தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 3

3-0-0 கீழே குறிப்பிடுகிற வழி முறைகளின் மூலம்  தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால்  உலகத்தை ஆளப்போகும் ஆவிக்குரிய யூதர்களின் சந்ததியானவர்கள்  தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களை உடையவர்களாக வெளிப்படுகிறார்கள்:- 

3-1-0 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில் பங்கடைகிற புறஜாதிகளிலிருந்து:  தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற ஞான அர்த்தமுள்ள சந்ததியார்களில், சிலர் தங்கள் இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருக்கிற  முரட்டாட்டமும் கலகமுமுள்ள உங்கள் பிதாக்களுக்கு நீங்கள் ஒப்பாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Pro_30:11, Pro_30:17, Pro_20:20; Lev_20:9; Deu_21:20-21, Deu_27:16; Mat_15:4-6; Mar_7:10-13; Mat_6:22-23,

3-2-0 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில் பங்கடைகிற புறஜாதிகளிலிருந்து:  தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற ஞான அர்த்தமுள்ள சந்ததியார்களில், சிலர் தங்கள் இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருக்கிற  முரட்டாட்டமும் கலகமுமுள்ள உங்கள் பிதாக்களுக்கு நீங்கள் ஒப்பாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

1Sa_15:13-14; Job_33:9; Psa_36:2; Isa_65:5; Jer_2:22-24, Jer_2:35;

 Luk_11:39-40, Luk_16:15, Luk_18:11; 2Ti_3:5; Tit_1:15-16; 1Jo_1:8-10

 

3-3-0 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில் பங்கடைகிற புறஜாதிகளிலிருந்து:  தாங்களுடய  கண்கள் எத்தனை மேட்டிமையும், கண்களின்  இமைகள் எத்தனை நெறிப்புமானவைகளாக இருக்கிற  ஞான அர்த்தமுள்ள சந்ததியார்களில், சிலர் தங்கள் இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருக்கிற  முரட்டாட்டமும் கலகமுமுள்ள உங்கள் பிதாக்களுக்கு நீங்கள் ஒப்பாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Rom_9:29-33,Rom_10:3;Psa_118:22; Isa_8:14-15, Isa_28:16; Mat_21:42, Mat_21:44; 1Pe_2:7-8

3-4-0 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில் பங்கடைகிற புறஜாதிகளிலிருந்து, தேவனுடைய வார்த்தைகளை, ஆவியிலும், ஆத்துமாவிலும்,ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி  நித்திய ஜீவனுக்கு விழித்து எழுந்திருக்கிறவர்கள்: கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலிருந்து, பரிசுத்தஸ்தலத்திற்கு, ஆவிக்குரிய யூதர்களின் வரிசையிலே பிரவேசிக்கிறார்கள்:-  


3-4-1 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பதற்கு தினந்தோறும் பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் அன்றாடபலியை ஆசாரியர்கள் செலுத்த வேண்டும்:- 

முதலாம் உடன்படிக்கையாகிய நியாயப்பிரமாணத்தின் மூலம்  தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் எப்பொழுதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை தினந்தோறும் அன்றாட பலியாக  ஆசாரியர்கள் ஊற்ற வேண்டும் 

இரண்டாம் உடன்படிக்கையாகிய கிறிஸ்துவின் விசுவாசப் பிரமாணாத்தின் மூலம் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில்  இரட்சிப்பின் பாத்திரத்தின் மூலமாக அன்றாடபலியாகிய  கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு அலட்சியப்படுத்தாமல்,   எப்பொழுதும் மனந்திரும்பி நற்கிரியைகளுக்கு முன்னேறிச்செல்ல வேண்டும்.

3-4-2 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பதற்கு ஓய்வுநாள் தோறும் பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் ஓய்வுநாள் தகனபலியை ஆசாரியர்கள் செலுத்த வேண்டும்:- 

முதலாம் உடன்படிக்கையாகிய நியாயப்பிரமாணத்தின் மூலம்  தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின் மேல் பன்னிரண்டு அப்பங்களை சுத்தமான தூபவர்க்கம்போட்டு ஆசாரியர்கள் அடுக்கி வைக்க வேண்டும்.

இரண்டாம் உடன்படிக்கையாகிய கிறிஸ்துவின் விசுவாசப் பிரமாணாத்தின் மூலம் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில்  ஓய்வு நாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் ஓய்வுநாள் பிரமாணத்தை/ தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து  கலப்படமில்லாத வேதவார்த்தைகளைக் கொண்டு ஜனங்களுக்கு ஆசாரியர்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.


3-5-0 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பதற்கு தினந்தோறும் அன்றாட பலி, மற்றும் ஓய்வுநாள் தோறும் ஓய்வுநாள் தகனபலி, ஆகியவைகளின் பொருளை இரண்டாம் உடன்படிக்கையாகிய கிறிஸ்துவின் விசுவாசப் பிரமாணாத்தின் மூலம் பின்பற்றுகிறவர்கள்:  பரிசுத்த ஸ்தலத்திலிருந்து  மகா பரிசுத்தஸ்தலத்திற்கு ஆவிக்குரிய யூதர்களின் வரிசையிலே பிரவேசிக்கிறார்கள்:-  

3-5-1 முதலாம் கூடாரம் நிற்குமளவும் இரண்டாம் கூடாரமாகிய  மகா பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்:-

முதலாம் கூடாரமாகிய சரீரம் நிற்குமளவும், இரண்டாம் கூடாரமாகிய  ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.


முதலாம் கூடாரமாகிய பாவ சரீரத்தை  பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து  தேவனுக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறபடியால் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைகிறார்கள். 

மறுரூபமடைந்தவர்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணுகிறபோது இரண்டாம் கூடாரமாகிய  ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திற்கு வந்தடைகிறார்கள்  

முதலாம் கூடாரமாகிய பாவ சரீர அவயவங்களுடன்  பாவ மாம்சத்திலே   ஆராதனை செய்கிறவர்களுக்கு இரண்டாம் கூடாரமாகிய ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திலே இருக்கிற பலிபீடத்திற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் அதிகாரமில்லை. 

3-5-2 இரண்டாம் கூடாரமாகிய  ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திற்கு வந்தடைந்தவர்களூக்கு பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தை புசித்து வளர்சியடைய முடியும்:- 

இரண்டாம் கூடாரமாகிய ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திலே இருக்கிற தேவனுடைய வார்த்தைகள் ஒருவனுக்கு சமீபமாய் அவனுடைய  இருதயத்திலும் அவனுடைய    வாயிலும் இருக்கிறபோது, நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதையடைந்து ; பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவர்களாக வளர்ந்து முன்னேற முடியும்.   ( ரோமர் 10:8-10)  

எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களை ஒருவன் மறந்தால் அவன்  வலதுகையாகிய நீதியின் கிரியைகளை  மறந்துபோவான். ஒருவன் எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களை நினையாமலும், கர்த்தரின் வசனங்களை அவனுடைய  முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியாமல், அவன்  நாவு அவனுடைய  மேல் வாயோடு ஒட்டிக்கொள்ளுகிறது . (சங்கீதம்   137:5-6) 

3-5-3 இரண்டாம் கூடாரமாகிய  ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திற்கு வந்தடைந்தவர்கள்: கர்த்தருடைய சரீரத்தை  இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணுகிறார்கள்:-

தேவனுடைய வார்த்தையினாலும் ஆவியினாலும் மறுபடியும்  பிறந்தவர்கள், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அதிகாரங்களை   சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக; தேவனுடைய புதிய உடன்படிக்கையின்படி, முதலாங்கூடாரமாகிய தங்களுடைய பாவ சரீரத்தை, பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறபோது: தங்களுடைய இரண்டாந் திரைக்குள்ளே இருக்கிற கல்லான இருதயம், தேவனுடைய மாம்சமான இருதயமாக மறுரூபமடைந்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிறதின் மூலம்  புத்தியுள்ள ஆராதனை நடைபெறுகிறது. 

 

இவர்கள்,  இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரத்திலிருக்கிற மாம்சமான இருதயமாகிய   தேவனுடைய பலிபீடத்தில், ஆவி,ஆத்துமா,சரீரத்தில் ஐக்கியமாயிருந்து;   தேவனுடைய வார்த்தைகளின் உயிர்த்தெழுதளை நினைவுகூரும்படி, கர்த்தருடைய சரீரமாகிய வார்த்தைகளையும் இரத்தமாகிய நியாத்தீர்ப்பையும்  இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணுகிறார்கள்.

 

3-5-4 இரண்டாம் கூடாரமாகிய  ஆவி,ஆத்துமாவின் மகா பரிசுத்தஸ்தலத்திற்கு வந்தடைந்தவர்கள்: தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியங்களை இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணுகிறார்கள்:-

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர், ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசிக்க அபாத்திராக போனார்கள்; ஆனால் தேவனால்             முன் குறிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர் இயேசு கிறிஸ்து ராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, 

இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை பல ருசியுள்ள தேவ வார்த்தைகளின் தலைப்புகளாக புசித்து, அதன் சுவைகளை உணர்ந்து கொண்டபடியால், ஆவி, ஆத்துமாவில் மறுரூபமடைந்து, தங்களுக்கு கொடுத்த தேவ சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் ஜெயங்கொள்ளுகிறவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

அவர்கள் தங்களுக்கு வைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டு பரலோக இராஜ்ஜியத்தின் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும் மணவாளனாகிய கிறிஸ்துவுடன் தேவனுடைய இராஜ்ஜியத்தில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுகிறார்கள். 

 

3-6-1 தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியங்களை விருந்தாக இருதயத்தில் புசிக்கிறபோது, தங்களுடைய  வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும்; ஆகிலும் தேவனுடைய சத்தியமான வசனங்கள் தங்களுக்குச் சமீபமாய் வாயிலும் இருதயத்திலும் இருக்கிறபோது, தேனைப்போல மதுரமாயிருக்கிறது  

முதலாம் கூடாரமாகிய பாவ சரீர அவயவங்களுடன்  பாவ மாம்சத்தை    பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து தேவனுக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறவர்கள்: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு. 

இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று தங்களுடைய இருதய வாசற்படியின் கதவைத் திறந்து,  தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியங்களை விருந்தாக இருதயத்தில் புசிக்கிறபோது, தங்களுடைய  வயிற்றுக்குக் /சரீரத்தில்/ வாழ்கையில் கசப்பாயிருக்கும்;

ஆகிலும் தேவனுடைய சத்தியமான வசனங்கள் தங்களுக்குச் சமீபமாய் வாயிலும் இருதயத்திலும் இருக்கிறபோது, ஆவி,ஆத்துமாவில் தேவனுடைய நீதியின் வசனங்கள்    தேனைப்போல மதுரமாயிருக்கிறது  

இவர்கள், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களோடு ஐக்கியமாயிருந்து; இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து: தங்களுக்கு தேவன் பகிர்ந்து கொடுத்த, ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள்.

 Luk_22:19-20,Joh_6:48-52, Joh_6:53-58,1Co_5:7-8;1Co_10:15-18; 1Co_11:23-26,  Heb_9:8-10Heb_13:9-13; Rom_12:1-2,  

 

3-6-2 தேவனுடைய வார்த்தைகளினால் மாம்சமாக மாறினவர்கள்: மாம்சமாக மாறின, தேவனுடைய இருதயமாகிய  பலிபீடத்திலிருந்து; தேவனுடைய வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்:-

இரண்டாம் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரத்திலிருக்கிற மாம்சமான இருதயமாகிய   தேவனுடைய பலிபீடத்தில், ஆவி,ஆத்துமா,சரீரத்தில் ஐக்கியமாயிருந்து;  தேவனுடைய வார்த்தைகளின் உயிர்த்தெழுதளை நினைவுகூரும்படி புசித்த , கர்த்தருடைய சரீரமாகிய வார்த்தைகளையும்,

இரத்தமாகிய நியாத்தீர்ப்பையும், கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள்; அந்த வார்த்தைகளில் உள்ள ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்து, இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

 Psa_40:8; Jer_31:33; Eze_11:19, Eze_36:25-27; Heb_8:10, Heb_10:16, Joh_14:10-17, Joh_14:18-25, Joh_15:1-8, Joh_15:9-15,Joh_15:16-21; Joh_15:22-27; Joh_17:14-20, Joh_17:21-26;  


3-7-0 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற பொன்னாற்செய்த தூபகலசத்திறகும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டிக்கும், மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன:-

 

3-7-1 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    பொன்னாற்செய்த தூபகலசம் வைக்கப்பட்டிருக்கிறது.

3-7-2  இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

3-7-3 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கைப்  பெட்டியிலே உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. 

3-7-4  இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கைப்  பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது.,

3-7-5 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கைப்  பெட்டியிலே ஆரோனுடைய தளிர்த்த கோல் வைக்கப்பட்டிருக்கிறது.

3-7-6 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற பொன்னாற்செய்த தூபகலசத்திறகும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டிக்கும், மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன.

 

3-7-1 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    பொன்னாற்செய்த தூபகலசம் வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு, பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவர்களாக இருக்கிறபடியால்,

அந்த வார்த்தைகள் அவர்களுக்கு  சமீபமாய் அவர்கள்  வாயிலும்   இருதயத்திலும் இருந்து பொன்னாற்செய்த தூபகலசத்தின்  தூபவர்க்கம் போல வாயிலே தேனைப்போல மதுரமாயிருக்கிற  ஞான அர்த்தமுள்ள தேவனுடைய நீதியின் வசனங்கள்  வெளிப்படுகிறது.

3-7-2  இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற   உடன்படிக்கையின் பிரமாணம்,  முழுவதும் தேவனுடைய வார்த்தைகளினால் உருவாக்கப்பட்டு, தேவன் அவனவனுக்குத் அளந்து பகிர்ந்து கொடுத்த,  விசுவாச அளவுப் பிரமாணத்தின்படியே வெளிப்படுத்தப்படுகிறது. 

3-7-3 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கைப்  பெட்டியிலே உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கையின் பிரமாணத்தில் ,நியாயப்பிரமாண உடன்படிக்கையின்,   இரண்டு கற்பலகைகள் தொடர்புடைய ஆசீர்வாதங்களும் ,சாபங்களும்,   வெளிப்படுத்தப்படுகிறது.  

3-7-4  இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கைப்  பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது.,

இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற   உடன்படிக்கையின் பிரமாணம்,  முழுவதும் தேவனுடைய வார்த்தைகளினால் உருவாக்கப்பட்டு, தேவன் அவனவனுக்குத் அளந்து பகிர்ந்து கொடுத்த,  விசுவாச அளவுப் பிரமாணத்தின்படியே உள்ள  உடன்படிக்கையின் பிரமாணம்;  தொடர்புடைய தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளும் ,தேவனுடைய நீதியின் கிரியைகளும்,   வெளிப்படுத்தப்படுகிறது. 

3-7-5 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற உடன்படிக்கைப்  பெட்டியிலே ஆரோனுடைய தளிர்த்த கோல் வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    முழுவதும் தேவனுடைய வார்த்தைகளினால் உருவாக்கப்பட்டு, தேவன் அவனவனுக்குத் அளந்து பகிர்ந்து கொடுத்த,  விசுவாச அளவுப் பிரமாணத்தின்படியே உள்ள  உடன்படிக்கையின் பிரமாணம்;  தொடர்புடைய பரிசுத்த ஆவியானவரின் ஊழியர் அழைப்பின்  வரங்களும், தேவனுடைய நீதியின் கிரியைகளும்,  வெளிப்படுத்தப்படுகிறது.

 

3-7-6 இரண்டாம் கூடாரமாகிய மகா  பரிசுத்த ஸ்தலத்திலே/ ஆவி,ஆத்துமாவிலே,    இருக்கிற பொன்னாற்செய்த தூபகலசத்திற்கும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டிக்கும், மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன.

 

Gal 3:19  அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. 

Heb 2:1  ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். 

Heb 2:2  ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, 

Heb 2:3  முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், 

Heb 2:4  அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். 

Dan 12:1  உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். 

Dan 12:2  பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். 

Dan 12:3  ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். 

Dan 12:4  தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries