முதலாம் நாள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பின் செய்தியை ஞாகப்படுத்தி, ஏழாம் மாதம் பத்தாம் தேதி தேவ சமூகத் தில் தங்களை தாழ்த்தி பாவ நிவிர்த்தி செய்து; ஏழாம் மாதம் பதி னைந்து முதல் இருபத்தியொன்றாம் தேதி வரை எகிப்தில் கூடாரங் களின் ஏழு நாட்கள் கூடாரங்களில் வாசம் பண்ணவேண்டும் / புதிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுவதற்காக பழையவைகளை தங் களைவிட்டு விலக்கி, தங்கள் தகுதிக்கேற்றபடி தேவ சமூகத்தில் காணிக்கைகளை கொண்டு வரவேண்டும்.
 
புதிய ஏற்பாட்டில் ஆவியில் படி கூடாரப் பண்டிகையின் பொருள் :-
 
1. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரித்து, ஓய்ந்திருந்து கர்த்தருடைய பண்டிகையாக நினைவு கூறுவாயாக Lev_23:1-3, 
 
2. ஏழாம் மாதம் முதலாம் தேதி தேவனுடைய நியாயத் தீர்ப்பின் செய்தியை எக்காள சத்தத்தால் ஞாபகக் குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடுகிற பரிசுத்த ஓய்வு நாள் Lev_23:23-25, Eze_33:1-7, Hos_8:1-4, Isa_48:1-2, Nag_1:7, 2Ti_2:19, 1Co_8:3, 
 
3. ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்கள் ஆத்துமாவை தாழ்மைப்படுத்தி, பாவ நிவர்த்தி செய்யும் விசேஷித்த பரிசுத்த ஓய்வு நாள் டு Lev_23:26-32, Heb_11:13-16, 
 
4. போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகம்படி, பழையதை விலக்கி, பின்பு கூடாரப்பண்டிகையை ஆசாரிக்க வேண்டும். Deu_16:13-15, Lev_26:10, Lev_23:39, Exo_23:14-17, 
 
5. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதி முதல் ஏழு நாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. Lev_23:33-36, Heb_9:8-10,
 
6. நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக் கைகளும் பொருத்தனைகளும் உற்சாக பலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத் தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகன பலி, போஜபலி, இரத்த பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும் படி சபை கூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே. Lev_23:37-38, 
 
7. எகிப்தில் கூடாரங்களின் குடியிருப்பதை உங்கள் சந்ததி யார் அறிந்து கொள்ளும்படி நீங்கள் ஏழு நாட்கள் கூடாரங்களில் வாசம் பண்ண வேண்டும். Lev_23:39-44, Heb_11:13-16, Lev_21:16, Lev_21:24, Lev_22:1,
 
அத்தியாயம் ஒன்று
 
6-4 ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதி சயங்களை குத்து விளக்கின் குணாதிசயங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல்
 
1. குத்து விளக்கு
 
2. குத்து விளக்கின் ஏழு அகல்கள் 
 
3. நீதிமான்களின் விளக்கு
 
4. துன்மார்க்கனின் விளக்கு
 
5. விளக்கிலிருந்து வெளிச்சம் பிரகாசித்தல்
 
6. விளக்கின் எண்ணையை தாங்கி நிற்கும் கிண்ணம் 
 
7. விளக்கில் ஓலிவ எண்ணையை ஊற்றுதல்
 
8. விளக்கில் ஒலிவ எண்ணெய் குறைந்து போகுதல்
 
9. விளக்கை தாங்கி நிற்கும் விளக்கு தண்டு
 
10. மரக்காளின் கீழ் விளக்கை வைப்பது. 
 
11. பாத்திரத்தின் கீழ் விளக்கை வைப்பது
 
12. கட்டிலின் கீழ் விளக்கை வைப்பது
 
13. மறைவிடத்தில் விளக்கை வைப்பது.
 
1. குத்து விளக்கு :- தேவனுடைய வார்த்தைகள் Lev_10:11-12 (2), Lev_10:16, Joh_1:1-5, 2Pe_1:19, Num_8:1-4, Heb_9:1-2 , 
 
2. குத்து விளக்கின் ஏழு அகல்கள்:-
 
தேவ வாத்தைகளின் ஏழு பிரமாணங்களின் மூலம் வெளிப்படுகிற நீதியின் கிரியைகள் மோசேயின் மூலம் வெளிப்பட்டு இயேசு கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்டவைகள். மோசேயின் புஸ்தகங்கள், சங்கீதம் 19,119 அதிகாரங்கள். Psa_19:1, Psa_119:1, Zar_4:2, Lev_24:1-4, Exo_27:20, Exo_39:37,
 
1. கர்த்தருடைய வேதம்
 
2. கர்த்தருடைய வழிகள்
 
3. கர்த்தருடைய நியாயங்கள்
 
4. கர்த்தருடைய சாட்சிகள். 
 
5. கர்த்தருடைய கட்டளைகள்
 
6. கர்த்தருடைய கற்பனைகள்
 
7. கர்த்தருடைய பிரமாணங்கள்.
 
3. நீதிமான்களின் விளக்கு :- நீதிமான்களின் தரிசனங்கள். . Joh_5:33-39, Psa_18:28, Job_29:3, 
 
4. துன்மார்க்கனின் விளக்கு :-
 
Pro_20:20, Pro_24:20, Job_18:5-7, Job_21:17-19, 
 
5-1. விளக்கிலிருந்து வெளிச்சம் பிரகாசித்தல் நற்கிரியைகளை செய்தல் Mat_5:14-15, Psa_37:6,
 
5-2 தேவ தரிசனங்களை உணர்ந்து கொள்ளுதல் Luk_11:33-36, Job_35:13-14, Psa_89:15, Job_37:21-22, Isa_8:18-20, Job_29:3, Mat_10:26-27, Luk_12:2-3, Rev_18:23, Isa_2:1-5, Mic_4:1-3, Isa_51:4, 
 
6. விளக்கின் எண்ணையை தாங்கி நிற்கும் கிண்ணம் :- ஒருவன் அடைந்த இரட்சிப்பின் பாத்திரம் Psa_116:12-14, 2Ti_2:19-21, Mat_25:4-10, Zar_4:2-3, Rom_9:20-23, 
 
7. விளக்கில் ஒலிவ எண்ணையை ஊற்றுதல் :- 
 
கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, தன்னை சீர்திருத்திக் கொள்ளும்போது அறிவு, புத்தி ஞானம் மற்றும் இவைகளுடன் கலந்த நற்கிரியைகளும் படிப்படியாக முன்னேறுகிறது. Psa_141:5, Mat_6:17, Ecc_9:8, Rev_6:6, 2Ti_3:16-17, Jam_5:14-16, Isa_58:8-10, 
 
8. விளக்கில் ஒலிவ எண்ணெய் குறைந்து போகுதல் :- கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் போது தீமையின் அறிவு, புத்தி ஞானம் மற்றும் இவைகளுடன் கலந்த தீமையின் கிரியைகளும், நற்கிரியைகளின் அறியாமைக்கு / இருளுக்கு படிப்படியாக முன்னேறுகிறது. Exo_27:20, Exo_39:37, Lev_24:1-4, Isa_42:3, Mat_12:20, Pro_1:23, Luk_10:34, Luk_12:35-37, Luk_13:25-30, Mat_25:4-10, Isa_1:4-6, 
 
9-0 விளக்கை தாங்கி நிற்கும் விளக்கு தண்டு:- 
 
ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம்
 
9-1 பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணம் 
 
9-2 அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் 
 
9-1 பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம்:-
 
பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப்பிர மாணம் / முன்மாரி மழையின் ஊழியங்களின் ஐந்து வகையான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள் Eph_4:11-13, 1Co_12:4-12, 1Co_12:27-31, 1Pe_4:10-11, 
 
1. அப்போஸ்தலர் 2 தீர்க்கதரிசி 3 போதகர் 4 மேய்ப்பர் 5 சுவிசேஷகர்; பரிசுத்த ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுத்த இந்த ஐந்து வகையான ஊழிய அழைப்பில் ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக்கொள்ள கூடிய இரண்டு அடிப்படையான நற்கிரியைகளை தங்களுடைய ஊழிய அழைப்பில் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தினுடைய நற்கிரியைகள் ஒரு ஜோடியானவை கள், கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக் கொள்ள கூடியவைகள்.
 
1. பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தில் வலது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள் :- 
 
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்தி விருத்தியடைந்து கட்டப்படுவதற்கான ஒவ்வொரு நாளும் சபையின் ஒரு ஊழியராக இருந்து கொண்டு நற்கிரியைகளை ஊழியத்தில் நிறைவேற்றுவது. 
 
2. பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தின் இடது பக்கத்தின் பாதாரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:-
 
ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் சீர்பொருந்துவதற்காக தன்னுடைய குறைகளை சீர்த்திருத்திக்கொண்டு, சபையின் ஒரு ஊழியராக இருப்பதற்காக பயிற்சியை எடுத்துக்கொள்வது 
 
Eph 4:12 For the perfecting of the saints, for the work of the ministry, for the edifying of the body of Christ: (King James Version) 
 
Eph 4:12 For the training of the saints as servants in the church, for the building up of the body of Christ: (Bible in basic english 1965)
 
9-2 அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம்:-
 
அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் / முன்மாரி, பின்மாரி மழை ஊழியங்களின் இரண்டு வகையான ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்கள், இவைகள் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத் தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக் கொள்ளக் கூடிய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்
 
1. கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு, தீர்க்கதரிசிகளான மோசே, எலியா இவர்களின் ஊழியங்கள்.
 
2. கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பு, தீர்க்கதரிசிகளான மோசே, எலியா, எலிசா, யோவான், இவர்களின் ஊழியங்கள்; அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தில் தேவன் ஒரு வகையான ஊழிய அழைப்பு மட்டும் தனியாக பிரித்து / பகிர்ந்து கொடுப் பதில்லை, இவைகள் ஒரு ஜோடியானவைகள், இவைகளை பிரிக்க முடியாதவைகள் Zar_4:2, Zar_4:11-14, Rev_2:5, Rev_11:4, Mal_4:1-6, Mal_3:13-18, 1Ki_18:17-29, 1Ki_18:30-46,
 
அபிஷேக ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுத்த ஒரு ஜோடியான ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள், கீழே குறிப்பிட்ட ஒரு ஜோடியான நற்கிரியைகளையும் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சையை போல தரித்துக் கொள்ள கூடிய இரண்டு அடிப்படையான நற்கிரியை களையும் தங்களுடைய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் ஊழியங்களில் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
1. அபிஷேக ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில், ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- Rev_11:1-13, 
 
கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு, கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துபடுத்தும் ஊழிய அழைப்பு, ஆகிய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் தேவ சித் தத்தை தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட நாற்பத்திரண்டு மாதங்களில் நிறைவேற்றுவது.
 
2. அபிஷேக ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தின் இடது பக்கத்தின் பாதரட்சையை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- Rev_11:1-13
 
தேவ வார்த்தையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் சாட்சி யைக்குறித்தும் உள்ள தரிசனங்களைப் பின்பற்றி ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் நற்கிரியைகளை செய்து தேவனுடைய இராஜ்ஜி யம் ஸ்தாபிக்கப்பட நாற்பத்திரண்டு மாதங்களில் தேவ சித்தத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுவது.
 
10. மரக்காளின் கீழ் விளக்கை வைப்பது :- ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் இல்லாமல் வியாபார நோக்கத்துடன் ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு.
 
11. பாத்திரத்தின் கீழ் விளக்கை வைப்பது :-
 
ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் இல்லாமல் பட்டம், பதவி, ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு.
 
12. கட்டிலின் கீழ் விளக்கை வைப்பது:- 
 
ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் இல்லாமல் 
 
அலட்சியமாக , சோம்பலாக இருந்து கொண்டு ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு.
 
1. மறைவிடத்தில் விளக்கை வைப்பது:- 
 
ஊழிய அழைப் பின் அளவுப்பிரமாணம் இல்லாமல் தங்களுடைய இரகசியமான திட்டங்களுக்குக் கேற்றபடி ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு Mat_5:14-15, Mar_4:21-25, Luk_8:16-18, Luk_11:33-36,
 
அத்தியாயம் ஆறு
 
6-5 ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை, மழை, முன்மாரிமழை, பின்மாரி மழை ஆகியவைகளின் குணாதிசயங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல்.
 
1. மழை :- ஏற்ற வேளையில் பேச வேண்டிய வார்த்தை களை தேவ அறிவு, புத்தி, ஞானம் இவைகளிலிருந்து பகுத்தறிந்து, நிதானித்து , ஞானமாக பேசுதல் 
 
Lev_26:4, Deu_28:12, Isa_50:4, Eze_34:26-27, Isa_30:22-23, Jer_17:7-10, Psa_1:1-6, Deu_32:1-2, Psa_72:6, Psa_68:7-9, Pro_25:23, Psa_84:5-7, Mic_5:7-8, Job_28:20-28, Job_29:21-23, Job_38:27-28, Jer_10:13, Jer_51:16, Mat_5:43-48, 2Sa_23:4, Isa_4:6, Son_2:10-11, Heb_6:7, 
 
2. மழை இல்லாமை :- ஏற்ற வேளையில் பேச வேண்டிய வார்த்தைகள் இல்லாதபடியால் தங்களுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளிலிருந்து, அர்த்தமில்லாத / உபயோகமில்லாத வார்த்தைகளை திரளாக பேசுதல் 
 
Zar_14:17, Jer_3:1-5, Jer_14:1-5, Isa_5:6, Mal_3:8-10, 2Ch_7:13, 2Ch_6:26-27, 1Ki_8:35-36, Psa_68:5-6, Jer_17:5-6, Jer_17:11-13, Psa_146:5, Pro_25:13-14, 
 
3. புழுதி மழை :- மற்றவர்கள் கேட்க விரும்பாத வார்த்தை களை வெளிப்படையாக சரளமாக திரளாக பேசுதல், கேட்பவர்கள் மனதை வேதனைப்படுத்தும் அவதூறான வார்த்தைகளை சரளமாக பேசுதல் / மற்றவர்கள் கேட்கும்போது முகம் சுழிக்கும் வார்த்தை களை வெளிப்படையாக சரளமாக பேசுதல் 
 
Job_37:6-13, Job_38:22-30, Psa_18:12-14, Psa_147:15-18, Exo_9:18-26, Exo_9:27-34, Exo_10:5-15, Jos_10:11, Isa_28:17, Isa_30:30, Isa_32:19, Eze_13:13, Eze_38:22, Rev_8:7, Rev_11:19, Rev_16:21,
 
5. முன்மாரி மழை :- பரிசுத்த ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுக்கிற கிருபைவரங்கள், கிரியைகள் மற்றும் ஐந்து வகையான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்
 
1. அப்போஸ்தலர் 2. தீர்க்கதரிசி 3 போதகர் 4 மேய்ப்பர் 5 சுவிஷேசகன்.
 
Eph_4:11-16, Eph_2:20-22, 1Co_12:4-11, 1Pe_4:10-11, Rom_12:2-8, 2Co_10:12-18, 2Ti_2:19-21, 1Co_3:10-15,
 
6. பின்மாரி மழை:- தேவனுடைய அபிஷேக ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுக்கிற கிருபைவரங்கள், கிரியைகள், மற்றும் இரண்டு வகையான ஊழிய அழைப்பினுடைய அளவுப் 
 
பிரமாணங்கள்.
 
1. கர்த்தரை ஆராதனை செய்யும் படி ஆயத்தப்படுத்து வதற்காக தேவனுடைய அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப் பின் விசேஷித்த அளவுப்பிரமாணங்கள் 
 
2. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்காக தேவ னுடைய அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் விசேஷித்த அளவுப் பிரமாணங்கள் முன்மாரி மழை மற்றும் பின்மாரி மழையின் மூலம் தேவனுடைய ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுக்கிற கிரு பைவரங்கள், கிரியைகள் மற்றும் ஊழிய அழைப்புகளினால் தனிப் பட்ட நபர்களுக்கு தேவன் பகிர்ந்து கொடுக்கும் ஆசீர்வாதங்கள். 
 
Zec_10:1-6, Jer_3:1-5, Pro_16:15, Job_28:20-28, Job_29:21-23, Jam_5:7-9, Hos_6:1-4, Jer_5:23-25, Deu_11:13-17, Act_2:15-21, Joe_2:23, Joe_2:28-32,
 
7. அறுவடை / அறுப்புக்காலம் :-
 
உலகத்தின் முடிவில் அவரவர் கிரியைகளுக்கு கேற்ப பிரதிபலனை பெற்றுக்கொள்ளும் காலம் Joh_5:35-38, 2Co_9:6-10, Gal_6:7-10, 
 
அத்தியாயம் ஆறு
 
6-6 ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்
 
1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
3. ஊழியஅழைப்பின் அளவுப் பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவதரிசனங்கள் வெளிப்படுத்தப் படும்போது அவைகளை விசுவாசியாமற் போனால், தரிசனம் நிறை வேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவதரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளி வாக பேச முடியும்.
 
4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருதயத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும்போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
6. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு, நாள் சிறுபிள்ளை எனக்கு பேசத் தெரியாது என்று தன்னை; தேவ சமுகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும்.
 
7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட் டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீப்பை தெளிவாக பேச முடியும்.
 
8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியாமான வார்த்தை களின் ஞானத்தை தெளிவாக பேசமுடியும்.
 
1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும் போது தேவனுடைய வார்த் தைகளை தெளிவாக பேச முடியும்.
 
சரீர அவயவங்களில் குருட்டுத்தன்மை குறைபாடு மட்டும் உள்ளவர்கள், மற்றவர்கள் காண்கிற காட்சிகளை தெளிவாகக் காணமுடியாமல் எப்படி நிலைகுலைந்து தடுமாறிப் பேசுகிறார்களோ, அதுபோலவே தங்கள் ஆவி, ஆத்துமாவில் தேவனுடைய தரிசனங் களையும் வெளிப்பாடுகளையும் தெளிவாக காணமுடியாத ஆவிக் குரிய குருட்டுத்தன்மை உள்ளவர்களும் தேவனுடைய வார்த்தை களை மற்றவர்களுக்கு முன்பாக தெளிவாக பேச முடியாமல் நிலை குலைந்து தடுமாறுகிறார்கள்.
 
குருடனுக்கு குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? ஆவி ஆத்துமாவில் தேவனு டைய தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் தெளிவாக காணமுடி யாத ஆவிக்குரிய குருட்டுத்தன்மையுள்ளவர்கள்; இவர்களைப் போல ஆவிக்குரிய குருட்டுத்தன்மை உள்ள மற்றவர்களுக்கு இவர் கள் எப்படி ஆவி, ஆத்துமாவில் தேவனுடைய தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் குறித்துள்ள ஆவிக்குரிய வெளிச்சத்திற்கு வழி நடத்த முடியும், அப்படி வழி நடத்தினால் இருவரும் பள்ளத்தில் / பாதாளத்தில் விழுவார்கள் அல்லவா? 
 
இவர்களுக்கு ஆவி ஆத்துமாவில் குருட்டத்தன்மை நீங்கும் போது தங்கள் ஆவி, ஆத்துமாவில் தேவ தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் தெளிவாகக் கண்டும், உணர்ந்து கொண்டும் மற்றவர்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தேவ தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் தெளிவாக பேச முடியும்.
 
Mat_9:27-28 , Mat_11:5, Mat_12:22 , Mat_15:14 , Mat_15:30-31 , Mat_20:30, Mat_21:14, Mat_23:16-17 , Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Mar_8:22-23 , Mar_10:46, Mar_10:49, Mar_10:51, Luk_4:18, Luk_6:39Rom_2:19, 2Pe_1:9, Rev_3:17
 
2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை
 
பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
சரீர அவயவங்களில் செவிட்டுத்தன்மை குறைபாடு மட்டும் உள்ளவர்கள் மற்றவர்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் எப்படி? மற்றவர்களுக்கு தெளிவாக மறுபடி / பதில் கொடுக்க முடியாமல், தன் வார்த்தைகளில் நிலைகுலைந்து தடுமாறுகிறார்களோ; அது போலவே தங்கள் இருதயத்தில் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப் படுத்துகிற ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை உள்ளவர்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு முன்பாக தெளிவாக பேச முடியாமல் நிலை குலைந்து தடுமாறுகிறார்கள்.
 
காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று வேதத்தில் குறிப்பிடக் காரணம் இந்த ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை அநேகருக்கு உண்டு என்பதை தேவன் அறிந்தபடியால்; இப்படி வேதத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை நீங்கும் போது, தேவனுடைய வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக பேச முடியும். 
 
Mat_9:32-33 , Mat_12:22 , Mat_15:30-31 , Luk_11:14Mat_11:5, Mar_7:32, Mar_7:37, Mar_9:25, Luk_7:22
 
3. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவ தரிசனங்கள் வெளிப்படுத்தப்படும்போது அவைகளை விசுவாசியாமற்போனால் தரிசனம் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவ தரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவ தரிசனங்கள் வெளிப்படுத்தப்படும்போது, அவைகளை விசுவாசியாமற் போனால் தேவ தரிசனம் நிறைவேறும் காலம் வரை, அவர்கள் தேவ தரிசனங்களை போசாமல் ஊமையாக இருந்து; அவைகள் நிறைவேறின பின்பு, அந்த தரிசனங்களை எழுத்து பலகையில் எழுதி மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்போது அவர்கள் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவ தரிசனங்களை தெளிவாக பேச முடியும். Luk_1:11-20 Luk_1:57-64Luk_1:65-70, Luk_1:71-79,
 
4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருயதத் தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனு டைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
Jer 15:16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவை களை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந் தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்து; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப் பட்டிருக்கிறது. 
 
Jer 15:17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
 
Jer 15:18 என் நோவு நித்திய காலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற் றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப் போலவும் இருப்பீரோ?
 
Jer 15:19 இதினிமித்தம் : நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்து மிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப் பெற்றதைப் பிரித் தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும் பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார். 
 
Jer 15:20 உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்காமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார் கள்; உன்னை இரட்சிப்பதற்காவும், உன்னைத்தப்பு விப்பதற்காவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Jer 15:21 நான் உன்னைப்பொல்லாதவர்களின் கைக்குத்தப்பு வித்து, உன்னைப் பல வந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார். (தேவ நாமம் தரிக்கப்பட்ட தேவ ஜனங்கள் தேவ அறிவை அடைந்த பிறகு அர்த்தமில்லாத வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் பிரித்தெடுத்தால் அதிக விலை மதிப்புள்ள தேவனுடைய வாயின் வார்த்தைகளை அவர்கள் வாயினால் பேசமுடியும்) Heb_5:12-14, Pro_25:4, Pro_10:20, 
 
5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும் போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
 
ஒருவன் தேவனுடைய இராஜ்ஜியத்தின் தரிசனத்தை பெற்ற பிறகு, நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன், அசுத்தமானவை களை பேசுகிற ஜனங்களுக்குள்ளே வாசமாயிருக்கிறவன் என்று தன் னைத் தாழ்த்தி தேவ சமூகத்தில் அறிக்கையிட வேண்டும் அப் பொழுது பலிபீடத்தின் அக்கினியால் தன் உதடுகள் தொடப்பட்டு அவனுடைய அக்கிரமம் நீங்கி,பாவம் நீவர்த்தியாகும் அதற்கு பின்பு தேவனுடைய வார்த்தைகளை உவமைகளாக / மறைபொருளாக பேசுவதற்கு தேவனால் அனுப்பப்படுகிறான்.
 
Isa 6:5 அப்பொழுது நான் : ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
 
Isa6:6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து 
 
Isa 6:7 அதினால் என் வாயைத் தொட்டு : இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்.
 
Isa 6:8 பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப்போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத் தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
 
Isa 6:9 அப்பொழுது அவர் : நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
 
Isa 6:10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்கா மலுமிருக்க, நீ அவர்கள் இருயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
 
6. தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு நான் சிறுபிள்ளை எனக்கு பேசத்தெரியாது என்று தன்னை தேவ சமூகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும்.
 
தேவனால் முன் குறிக்கப்பட்ட ஒருவன் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொண்டபிறகு, எனக்கு தேவ வார்த்தைகளை பேசத்தெரியாது, நான் படித்து அறிந்துகொள்ள வேண்டிய காரியங் கள் அநேகம் உண்டு என்று தேவ சமூகத்தில தனைத்தாழ்த்தும் போது தேவனே அவனுடைய உதடுகளைத் தொட்டு தேவனுடைய வார்த்தைகளை அவனுடைய வாயிலே வைத்து, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்புகிறார்.
 
Jer 1:4 கர்த்ததருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் :
 
Jer 1:5 நான் உன்னைத்தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக் குத் தீர்க்க தரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
 
Jer 1:6 அப்பொழுது நான் : ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
 
Jer 1:7 ஆனாலும் கர்த்தர் : நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசு வாயாக. 
 
Jer 1:8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும் படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, 
 
Jer 1:9 கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு : இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். 
 
Jer 1:10 பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும் நாட்டவும் உன்னை நான் இன்றைய தினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின் மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
 
7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட்டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு, அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீர்ப்பை தெளிவாக பேச முடியும்.
 
Eze 3:24 உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள் உன்னை அடைத்துக்கொண்டிரு.
 
Eze 3:25 இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப் போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போக வேண்டாம். 
 
Eze 3:26 நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஓட்டிக் கொள்ளப்பபண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலக வீட்டார். 
 
Eze 3:27 நான் உன்னோடே பேசும் போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் உன்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட் கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.
 
Eze 24:25 பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச் சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களு டைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களை விட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ, 
 
Eze 24:26 அந்த நாளிலே தானே தப்பி வந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
 
Eze 24:27 அந்த நாளிலே தானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பி வந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப் படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்து கொள்வார்கள் என்றார்.
 
8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து, தன்னை தேவனுக்கு முன் பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் ஞானத்தை தெளிவாக பேச முடியும்.
 
Dan 10:14 இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக் குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும் படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.
 
Dan 10:15 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல் லுகையில், நான் தலை கவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப் போனேன்.
 
Dan 10:16 அப்பொழுது மனு புத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி : என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.
 
Dan 10:17 ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெல னில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். 
 
Dan 10:18 அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத்தொட்டு, என்னைத் திடப்படுத்தி, 
 
Dan 10:19 பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக ; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். 


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries